சகரியா 1 : 1 (ERVTA)
கர்த்தரிடமிருந்து பெரகியாவின் மகன் சகரியாவுக்கு ஒரு செய்தி வந்தது. இது தரியு பெர்சியாவை அரசாண்ட இரண்டாம் ஆண்டு எட்டாம் மாதம். (சகரியா பெரகியாவின் மகன். பெரகியா தீர்க்கதரிசியான இத்தோவின் மகன்) இதுதான் அந்த செய்தி.
சகரியா 1 : 2 (ERVTA)
கர்த்தர் உங்களது முற்பிதாக்கள் மேல் மிகவும் கோபங்கொண்டவரானார்.
சகரியா 1 : 3 (ERVTA)
நீங்கள் இவற்றை ஜனங்களிடம் சொல்லவேண்டும். கர்த்தர், "என்னிடம் திரும்பி வாருங்கள். நான் உங்களிடம் திரும்பி வருவேன்" என்கிறார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
சகரியா 1 : 4 (ERVTA)
[This verse may not be a part of this translation]
சகரியா 1 : 5 (ERVTA)
கர்த்தர், "உங்கள் முற்பிதாக்கள் போய்விட்டனர். அந்தத் தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் வாழவில்லை.
சகரியா 1 : 6 (ERVTA)
[This verse may not be a part of this translation]
சகரியா 1 : 7 (ERVTA)
தரியு அரசாண்ட இரண்டாம் ஆண்டு சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்து நாலாந் தேதியிலே கர்த்தரிடமிருந்து சகரியாவுக்கு இன்னொரு செய்தி வந்தது. (தீர்க்கதரிசி இத்தோவின் மகன் பெரகியா. இவனது மகன் சகரியா.) இதுதான் செய்தி.
சகரியா 1 : 8 (ERVTA)
இரவில், நான் ஒரு மனிதன் சிவப்புக் குதிரையில் ஏறி வருவதைப் பார்த்தேன். அவன் பள்ளத்தாக்கில் இருந்த நறுமணப் புதருக்குள் செடிகளுக்கிடையே நின்றான். அவனுக்குப் பின் சிவப்பும், மங்கின நிறமும், வெண்மையுமான குதிரைகள் நின்றன.
சகரியா 1 : 9 (ERVTA)
நான், "ஐயா இந்தக் குதிரைகள் எதற்காக?" என்று கேட்டேன். பிறகு என்னிடம் பேசின தேவதூதன், "இந்தக் குதிரைகள் எதற்காக உள்ளன என்பதை நான் உனக்குக் காட்டுவேன்" என்றான்.
சகரியா 1 : 10 (ERVTA)
பிறகு புதருக்குள் நின்ற அந்த மனிதன் "கர்த்தர் இந்தக் குதிரைகளைப் பூமியில் அங்கும் இங்கும் போவதற்காக அனுப்பினார்" என்றான்.
சகரியா 1 : 11 (ERVTA)
அதன் பிறகு நறுமணப் புதருக்குள் நின்ற கர்த்தருடைய தூதனிடத்தில் குதிரைகள், "நாங்கள் பூமி முழுதும் சுற்றித்திரிந்தோம், எல்லாம் அமைதியாக இருக்கிறது" என்றன.
சகரியா 1 : 12 (ERVTA)
பின்னர் கர்த்ருடைய தூதன், "கர்த்தாவே, நீர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு எருசலேமையும் யூதாவின் நகரங்களையும் ஆறுதல்படுத்தாமலிருப்பீர்? எழுபது ஆண்டுகளாக இந்நகரங்களின் மேல் நீர் உமது கோபத்தைக் காட்டினீர்" என்றான்.
சகரியா 1 : 13 (ERVTA)
பின்னர் கர்த்தர், என்னோடு பேசிக்கொண்டிருந்த தேவதூதனிடம், நல்ல ஆறுதலான வார்த்தைகளைப் பேசினார்.
சகரியா 1 : 14 (ERVTA)
பின்னர் தூதன் ஜனங்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும் என்று சொன்னான். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: "நான் எருசலேம் மற்றும் சீயோன் மீது உறுதியான அன்புகொண்டிருந்தேன்.
சகரியா 1 : 15 (ERVTA)
நான், தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று எண்ணும் நாடுகள் மீது மிகவும் கோபமாக இருக்கிறேன். நான் கொஞ்சம் கோபம் கொண்டிருந்தபோது என் ஜனங்களைத் தண்டிக்க அந்த நாடுகளைப் பயன்படுத்தினேன். ஆனால் அந்த நாடுகள் பெருஞ்சேதத்திற்குக் காரணமாயின."
சகரியா 1 : 16 (ERVTA)
எனவே கர்த்தர் கூறுகிறார்: "நான் எருசலேமிற்குத் திரும்பி வருவேன். அவளுக்கு ஆறுதல் கூறுவேன்." சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: "எருசலேமை மீண்டும் கட்டுவேன். எனது வீடு அங்கே கட்டப்படும்."
சகரியா 1 : 17 (ERVTA)
தூதன் கூட, "எனது நகரங்கள் மீண்டும் வளம்பெறும். நான் சீயோனுக்கு ஆறுதல் அளிப்பேன். நான் எனது சிறப்புக்குரிய நகரமாக எருசலேமைத் தேர்ந்தெடுப்பேன்" என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்" என்றான்.
சகரியா 1 : 18 (ERVTA)
பிறகு நான் மேலே பார்த்தேன். நான்கு கொம்புகளைக் கண்டேன்.
சகரியா 1 : 19 (ERVTA)
பிறகு நான் என்னோடு பேசிக்கொண்டிருந்த தூதனிடம், "இக்கொம்புகளின் அர்த்தம் என்ன?" என்று கேட்டேன். அவர், "இக்கொம்புகள் இஸ்ரவேல், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை அன்னிய நாடுகளுக்குத் துரத்தின" என்றார்.
சகரியா 1 : 20 (ERVTA)
பிறகு கர்த்தர் நான்கு தொழிலாளிகளைக் காட்டினார்.
சகரியா 1 : 21 (ERVTA)
நான் அவரிடம், "இந்த நான்கு ஆட்களும் என்ன செய்ய வந்திருக்கிறார்கள்?" எனக் கேட்டேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

BG:

Opacity:

Color:


Size:


Font: