சங்கீதம் 92 : 1 (ERVTA)
மிக உன்னதமான தேவனாகிய கர்த்தரைத் துதிப்பது நல்லது. உமது நாமத்தைத் துதிப்பது நல்லது.
சங்கீதம் 92 : 2 (ERVTA)
காலையில் உமது அன்பைப்பற்றியும் இரவில் உமது நம்பிக்கையைப் பற்றியும் பாடுவது நல்லது.
சங்கீதம் 92 : 3 (ERVTA)
தேவனே பத்து நரம்பு வாத்தியங்களாலும், வீணையினாலும், தம்புருவினாலும், இசை மீட்டி உம்மைப் பாடுவது நல்லது.
சங்கீதம் 92 : 4 (ERVTA)
கர்த்தாவே, நீர் செய்த காரியங்களால் எங்களை உண்மையாகவே மகிழ்ச்சிப்படுத்துகிறீர். அக் காரியங்களைக் குறித்து நாங்கள் சந்தோஷமாகப் பாடுவோம்.
சங்கீதம் 92 : 5 (ERVTA)
கர்த்தாவே, நீர் மேன்மையான காரியங்களைச் செய்தீர். உமது எண்ணங்களை எங்களால் புரிந்துகொள்ள முடியாது.
சங்கீதம் 92 : 6 (ERVTA)
உம்மோடு ஒப்பிடுகையில் ஜனங்கள் மூடமிருகங்களைப்போல் இருக்கிறார்கள். நாங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத மூடர்களைப்போல் இருக்கிறோம்.
சங்கீதம் 92 : 7 (ERVTA)
களைகளைப்போல் தீயோர் வாழ்ந்து மறைகிறார்கள். அவர்கள் செய்யும் பயனற்ற காரியங்களே என்றென்றும் அழிக்கப்படும்.
சங்கீதம் 92 : 8 (ERVTA)
ஆனால் தேவனே, நீர் என்றென்றும் மகிமைப்படுத்தப்படுவீர்.
சங்கீதம் 92 : 9 (ERVTA)
கர்த்தாவே, உமது பகைவர்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள். தீயவை செய்யும் எல்லா ஜனங்களும் அழிக்கப்படுவார்கள்.
சங்கீதம் 92 : 10 (ERVTA)
ஆனால் நீர் என்னைப் பெலனுடையவனாகச் செய்கிறீர். பலத்த கொம்புகளையுடைய ஆட்டைப் போலாவேன். விசேஷ வேலைக்காக நீர் என்னைத் தேர்ந்தெடுத்தீர். உமது புது எண்ணெயை என்மீது ஊற்றினீர்.
சங்கீதம் 92 : 11 (ERVTA)
என் பகைவர்களை என்னைச் சுற்றிலும் காண்கிறேன். என்னைத் தாக்க வருகிற பெருங்காளைகளைப் போல அவர்கள் காணப்படுகிறார்கள். அவர்கள் என்னைக் குறித்துச் சொல்பவற்றை நான் கேட்கிறேன்.
சங்கீதம் 92 : 12 (ERVTA)
[This verse may not be a part of this translation]
சங்கீதம் 92 : 13 (ERVTA)
[This verse may not be a part of this translation]
சங்கீதம் 92 : 14 (ERVTA)
வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள். அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள்.
சங்கீதம் 92 : 15 (ERVTA)
கர்த்தர் நல்லவர் என்பதை எல்லோருக்கும் காண்பிப்பார்கள். அவர் என் பாறை அவர் ஒருபோதும் தீமை செய்வதில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15

BG:

Opacity:

Color:


Size:


Font: