அப்போஸ்தலர்கள் 2 : 1 (IRVTA)
{பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவரின் வருகை} [PS] பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடிவந்திருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 2 (IRVTA)
அப்பொழுது பலத்தக் காற்று அடிக்கிறதுபோல, வானத்திலிருந்து திடீரென ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
அப்போஸ்தலர்கள் 2 : 3 (IRVTA)
அல்லாமலும் நெருப்புமயமான நாக்குகள்போல பிரிந்திருக்கும் நாக்குகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
அப்போஸ்தலர்கள் 2 : 4 (IRVTA)
அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத்தொடங்கினார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 5 (IRVTA)
வானத்தின்கீழே இருக்கிற எல்லா தேசத்திலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே தங்கியிருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 6 (IRVTA)
அந்த சத்தம் உண்டானபோது, அநேக மக்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் மொழியிலே அவர்கள் பேசுகிறதை கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 7 (IRVTA)
எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லோரும் கலிலேயர்கள் அல்லவா?
அப்போஸ்தலர்கள் 2 : 8 (IRVTA)
அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய தாய் மொழிகளிலே இவர்கள் பேசக்கேட்கிறோமே, இது எப்படி?
அப்போஸ்தலர்கள் 2 : 9 (IRVTA)
பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
அப்போஸ்தலர்கள் 2 : 10 (IRVTA)
பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே வருகைதரும் ரோமாபுரியாரும், யூதர்களும், யூதமார்க்கத்தை பின்பற்றுகிறவர்களும்,
அப்போஸ்தலர்கள் 2 : 11 (IRVTA)
கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய மொழிகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 12 (IRVTA)
எல்லோரும் பிரமித்து சந்தேகப்பட்டு, இது என்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 13 (IRVTA)
மற்றவர்களோ: இவர்கள் மதுபானம் அருந்தியிருக்கிறார்கள் என்று கேலிசெய்தார்கள். [PS]
அப்போஸ்தலர்கள் 2 : 14 (IRVTA)
{பேதுருவின் பிரசங்கம்} [PS] அப்பொழுது பேதுரு பதினொரு சீடர்களோடு நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாக: யூதர்களே, எருசலேமில் வசிக்கின்ற மக்களே, நீங்களெல்லோரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளைக் கேளுங்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 15 (IRVTA)
நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் மது அருந்தியவர்கள் அல்ல, பொழுதுவிடிந்து ஒன்பது மணியாக இருக்கிறதே.
அப்போஸ்தலர்கள் 2 : 16 (IRVTA)
தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நிறைவேறுகிறது. [QBR]
அப்போஸ்தலர்கள் 2 : 17 (IRVTA)
கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் [QBR] என் ஆவியைப் பொழிவேன், [QBR] அப்பொழுது உங்களுடைய குமாரர்களும் [QBR] உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; [QBR] உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்; [QBR] உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்; [QBR]
அப்போஸ்தலர்கள் 2 : 18 (IRVTA)
என்னுடைய ஊழியக்காரர்கள்மேலும், [QBR] என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்த நாட்களிலே என் ஆவியைப் பொழிவேன், [QBR] அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். [QBR]
அப்போஸ்தலர்கள் 2 : 19 (IRVTA)
அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், [QBR] கீழே பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். [QBR]
அப்போஸ்தலர்கள் 2 : 20 (IRVTA)
கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும்முன்னே சூரியன் இருளாகவும், [QBR] சந்திரன் இரத்தமாகவும் மாறும். [QBR]
அப்போஸ்தலர்கள் 2 : 21 (IRVTA)
அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ [QBR] அவன் இரட்சிக்கப்படுவான்’ என்று தேவன் உரைத்திருக்கிறார். [PE][PS]
அப்போஸ்தலர்கள் 2 : 22 (IRVTA)
“இஸ்ரவேலர்களே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்கு தெரிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த கிரியைகளையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
அப்போஸ்தலர்கள் 2 : 23 (IRVTA)
அப்படியிருந்தும், தேவன் நியமித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரர்களுடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 24 (IRVTA)
தேவன் அவருடைய மரணவேதனைகளின் கட்டுகளை நீக்கி, அவரை உயிரோடு எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாமலிருந்தது.
அப்போஸ்தலர்கள் 2 : 25 (IRVTA)
அவரைக்குறித்து தாவீது: [QBR] கர்த்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; [QBR] நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபக்கத்திலே இருக்கிறார்; [QBR]
அப்போஸ்தலர்கள் 2 : 26 (IRVTA)
அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, [QBR] என் நாக்கு களிகூர்ந்தது, [QBR] என் சரீரமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்; [QBR]
அப்போஸ்தலர்கள் 2 : 27 (IRVTA)
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், [QBR] உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; [QBR]
அப்போஸ்தலர்கள் 2 : 28 (IRVTA)
ஜீவவழிகளை எனக்குத் தெரியப்படுத்தினீர்; [QBR] உம்முடைய சமூகத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான். [PE][PS]
அப்போஸ்தலர்கள் 2 : 29 (IRVTA)
சகோதரர்களே, “கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களோடு தைரியமாகப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்தநாள்வரை நம்மிடத்திலிருக்கிறது.
அப்போஸ்தலர்கள் 2 : 30 (IRVTA)
அவன் தீர்க்கதரிசியாக இருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க உன் வம்சத்திலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன்” என்று தேவன் தனக்கு சத்தியம்பண்ணினதைத் தெரிந்தபடியால்,
அப்போஸ்தலர்கள் 2 : 31 (IRVTA)
அவன் [QBR] கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், [QBR] அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, [QBR] அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். [PE][PS]
அப்போஸ்தலர்கள் 2 : 32 (IRVTA)
இந்த இயேசுவை தேவன் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகளாக இருக்கிறோம்.
அப்போஸ்தலர்கள் 2 : 33 (IRVTA)
அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறவைகளையும் கேட்கிறவைகளையும் பொழிந்தருளினார். [QBR]
அப்போஸ்தலர்கள் 2 : 34 (IRVTA)
தாவீது பரலோகத்திற்கு இன்னும் எழுந்துபோகவில்லையே. [QBR] நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும், [QBR]
அப்போஸ்தலர்கள் 2 : 35 (IRVTA)
நீர் என் வலதுபக்கத்தில் உட்காரும் என்று [QBR] கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். [PE][PS]
அப்போஸ்தலர்கள் 2 : 36 (IRVTA)
ஆகவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள் என்றான்.
அப்போஸ்தலர்கள் 2 : 37 (IRVTA)
இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் பார்த்து: சகோதரர்களே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 38 (IRVTA)
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவீர்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 39 (IRVTA)
வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள அனைவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
அப்போஸ்தலர்கள் 2 : 40 (IRVTA)
இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த வம்சத்தை விட்டுவிலகி உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
அப்போஸ்தலர்கள் 2 : 41 (IRVTA)
அவனுடைய வார்த்தைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். [PS]
அப்போஸ்தலர்கள் 2 : 42 (IRVTA)
{விசுவாசிகளின் ஐக்கியம்} [PS] அவர்கள் அப்போஸ்தலர்களுடைய போதனைகளிலும், ஐக்கியத்திலும், அப்பம் புசித்தலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாகத் தரித்திருந்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 43 (IRVTA)
எல்லோருக்கும் பயமுண்டானது. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அதிசயங்களும் செய்யப்பட்டது.
அப்போஸ்தலர்கள் 2 : 44 (IRVTA)
விசுவாசிகள் எல்லோரும் ஒன்றாக இருந்து, எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 45 (IRVTA)
நிலங்களையும் சொத்துக்களையும்விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவைக்குத்தக்கதாக அவைகளில் எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
அப்போஸ்தலர்கள் 2 : 46 (IRVTA)
அவர்கள் ஒருமனப்பட்டவர்களாக தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்புசித்து மகிழ்ச்சியோடும் கபடம் இல்லாத இருதயத்தோடும் சாப்பிட்டு,
அப்போஸ்தலர்கள் 2 : 47 (IRVTA)
தேவனைத் துதித்து, மக்களெல்லோரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். மீட்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47

BG:

Opacity:

Color:


Size:


Font: