லூக்கா 1 : 1 (ERVTA)
அன்பான தெயோப்பிலுவே, நம்மிடையே நடந்த பல நிகழ்ச்சிகளின் வரலாற்றைத் தொகுத்தளிக்க பலர் முயற்சி செய்தனர்.
லூக்கா 1 : 2 (ERVTA)
வேறு சில மக்களிடமிருந்து நாம் கேட்டறிந்த செய்திகளையே அவர்கள் எழுதியிருந்தார்கள். இம்மக்கள் தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கண்டவர்களும், தேவனுடைய நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தவர்களும் ஆவார்கள்.
லூக்கா 1 : 3 (ERVTA)
மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, துவக்கத்திலிருந்தே எல்லாவற்றையும் நானும் கவனமாகக் கற்று அறிந்தேன். அவற்றை உங்களுக்காக எழுதவேண்டும் என்று எண்ணினேன். எனவே அவற்றை ஒரு நூலில் முறைப்படுத்தி எழுதினேன்.
லூக்கா 1 : 4 (ERVTA)
உங்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிற அனைத்தும் உண்மையே என்பதை நீங்கள் அறியும்பொருட்டு இவற்றை எழுதுகிறேன்.
லூக்கா 1 : 5 (ERVTA)
ஏரோது யூதேயாவை ஆண்ட காலத்தில் சகரியா என்னும் ஆசாரியன் வாழ்ந்து வந்தான். சகரியா அபியாவின் பிரிவினரைச் சார்ந்தவன். ஆரோனின் குடும்பத்தாரைச் சார்ந்தவள் சகரியாவின் மனைவி. அவள் பெயர் எலிசபெத்.
லூக்கா 1 : 6 (ERVTA)
தேவனுக்கு முன்பாக சகரியாவும், எலிசபெத்தும் உண்மையாகவே நல்லவர்களாக வாழ்ந்தார்கள். தேவன் கட்டளையிட்டவற்றையும், மக்கள் செய்யும்படியாகக் கூறியவற்றையும் அவர்கள் செய்து வந்தனர். அவர்கள் குற்றமற்றவர்களாகக் காணப்பட்டனர்.
லூக்கா 1 : 7 (ERVTA)
ஆனால், சகரியாவுக்கும், எலிசபெத்துக்கும் குழந்தைகள் இல்லை. எலிசபெத் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இல்லை. அதோடு இருவரும் முதியோராக இருந்தனர்.
லூக்கா 1 : 8 (ERVTA)
தன் மக்களுக்காக தேவனுக்கு முன்னர் ஒரு ஆசாரியனாக சகரியா பணியாற்றி வந்தான். தேவனின் பணியை அவனது பிரிவினர் செய்ய வேண்டிய காலம் அது.
லூக்கா 1 : 9 (ERVTA)
நறுமணப் புகையைக் காட்டுவதற்காக ஆசாரியர் தங்களுக்குள் ஒருவரை எப்போதும் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். சகரியா அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். எனவே சகரியா தேவாலயத்திற்குள் நறுமணப்புகை காட்டுவதற்காகச் சென்றான்.
லூக்கா 1 : 10 (ERVTA)
ஏராளமான மக்கள் வெளியே இருந்தனர். நறுமணப்புகை காட்டும்போது அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
லூக்கா 1 : 11 (ERVTA)
அப் போது புகை காட்டும் மேசையின் வலது புறத்தில் தேவதூதன் சகரியாவுக்கு முன்பாக வந்து நின்றான்.
லூக்கா 1 : 12 (ERVTA)
தூதனைப் பார்த்தபோது சகரியா குழப்பமும் பயமும் அடைந்தான்.
லூக்கா 1 : 13 (ERVTA)
ஆனால் தூதன் அவனைப் பார்த்து, சகரியாவே, பயப்படாதே. உனது பிரார்த் தனையை தேவன் கேட்டார். உனது மனைவியாகிய எலிசபெத் ஒர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக.
லூக்கா 1 : 14 (ERVTA)
நீ மிகவும் சந்தோஷமாக இருப்பாய். அவனது பிறப்பால் பல மக்கள் மகிழ்ச்சி அடைவர்.
லூக்கா 1 : 15 (ERVTA)
கர்த்தருக்காகப் பெரிய மனிதனாக யோவான் விளங்குவான். அவன் திராட்சை இரசமோ, மதுபானமோ பருகுவதில்லை. பிறக்கிறபோதே பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக யோவான் காணப்படுவான்.
லூக்கா 1 : 16 (ERVTA)
நம் தேவனாகிய கர்த்தரிடம் பல யூதர்கள் திரும்புவதற்கு யோவான் உதவுபவன்.
லூக்கா 1 : 17 (ERVTA)
கர்த்தருக்கு முன்பாக யோவான் முன்னோடியாகச் செல்வான். எலியாவைப் போல் யோவானும் வல்லமை வாய்ந்தவனாக இருப்பான். எலியாவின் ஆவியை உடையவனாக அவன் இருப்பான். தந்தையருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே அமைதி நிலவும்படியாகச் செய்வான். பல மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்களை எல்லாம் மீண்டும் சரியானதென்று மக்கள் எண்ணவேண்டிய பாதைக்கு யோவான் அழைத்து வருவான். கர்த்தரின் வருகைக்கு மக்களை யோவான் தயார் செய்வான் என்றான்.
லூக்கா 1 : 18 (ERVTA)
சகரியா தூதனை நோக்கி, நீங்கள் சொல்வது உண்மையென்று நான் எவ்வாறு அறிய முடியும்? நான் வயது முதிர்ந்தவன். என் மனைவியும் வயதானவள் என்றான்.
லூக்கா 1 : 19 (ERVTA)
தூதன் அவனுக்குப் பதிலாக, நான் காபிரியேல். தேவனுக்கு முன்பாக நிற்பவன். உன்னிடம் பேசவும், இந்த நல்ல செய்தியை உன்னிடம் எடுத்துரைக்கவும் தேவன் என்னை அனுப்பினார்.
லூக்கா 1 : 20 (ERVTA)
இப்போது கேட்பாயாக! இந்தக் காரியங்கள் நடக்கும் நாள் வரைக்கும் நீ பேச முடியாதிருப்பாய். உனது பேசும் சக்தியை நீ இழப்பாய், ஏன்? நான் கூறியதை நீ நம்பாததாலேயே இப்படி ஆகும். ஆனால் இவை அனைத்தும் அதனதன் சரியான சமயத்தில் உண்மையாகவே நடக்கும் என்றான்.
லூக்கா 1 : 21 (ERVTA)
வெளியே சகரியாவுக்காக மக்கள் காத்திருந்தனர். அவன் ஆலயத்தின் உள்ளே வெகு நேரம் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
லூக்கா 1 : 22 (ERVTA)
அப்போது சகரியா வெளியே வந்தான். ஆனால் அவர்களோடு பேச முடியவில்லை. அவன் ஆலயத்திற்குள் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர். சகரியாவால் பேச முடியவில்லை. மக்களுக்குச் சைகைகளையே காட்ட முடிந்தது.
லூக்கா 1 : 23 (ERVTA)
சகரியா, ஆலயப் பணி முடிந்ததும் தன் வீட்டுக்குச் சென்றான்.
லூக்கா 1 : 24 (ERVTA)
பின்னர் சகரியாவின் மனைவி எலிசபெத் கருவுற்றாள். ஆகவே, அவள் ஐந்து மாதங்கள் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. பின் எலிசபெத்,
லூக்கா 1 : 25 (ERVTA)
தேவன் எனக்குச் செய்திருப்பதைப் பாருங்கள். எனது மக்கள் என் நிலையை எண்ணி வெட்கி இருந்தனர். ஆனால் கர்த்தர் அந்த அவமானத்தைப் போக்கி விட்டார் என்று கூறினாள்.
லூக்கா 1 : 26 (ERVTA)
[This verse may not be a part of this translation]
லூக்கா 1 : 27 (ERVTA)
[This verse may not be a part of this translation]
லூக்கா 1 : 28 (ERVTA)
தூதன் அவளிடம் வந்து, கர்த்தர் உன்னோடிருக்கிறார். அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார் என்றான்.
லூக்கா 1 : 29 (ERVTA)
தூதன் கூறியவற்றைக் கேட்டு மரியாள் மிகவும் குழப்பம் அடைந்தாள். இதன் பொருள் என்ன? என்று மரியாள் அதிசயித்தாள்.
லூக்கா 1 : 30 (ERVTA)
தூதன் அவளிடம், பயப்படாதே மரியாளே. தேவன், உன்னிடம் பிரியமாயிருக்கிறார்.
லூக்கா 1 : 31 (ERVTA)
கவனி! நீ கருவுறுவாய். ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாய். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவாயாக.
லூக்கா 1 : 32 (ERVTA)
அவர் பெரியவராக இருப்பார். மகா உன்னதமான தேவனுடைய குமாரன் என்று மக்கள் அவரை அழைப்பர். அவரது முன்னோராகிய தாவீதின் அதிகாரத்தை கர்த்தராகிய தேவன் அவருக்குக் கொடுப்பார்.
லூக்கா 1 : 33 (ERVTA)
சதாகாலமும் யாக்கோபின் மக்கள்மீது இயேசு அரசாளுவார். இயேசுவின் ஆட்சி ஒருபோதும் முடிவுறுவதில்லை என்றான்.
லூக்கா 1 : 34 (ERVTA)
மரியாள் தூதனை நோக்கி, இது எப்படி நடக்கும்? எனக்குத் திருமணம் ஆகவில்லையே! என்றாள்.
லூக்கா 1 : 35 (ERVTA)
தூதன் மரியாளிடம், பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னதமான தேவனின் ஆற்றல் உன்னை மூடிக்கொள்ளும். குழந்தை பரிசுத்த முள்ளதாக இருக்கும். அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார்.
லூக்கா 1 : 36 (ERVTA)
உனது உறவினளாகிய எலிசபெத்தும் கருவுற்றிருக்கிறாள். அவள் மிகவும் வயதானவள். குழந்தை பெற முடியாதவள் என அவள் நினைக்கப்பட்டாள். ஆனால் ஒரு மகனைப் பெறப்போகிறாள். இது அவளுக்கு ஆறாவது மாதம்.
லூக்கா 1 : 37 (ERVTA)
தேவனால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும் என்றான்.
லூக்கா 1 : 38 (ERVTA)
மரியாள், நான் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும் பெண். நீங்கள் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும் என்றாள். பின் தூதன் சென்றுவிட்டான்.
லூக்கா 1 : 39 (ERVTA)
மலைநாடான யூதேயாவில் உள்ள பட்டணத்துக்கு மரியாள் எழுந்து விரைந்து சென்றாள்.
லூக்கா 1 : 40 (ERVTA)
அவள் சகரியாவின் வீட்டுக்குள் நுழைந்து எலிச பெத்தை வாழ்த்தினாள்.
லூக்கா 1 : 41 (ERVTA)
மரியாளின் வாழ்த்து தலை எலிசபெத் கேட்டதும் இன்னும் பிறக்காமல் எலிசபெத்துக்குள் இருக்கும் குழந்தை துள்ளிக் குதித்தது.
லூக்கா 1 : 42 (ERVTA)
எலிசபெத் உரத்த குரலில் வேறெந்தப் பெண்ணைக் காட்டிலும் அதிகமாக தேவன் உன்னை ஆசீர்வதித்துள்ளார். உனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையையும், தேவன் ஆசீர்வதித்திருக்கிறார்.
லூக்கா 1 : 43 (ERVTA)
கர்த்தரின் தாயாகிய நீ என்னிடம் வந்துள்ளாய். அத்தனை நல்ல காரியம் எனக்கு நடந்ததேன்?
லூக்கா 1 : 44 (ERVTA)
உன் சத்தத்தை நான் கேட்டதும் எனக்குள் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று.
லூக்கா 1 : 45 (ERVTA)
உன்னிடம் கர்த்தர் கூறியதை நீ நம்பியதால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாய். இது நடக்கக் கூடியதென நீ நம்பினாய் என்று சொன்னாள்.
லூக்கா 1 : 46 (ERVTA)
அப்போது மரியாள்,
லூக்கா 1 : 47 (ERVTA)
எனது ஆத்துமா கர்த்தரைப் போற்றுகிறது. தேவன் எனது இரட்சகர். எனவே என் உள்ளம் அவரில் மகிழ்கிறது.
லூக்கா 1 : 48 (ERVTA)
நான் முக்கியமற்றவள், ஆனால் தேவன் தனது கருணையைப் பணிப்பெண்ணாகிய எனக்குக் காட்டினார். இப்போது தொடங்கி எல்லா மக்களும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பர்.
லூக்கா 1 : 49 (ERVTA)
ஏனெனில் ஆற்றல் மிகுந்தவர் எனக்காக மேன்மையான செயல்களைச் செய்தார். அவர் பெயர் மிகத் தூய்மையானது.
லூக்கா 1 : 50 (ERVTA)
தேவனை வணங்கும் மக்களுக்கு அவர் எப்போதும் இரக்கம் செய்வார்.
லூக்கா 1 : 51 (ERVTA)
தேவனின் கைகள் பலமானவை. செருக்குற்ற மனிதர்களையும் சுயதம்பட்டக்காரர்களையும் அவர் சிதறடிக்கிறார்.
லூக்கா 1 : 52 (ERVTA)
சிம்மாசனத்தினின்று மன்னர்களைக் கீழே இறக்குகிறார். தாழ்ந்தவர்களை உயர்த்துகிறார்.
லூக்கா 1 : 53 (ERVTA)
நல்ல பொருட்களால் பசித்த மக்களை நிரப்புகிறார். செல்வந்தரையும், தன்னலம் மிகுந்தோரையும் எதுவுமின்றி அனுப்பிவிடுகிறார்.
லூக்கா 1 : 54 (ERVTA)
தனக்குப் பணிசெய்வோருக்கு அவர் உதவினார். அவர்களுக்குத் தன் இரக்கத்தை அருளினார்.
லூக்கா 1 : 55 (ERVTA)
நம் முன்னோருக்கும் ஆபிரகாமுக்கும் தம் குழந்தைகளுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதியை என்றைக்கும் நிறைவேற்றுகிறார் என்று சொன்னாள்.
லூக்கா 1 : 56 (ERVTA)
மரியாள் எலிசபெத்துடன் ஏறக்குறைய மூன்று மாதகாலம்வரைக்கும் தங்கி இருந்தாள். பின்பு மரியாள் தனது வீட்டுக்குச் சென்றாள்.
லூக்கா 1 : 57 (ERVTA)
குழந்தைப் பேற்றின் காலம் நெருங்கியபோது எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
லூக்கா 1 : 58 (ERVTA)
அவளது அக்கம் பக்கத்தாரும் உறவினரும் கர்த்தர் அவளுக்குக் கருணைக் காட்டியதை கேள்விப்பட்டனர். அதைக்குறித்து மகிழ்ச்சியடைந்தனர்.
லூக்கா 1 : 59 (ERVTA)
குழந்தைக்கு எட்டு நாட்கள் ஆனபோது அக் குழந்தையை விருத்தசேதனம் செய்யும் பொருட்டு கொண்டு வந்தனர். அவனது தந்தை பெயரால் அவனை சகரியா என்று பெயரிட்டு அழைக்க விரும்பினர்.
லூக்கா 1 : 60 (ERVTA)
ஆனால் அக்குழந்தையின் தாய், இல்லை, அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும் என்றாள்.
லூக்கா 1 : 61 (ERVTA)
மக்கள் எலிசபெத்தை நோக்கி, உன் குடும்பத்தில் யாருக்கும் இப்பெயர் இல்லையே! என்றனர்.
லூக்கா 1 : 62 (ERVTA)
பின்னர் அவர்கள் அக்குழந்தையின் தந்தையிடம் சென்று சைகையால், குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறாய்? என்று கேட்டனர்.
லூக்கா 1 : 63 (ERVTA)
சகரியா எழுதுவதற்கு ஏதாவது ஒன்று கொண்டு வருமாறு கேட்டான். சகரியா, அவன் பெயர் யோவான் என்று எழுதினான். எல்லா மக்களும் ஆச்சரியம் அடைந்தனர்.
லூக்கா 1 : 64 (ERVTA)
அப்போது சகரியாவால் மீண்டும் பேசமுடிந்தது. அவன் தேவனை வாழ்த்த ஆரம்பித்தான்.
லூக்கா 1 : 65 (ERVTA)
அவனது அக்கம் பக்கத்தார் அனைவருக்கும் பயமுண்டாயிற்று. யூதேயாவின் மலைநாட்டு மக்கள் இக்காரியங்களைக் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டனர்.
லூக்கா 1 : 66 (ERVTA)
இச் செய்திகளைக் கேட்ட எல்லா மக்களும் அவற்றைக் குறித்து அதிசயப்பட்டார்கள். அவர்கள், இக்குழந்தை எப்படிப்பட்டதாயிருக்குமோ? என்று எண்ணினர்.கர்த்தர் இந்தக் குழந்தையோடு இருந்தபடியால் அவர்கள் இதைக் கூறினர்.
லூக்கா 1 : 67 (ERVTA)
அப்போது யோவானின் தந்தையாகிய சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். பின்னர் நடக்க இருப்பவற்றைக் குறித்து அவன் மக்களுக்குக் கூறினான்.
லூக்கா 1 : 68 (ERVTA)
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்றுவோம். தேவன் அவரது மக்களுக்கு உதவ வந்தார். அவர்களுக்கு விடுதலை தந்தார்.
லூக்கா 1 : 69 (ERVTA)
தேவன் நமக்கு வல்லமை பொருந்திய இரட் சகரைத் தந்தார். அவர் தாவீது என்னும் தேவனுடைய பணிவிடைக்காரனின் குடும்பத்தைச் சார்ந்தவர்.
லூக்கா 1 : 70 (ERVTA)
தேவன் இதைச் செய்வதாகக் கூறினார். பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அவரது பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலமாக இதை அவர் கூறினார்.
லூக்கா 1 : 71 (ERVTA)
நம் எதிரிகளிடம் இருந்து தேவன் நம்மைக் காப்பாற்றுவார். நம்மை வெறுக்கும் அனைவரின் கைகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுவார்.
லூக்கா 1 : 72 (ERVTA)
நமது தந்தையருக்கு அருள்புரிவதாக தேவன் சொன்னார். தனது பரிசுத்த வாக்குறுதியை அவர் நினைவு கூர்ந்தார்.
லூக்கா 1 : 73 (ERVTA)
நமது தந்தையாகிய ஆபிரகாமுக்கு எதிரிகளின் சக்தியிலிருந்து
லூக்கா 1 : 74 (ERVTA)
நம்மை விடுவிப்பதாக தேவன் வாக்குறுதி தந்தார். அதனால் பயமின்றி நாம் அவருக்குச் சேவை செய்வோம்.
லூக்கா 1 : 75 (ERVTA)
நாம் நம் வாழ்நாள் முழுவதும் அவருடைய முன்னிலையில் நீதியும் பரிசுத்தமும் வாய்ந்தோராக வாழ்வோம்.
லூக்கா 1 : 76 (ERVTA)
இப்போதும் சிறுவனே, நீ உன்னதமான தேவனின் ஒரு தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுவாய். கர்த்தருக்கு முன்பாக முன்னோடியாக நீ நடப்பாய். கர்த்தரின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வாய்.
லூக்கா 1 : 77 (ERVTA)
அவரது மக்கள் இரட்சிக்கப்படுவர் என்பதை அவர்களுக்கு உணர்த்துவாய். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்கள் இரட்சிக்கப்படுவர்.
லூக்கா 1 : 78 (ERVTA)
நம் தேவனின் அன்பான இரக்கத்தால் பரலோகத்திலிருந்து புதுநாள் ஒன்று நம்மீது பிரகாசிக்கும்.
லூக்கா 1 : 79 (ERVTA)
இருளில் மரணப் பயத்திடையே வாழும் மக்களுக்கு தேவன் உதவி செய்வார். சமாதானத்தை நோக்கி அவர் நம்மை வழிநடத்துவார். என்று சகரியா உரைத்தான்.
லூக்கா 1 : 80 (ERVTA)
அச்சிறுவன் வளர்ந்து வருகையில் ஆவியில் வல்லமை பொருந்தியவனாக மாறினான். இஸ்ரவேல் மக்களுக்குப் போதிக்கும்பொருட்டு வளரும் மட்டும் அவன் மக்களிடமிருந்து தொலைவான இடத்தில் வாழ்ந்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80

BG:

Opacity:

Color:


Size:


Font: