வெளிபடுத்தல் 15 : 1 (ERVTA)
{இறுதி வாதைகள்} [PS] பரலோகத்தில் நான் இன்னொரு அற்புதத்தைப் பார்த்தேன். அது பெரிதும் ஆச்சரியமுமானது. ஏழு தேவ தூதர்கள் ஏழு துன்பங்களைக் கொண்டு வந்தார்கள். இவை தான் இறுதியான துன்பங்கள். ஏனென்றால் இதற்குப் பிறகு தேவனுடைய கோபம் முடிந்துவிடுகிறது. [PE][PS]
வெளிபடுத்தல் 15 : 2 (ERVTA)
நெருப்பு கலந்த கண்ணாடிக் கடல் போன்ற ஒன்றைக் கண்டேன். மிருகத்தையும், அதன் உருவத்தையும் அதன் எண்ணையும் வென்ற மக்கள் அனைவரும் கடலருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் தேவன் கொடுத்த இசைக் கருவிகள் இருந்தன.
வெளிபடுத்தல் 15 : 3 (ERVTA)
அவர்கள் தேவனுடைய ஊழியராகிய மோசேயின் பாடலையும், ஆட்டுக்குட்டியானவரின் பாடலையும் பாடினர்: “சர்வ வல்லமையுள்ள தேவனே! [QBR2] நீர் செய்தவை எல்லாம் பெரியவை, [QBR] அற்புதமானவை. நாடுகளின் அரசரே! [QBR2] உமது வழிகளெல்லாம் நீதியும் உண்மையுமானவை. [QBR]
வெளிபடுத்தல் 15 : 4 (ERVTA)
கர்த்தாவே! மக்கள் அனைவரும் உமக்கு அஞ்சுவார்கள். [QBR] எல்லாரும் உம் பெயரைப் போற்றுவார்கள். [QBR2] நீர் ஒருவரே பரிசுத்தமானவர் [QBR] எல்லா மக்களும் உம் முன் வந்து உம்மை வழிபடுவார்கள். [QBR2] ஏனெனில் நீர் நீதியானவற்றையே செய்கிறீர் என்பது தெளிவு.” [PS]
வெளிபடுத்தல் 15 : 5 (ERVTA)
இதற்குப் பிறகு பரலோகத்தில் நான் ஆலயத்தைப் பார்த்தேன். (இது தேவன் இருக்கிற பரிசுத்தமான இடம்) அந்த ஆலயம் திறக்கப்பட்டது.
வெளிபடுத்தல் 15 : 6 (ERVTA)
ஏழு துன்பங்களையுடைய ஏழு தேவதூதர்களும் ஆலயத்திலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் பளபளக்கிற சுத்தமான மெல்லிய ஆடையை அணிந்திருந்தனர். அவர்கள் தம் மார்பைச் சுற்றி பொன்னால் ஆன கச்சைகளைக் கட்டியிருந்தார்கள்.
வெளிபடுத்தல் 15 : 7 (ERVTA)
நான்கு ஜீவன்களுள் ஒன்று ஏழு தேவ தூதர்களுக்கும் ஏழு பொற்கிண்ணங்களைக் கொடுத்தது. அக்கிண்ணங்கள் சதாகாலங்களிலும் ஜீவிக்கிற தேவனுடைய கோபத்தால் நிறைந்திருந்தன.
வெளிபடுத்தல் 15 : 8 (ERVTA)
தேவனுடைய மகிமையிலிருந்தும் வல்லமையிலிருந்தும் வருகிற புகையால் ஆலயம் நிறைந்துவிட்டது. ஏழு தேவதூதர்களின் ஏழு துன்பங்களும் முடிகிறவரையில் எவராலும் ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை. [PE]

1 2 3 4 5 6 7 8

BG:

Opacity:

Color:


Size:


Font: