2 சாமுவேல் 23 : 1 (IRVTA)
{தாவீதின் கடைசி வார்த்தைகள்} [PS] தாவீதின் கடைசி வார்த்தைகள்: [QBR] “மேன்மையாக உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, [QBR] இஸ்ரவேலின் சங்கீதங்களை இனிமையாகப் பாடின [QBR] ஈசாயின் மகனான தாவீது என்னும் மனிதன் சொல்லுகிறது என்னவென்றால்; [QBR]
2 சாமுவேல் 23 : 2 (IRVTA)
யெகோவாவுடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; [QBR] அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது. [QBR]
2 சாமுவேல் 23 : 3 (IRVTA)
இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் [QBR] எனக்குச் சொல்லி உரைத்ததாவது: [QBR] நீதிபதியாக மனிதர்களை ஆட்சி செய்து, [QBR] தெய்வபயத்தோடு ஆளுகிறவர் இருப்பார். [QBR]
2 சாமுவேல் 23 : 4 (IRVTA)
அவர் காலையில் மேகம் இல்லாமல் உதித்து, [QBR] மழைக்குப்பின்பு தன்னுடைய வெளிச்சத்தினால் [QBR] புல்லை பூமியிலிருந்து முளைக்கச்செய்கிற [QBR] சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார். [QBR]
2 சாமுவேல் 23 : 5 (IRVTA)
என்னுடைய வீடு தேவனிடம் இப்படி இருக்காதோ? [QBR] அனைத்தும் தீர்மானித்திருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை [QBR] என்னுடன் அவர் செய்திருக்கிறார்; [QBR] ஆதலால் என்னுடைய எல்லா இரட்சிப்பும் [QBR] எல்லா வாஞ்சையும் பெருகச்செய்யாமல் இருப்பாரோ? [QBR]
2 சாமுவேல் 23 : 6 (IRVTA)
தீயவர்கள் அனைவரும், கையினால் பிடிக்கப்படமுடியாததாக [QBR] எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள். [QBR]
2 சாமுவேல் 23 : 7 (IRVTA)
அவைகளை ஒருவன் தொடப்போனால், [QBR] இரும்பாலான ஆயுதத்தையும் ஈட்டிப்பிடியையும் இறுகப் பிடித்துக்கொள்ளவேண்டும்; [QBR] அவைகள் இருக்கிற இடத்திலேயே அக்கினியால் முழுவதும் சுட்டெரிக்கப்படும்” என்றான். [PE][PS]
2 சாமுவேல் 23 : 8 (IRVTA)
தாவீதுக்கு இருந்த பலசாலிகளின் பெயர்கள்: தக்கெமோனியின் மகனான யோசேப்பாசெபெத் என்பவன் இராணுவ அதிகாரிகளின் தலைவன்; இவன் 800 பேரை ஒன்றாக வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரைச்சேர்த்தவன்.
2 சாமுவேல் 23 : 9 (IRVTA)
இவனுக்கு இரண்டாவது, அகோயின் மகனான தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர்கள் யுத்தத்திற்குக் கூடின இடத்திலே இஸ்ரவேல் மனிதர்கள் போகும்போது, தாவீதோடு இருந்து பெலிஸ்தர்களை சபித்த மூன்று பலசாலிகளில் ஒருவனாக இருந்தான்.
2 சாமுவேல் 23 : 10 (IRVTA)
இவன் எழுந்து தன்னுடைய கை சோர்ந்து, தன்னுடைய கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளும்வரை பெலிஸ்தர்களை வெட்டினான்; அன்றையதினம் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்; மக்கள் கொள்ளையிடுவதற்குமட்டும் அவனுக்குப் பின்சென்றார்கள்.
2 சாமுவேல் 23 : 11 (IRVTA)
இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் மகனான சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயிறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர்கள் ஏராளமாகக் கூடி, மக்கள் பெலிஸ்தர்களைக் கண்டு ஓடுகிறபோது,
2 சாமுவேல் 23 : 12 (IRVTA)
இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தர்களைக் கொன்றுபோட்டான்; அதனால் யெகோவா பெரிய இரட்சிப்பை நடத்தினார்.
2 சாமுவேல் 23 : 13 (IRVTA)
முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்று பேர்களும் அறுவடையின் நாளில் அதுல்லாம் கெபியிலே தாவீதிடம் போயிருந்தார்கள்; பெலிஸ்தர்களின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே முகாமிட்டபோது,
2 சாமுவேல் 23 : 14 (IRVTA)
தாவீது பாதுகாப்பான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தர்களின் முகாம் பெத்லெகேமிலே இருந்தது.
2 சாமுவேல் 23 : 15 (IRVTA)
தாவீது பெத்லெகேமின் நுழைவுவாயிலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆசைகொண்டு: என்னுடைய தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
2 சாமுவேல் 23 : 16 (IRVTA)
அப்பொழுது இந்த மூன்று பெலசாலிகளும் பெலிஸ்தர்களின் முகாமில் துணிந்து புகுந்துபோய், பெத்லெகேமின் நுழைவுவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதிடம் கொண்டு வந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனம் இல்லாமல் அதைக் யெகோவாவெக்கென்று ஊற்றிப்போட்டு:
2 சாமுவேல் 23 : 17 (IRVTA)
யெகோவாவே, தங்கள் உயிரை பொருட்டாக எண்ணாமல் போய்வந்த அந்த மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாக இருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனம் இல்லாமலிருந்தான்; இப்படி இந்த மூன்று பெலசாலிகளும் செய்தார்கள்.
2 சாமுவேல் 23 : 18 (IRVTA)
யோவாபின் சகோதரனும் செருயாவின் மகனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் முதன்மையானவன்; அவன் தன்னுடைய ஈட்டியை ஓங்கி 300 பேரைக் கொன்றதால், இந்த மூன்றுபேர்களில் பெயர்பெற்றவனானான்.
2 சாமுவேல் 23 : 19 (IRVTA)
இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாக இருந்ததால் அல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமமானவன் அல்ல.
2 சாமுவேல் 23 : 20 (IRVTA)
பலசாலியான யோய்தாவின் மகனும் கப்செயேல் ஊரைச்சேர்ந்தவனுமான பெனாயாவும் செயல்களில் வல்லவனாக இருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலிமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைக்காலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான்.
2 சாமுவேல் 23 : 21 (IRVTA)
அவன் பயங்கர உயரமுள்ள ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டி இருக்கும்போது, இவன் ஒரு தடியைப்பிடித்து, அவனிடம் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அவன் ஈட்டியாலே அவனைக் கொன்றுபோட்டான்.
2 சாமுவேல் 23 : 22 (IRVTA)
இவைகளை யோய்தாவின் மகனான பெனாயா செய்தபடியால், மூன்று பலசாலிகளுக்குள்ளே புகழ்பெற்றவனாக இருந்தான்.
2 சாமுவேல் 23 : 23 (IRVTA)
30 பேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான். [PE][PS]
2 சாமுவேல் 23 : 24 (IRVTA)
யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற 30 பேர்களில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லகேம் ஊரைச்சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,
2 சாமுவேல் 23 : 25 (IRVTA)
ஆரோதியனான சம்மா, ஆரோதியனான எலிக்கா,
2 சாமுவேல் 23 : 26 (IRVTA)
பல்தியனான ஏலெஸ், இக்கேசின் மகனான ஈரா என்னும் தெக்கோவியன்.
2 சாமுவேல் 23 : 27 (IRVTA)
ஆனதோத்தியனான அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி,
2 சாமுவேல் 23 : 28 (IRVTA)
அகோகியனான சல்மோன், நெத்தோபாத்தியனான மகராயி,
2 சாமுவேல் 23 : 29 (IRVTA)
பானாவின் மகனான ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் வம்சத்தார்களின் கிபியா ஊரைச்சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாயி,
2 சாமுவேல் 23 : 30 (IRVTA)
பிரத்தோனியனான பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானான ஈத்தாயி,
2 சாமுவேல் 23 : 31 (IRVTA)
அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனான அஸ்மாவேத்,
2 சாமுவேல் 23 : 32 (IRVTA)
சால்போனியனான ஏலியாபா, யாசேனின் மகன்களில் யோனத்தான் என்பவன்.
2 சாமுவேல் 23 : 33 (IRVTA)
ஆராரியனான சம்மா, சாராரின் மகனான அகியாம் என்னும் ஆராரியன்,
2 சாமுவேல் 23 : 34 (IRVTA)
மாகாத்தியனின் மகனான அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனான அகித்தோப்பேலின் மகன் எலியாம் என்பவன்.
2 சாமுவேல் 23 : 35 (IRVTA)
கர்மேலியனான எஸ்ராயி, அர்பியனான பாராயி,
2 சாமுவேல் 23 : 36 (IRVTA)
சோபா ஊரைச்சேர்ந்த நாத்தானின் மகன் ஈகால், காத்தியனான பானி,
2 சாமுவேல் 23 : 37 (IRVTA)
அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனான யோவாபின் ஆயுதம் ஏந்திய பெரோத்தியனான நகராய்,
2 சாமுவேல் 23 : 38 (IRVTA)
இத்ரியனான ஈரா, இத்ரியனான காரேப்,
2 சாமுவேல் 23 : 39 (IRVTA)
ஏத்தியனான உரியா என்பவர்களே; ஆக 37 பேர். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39

BG:

Opacity:

Color:


Size:


Font: