சங்கீதம் 51 : 1 (ERVTA)
தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும். என் பாவங்களை அழித்துவிடும்.
சங்கீதம் 51 : 2 (ERVTA)
தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும். என் பாவங்களைக் கழுவிவிடும். என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்!
சங்கீதம் 51 : 3 (ERVTA)
நான் பாவம் செய்தேனென அறிவேன். அப்பாவங்களை எப்போதும் நான் காண்கிறேன்.
சங்கீதம் 51 : 4 (ERVTA)
நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன். தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன். நான் தவறு செய்தவன் என் பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக் கையிடுகிறேன். உமது முடிவுகள் நியாயமா னைவை.
சங்கீதம் 51 : 5 (ERVTA)
நான் பாவத்தில் பிறந்தேன். என் தாய் என்னைப் பாவத்தில் கருவுற்றாள்.
சங்கீதம் 51 : 6 (ERVTA)
தேவனே! நான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக விரும்பினால் உண்மையான ஞானத்தை என்னுள்ளே வையும்.
சங்கீதம் 51 : 7 (ERVTA)
ஈசோப் செடியால் என்னைத் தூய்மையாக்கும். பனியைக் காட்டிலும் நான் வெண்மையாகும் வரை என்னைக் கழுவும்!
சங்கீதம் 51 : 8 (ERVTA)
என்னை மகிழ்ச்சியாக்கும். மீண்டும் மகிழ்ச்சி யாக இருக்கும் வகையைக் கூறும். நீர் நொறுக் கின என் எலும்புகள் மீண்டும் மகிழ்ச்சியடை யட்டும்.
சங்கீதம் 51 : 9 (ERVTA)
எனது பாவங்களைப் பாராதேயும்! அவற்றை யெல்லாம் நீக்கிவிடும்
சங்கீதம் 51 : 10 (ERVTA)
தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத் தைச் சிருஷ்டியும்! எனது ஆவியை மீண்டும் பலமாக்கும்.
சங்கீதம் 51 : 11 (ERVTA)
என்னைத் தூரத் தள்ளாதேயும்! என்னிடமி ருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடா தேயும்!
சங்கீதம் 51 : 12 (ERVTA)
உமது உதவி என்னை மகிழ்விக்கிறது! மீண்டும் அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடும். எனது ஆவியைப் பலப்படுத்தி உமக்குக் கீழ்ப் படிவதற்குத் தயாராக இருக்கச்செய்யும்.
சங்கீதம் 51 : 13 (ERVTA)
நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக் குப் போதிப்பேன், அவர்கள் உம்மிடம் திரும்பு வார்கள்.
சங்கீதம் 51 : 14 (ERVTA)
தேவனே, என்னைக் கொலைக் குற்றவாளியாக் காதேயும். என் தேவனே, நீரே எனது மீட்பர். நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் பாடச் செய்யும்.
சங்கீதம் 51 : 15 (ERVTA)
என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்!
சங்கீதம் 51 : 16 (ERVTA)
நீர் பலிகளை விரும்பவில்லை. நீர் விரும்பாத பலிகளை நான் கொடுக்கத் தேவையில்லை!
சங்கீதம் 51 : 17 (ERVTA)
தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே. தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருத யத்தோடு உம்மிடம்வருபவரை நீர் தள்ளிவிட மாட்டீர்.
சங்கீதம் 51 : 18 (ERVTA)
தேவனே, சீயோனிடம் நல்லவராகவும் இரக்க முடையவராகவும் இரும். எருசலேமின் சுவர் களை எழுப்பும்.
சங்கீதம் 51 : 19 (ERVTA)
அப்போது நீர் நல்ல பலிகளையும் தகன பலி முழுவதையும் ஏற்று மகிழமுடியும். ஜனங்கள் மீண்டும் உமது பலிபீடத்தில் காளைகளைப் பலியிடுவார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19

BG:

Opacity:

Color:


Size:


Font: