சங்கீதம் 62 : 1 (ERVTA)
என்ன நடந்தாலும் பரவாயில்லை என் ஆத்துமா பொறுமையோடு தேவன் என்னை மீட்கும்படி காத்திருக்கிறது. என் இரட்சிப்பு அவரிடத்திலிருந்து மட்டுமே வருகிறது.
சங்கீதம் 62 : 2 (ERVTA)
எனக்கு அநேக விரோதிகள் இருக்கிறார்கள். ஆனால் தேவனே எனக்கு அரணாக இருக்கிறார். தேவன் என்னைக் காப்பாற்றுகிறார். உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம். பெரும் படைகளும் என்னைத் தோற்கடிக்க இயலாது.
சங்கீதம் 62 : 3 (ERVTA)
எத்தனை காலம் என்னைத் தாக்குவீர். நானோ சாய்ந்த சுவரைப் போலவும், வீழும் நிலையிலுள்ள வேலியைப் போலவும் இருக்கிறேன்.
சங்கீதம் 62 : 4 (ERVTA)
மேன்மையான என் நிலையை எண்ணி அந்த ஜனங்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் என்னைக் குறித்துப் பொய்களைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். வெளிப்படையாக அவர்கள் என்னைப்பற்றி நல்லவற்றைப் பேசினாலும் இரகசியமாக என்னை சபிக்கிறார்கள்.
சங்கீதம் 62 : 5 (ERVTA)
தேவன் என்னை மீட்க வேண்டுமென்று பொறுமையோடு என் ஆத்துமா காத்திருக்கிறது. தேவன் ஒருவரே என் நம்பிக்கை.
சங்கீதம் 62 : 6 (ERVTA)
தேவனே என் அரண். தேவன் என்னைக் காப்பாற்றுகிறார். உயரமான மலைகளில் தேவனே என் பாதுகாவலான இடம்.
சங்கீதம் 62 : 7 (ERVTA)
என் பெருமையும் வெற்றியும் தேவனிடமிருந்து வருகிறது. அவர் எனக்குப் பலமான அரண். தேவன் எனக்குப் பாதுகாவலான இடம்.
சங்கீதம் 62 : 8 (ERVTA)
ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்! தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்! தேவனே நமக்குப் பாதுகாவலான இடம்.
சங்கீதம் 62 : 9 (ERVTA)
மனிதர்கள்உண்மையாகவே உதவ முடியாது. உண்மையான உதவிக்கு நீங்கள் அவர்களை நம்பமுடியாது. தேவனோடு ஒப்பிடுகையில் அவர்கள் லேசான காற்றைப்போல் ஒன்றுமில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
சங்கீதம் 62 : 10 (ERVTA)
கட்டாயமாகப் பொருளைப் பறிக்கும் வல்லமையை நம்பாதீர்கள். திருடுவதால் பொருளைப்பெற முடியுமென நினைக்காதீர்கள். நீங்கள் செல்வந்தரானால் அச்செல்வங்கள் உங்களுக்கு உதவுமென நம்பாதீர்கள்.
சங்கீதம் 62 : 11 (ERVTA)
நீங்கள் உண்மையிலேயே சார்ந்து நிற்கவல்ல பொருள் ஒன்று உண்டு என்று தேவன் சொல்கிறார். வல்லமை தேவனிடமிருந்து வருகிறது.
சங்கீதம் 62 : 12 (ERVTA)
என் ஆண்டவரே, உமது அன்பு உண்மையானது. ஒருவன் செய்யும் காரியங்களுக் கேற்ப நீர் மனிதனைத் தண்டிக்கவோ, அவனுக்கு உதவவோ செய்கிறீர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

BG:

Opacity:

Color:


Size:


Font: