யோவான் 6 : 1 (ERVTA)
பிறகு இயேசு திபேரியாக் கடல் என அழைக் கப்படும் கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார்.
யோவான் 6 : 2 (ERVTA)
ஏராளமான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். ஏனென்றால் இயேசு வழியில் நோயாளிகளைக் குணப்படுத்தித் தன் வல்லமையை வெளிப்படுத்தியதை அவர்கள் கண்டிருந்தனர்.
யோவான் 6 : 3 (ERVTA)
இயேசு மலையின்மேல் ஏறினார். அங்கே தம்மைப் பின்தொடர்ந்தவர்களோடு உட்கார்ந்தார்.
யோவான் 6 : 4 (ERVTA)
அப்பொழுது யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது.
யோவான் 6 : 5 (ERVTA)
ஏராளமான மக்கள் அவரை நோக்கி வருவதை இயேசு கண்களை ஏறெடுத்து நோக்கினார். பிலிப்பு விடம் இயேசு, இவர்களெல்லாம் உண்பதற்கு நாம் அப்பத்தை எங்கே வாங்குவது? என்று கேட்டார்.
யோவான் 6 : 6 (ERVTA)
(பிலிப்புவை சோதனை செய்வதற்காகவே இயேசு அவனிடம் இவ்வாறு கேட்டார். தனது திட்டத்தை இயேசு ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தார்.)
யோவான் 6 : 7 (ERVTA)
பிலிப்பு, இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் அப்பம் உண்பதற்குக் கூட, நாம் அனைவரும் ஒரு மாதத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டியதிருக்குமே என்றான்.
யோவான் 6 : 8 (ERVTA)
அந்திரேயா அவரது இன்னொரு சீஷன். அவன் சீமோன் பேதுருவின் சகோதரன்.
யோவான் 6 : 9 (ERVTA)
அந்திரேயா இயேசுவிடம், இங்கே ஒரு சிறுவன் வாற்கோதுமையால் ஆன ஐந்து அப்பத் துண்டுகளையும், இரண்டு சிறு மீன்களையும் வைத்திருக்கிறான். ஆனால் அவை இவ்வளவு மிகுதியான மக்களுக்குப் போதுமானதல்ல என்றான்.
யோவான் 6 : 10 (ERVTA)
மக்களை உட்காரும்படிக் கூறுங்கள் என்றார் இயேசு. அந்த இடத்தில் நிறைய புல் இருந்தது. அங்கே ஐயாயிரம் எண்ணிக்கை வரையுள்ள ஆண்கள் உட்கார்ந்தனர்.
யோவான் 6 : 11 (ERVTA)
பிறகு இயேசு அப்பத் துண்டுகளை எடுத்தார். அவர் தேவனுக்கு நன்றி சொன்னார். அதை அங்கு அமர்ந்திருந்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கச் செய்தார். அவர் மீனையும் அதைப்போலவே பகிர்ந்தளிக்கச் செய்தார். இயேசு அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு வேண்டியமட்டும் கொடுத்தார்.
யோவான் 6 : 12 (ERVTA)
அனைத்து மக்களும் வேண்டிய மட்டும் உண்டனர். அவர்கள் உண்டு முடித்ததும் இயேசு தன் சீஷர்களிடம் உண்ணப்படாத அப்பத்துண்டுகளையும் மீன் துண்டுகளையும் சேகரியுங்கள். எதையும் வீணாக்க வேண்டாம் என்றார்.
யோவான் 6 : 13 (ERVTA)
எனவே சீஷர்கள் அவற்றைச் சேகரித்தனர். மக்கள் ஐந்து அப்பத்துண்டுகளிலிருந்தே உண்ண ஆரம்பித்தனர். ஆனால் உண்டு பிறகு மீதியிருந்த துணுக்குகளோ பன்னிரண்டு கூடைகளில் நிரப்பப்பட்டன.
யோவான் 6 : 14 (ERVTA)
இயேசு செய்த இந்த அற்புதத்தை மக்கள் கண்டனர். இவர் உண்மையிலேயே உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும் என்றனர் மக்கள்.
யோவான் 6 : 15 (ERVTA)
அவரை மக்கள் அரசராக்க வேண்டும் என விரும்பினர். இதனை இயேசு அறிந்தார். மக்கள் தங்கள் எண்ணத்தைத் திட்டமாக்கிச் செயல்படுத்த விரும்பினர். எனவே இயேசு அவர்களை விட்டுத் தனியாக மலையில் ஏறினார்.
யோவான் 6 : 16 (ERVTA)
அன்று மாலை இயேசுவின் சீஷர்கள் கலிலேயாக் கடற்கரைக்கு இறங்கிச் சென்றனர்.
யோவான் 6 : 17 (ERVTA)
அப்பொழுது இருட்ட ஆரம்பித்தது. எனினும் இயேசு அவர்களிடம் திரும்பி வரவில்லை. இயேசுவின் சீஷர்கள் படகில் ஏறிக் கடலைக் கடந்து கப்பர்நகூமிற்குச் செல்லத் தொடங்கினர்.
யோவான் 6 : 18 (ERVTA)
காற்று வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. கடலில் பெரிய அலைகள் வர ஆரம்பித்தன.
யோவான் 6 : 19 (ERVTA)
அவர்கள் மூன்று நான்கு மைல் தூரத்திற்குப் படகைச் செலுத்தினர். அதன் பின்பு அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர் தண்ணீர்மேல் நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் படகை நெருங்கி வந்தார். அவரது சீஷர்கள் அஞ்சினர்.
யோவான் 6 : 20 (ERVTA)
நான்தான். பயப்பட வேண்டாம் என்று இயேசு அவர்களிடம் கூறினார்.
யோவான் 6 : 21 (ERVTA)
இயேசு இவ்வாறு சொன்னதும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து படகில் அவரை ஏற்றிக் கொண்டனர். உடனே அவர்கள் போக விரும்பிய இடத்திற்குப் படகு வந்து சேர்ந்தது.
யோவான் 6 : 22 (ERVTA)
மறுநாள் வந்தது. கடலின் அக்கரையில் சில மக்கள் தங்கியிருந்தனர். இயேசு தன் சீஷர்களோடு படகில் செல்லவில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் இயேசு இல்லாமல் தனியாகச் சென்றதை அவர்கள் தெரிந்திருந்தனர். அங்கிருந்து செல்ல அந்த ஒரு படகு மட்டும் தான் உண்டு என்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டனர்.
யோவான் 6 : 23 (ERVTA)
அப்போது திபேரியாவிலிருந்து சில படகுகள் வந்தன. அப்படகுகள், கர்த்தர் நன்றி சொன்னதற்குப் பின் மக்கள் உணவு உண்ட இடத்தின் அருகில் நின்றன.
யோவான் 6 : 24 (ERVTA)
இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே இல்லை என்பதை மக்கள் அறிந்து கொண்டனர். ஆகையால் அவர்கள் படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்குச் சென்றனர். அவர்கள் இயேசுவைக் காண விரும்பினர்.
யோவான் 6 : 25 (ERVTA)
கடலின் அக்கரையில் இயேசுவை மக்கள் கண்டுபிடித்தனர். அவர்கள், போதகரே, நீங்கள் இங்கு எப்பொழுது வந்தீர்கள்? என்று கேட்டனர்.
யோவான் 6 : 26 (ERVTA)
ஏன் என்னைத் தேடுகிறீர்கள்? எனது வல்லமையை வெளிப்படுத்தும் எனது அற்புதங்களைப் பார்த்தீர்கள். அதற்காகவா என்னைத் தேடுகிறீர்கள்? இல்லை. நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அப்பத்தை உண்டீர்கள், திருப்தியாக உண்டீர்கள், அதனால் என்னைத் தேடுகிறீர்கள்.
யோவான் 6 : 27 (ERVTA)
பூமியிலுள்ள உணவுகள் கெட்டு அழிந்துபோகும். ஆகையால் அத்தகைய உணவுக்காக நீங்கள் வேலை செய்யவேண்டாம். ஆனால் எப்பொழுதும் நன்மையையும் நித்திய வாழ்வையும் தருகிற உணவுக்காக வேலை செய்யுங்கள். மனித குமாரனே உங்களுக்கு அத்தகைய உணவினைத் தருவார். தேவனாகிய பிதா, தான் மனித குமாரனோடு இருப்பதைக் காட்டிவிட்டார் என்று இயேசு கூறினார்.
யோவான் 6 : 28 (ERVTA)
நாங்கள் எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்? என்று மக்கள் இயேசுவிடம் கேட்டனர்.
யோவான் 6 : 29 (ERVTA)
தேவனால் அனுப்பப்பட்ட ஒருவரை நீங்கள் நம்பவேண்டும். இதுவே நீங்கள் செய்யத்தக்கது என்று தேவன் விரும்புகிறார் என இயேசு பதிலுரைத்தார்.
யோவான் 6 : 30 (ERVTA)
தேவனால் அனுப்பப்பட்டவர் நீர் தான் என்பதை நிரூபிக்க என்ன அற்புதத்தை நீர் செய்யப் போகிறீர். நீர் செய்யும் அற்புதத்தைப் பார்க்க முடியுமெனில், அதற்குப் பின்னர் நாங்கள் உம்மை நம்புவோம். என்ன செய்யப் போகிறீர்?
யோவான் 6 : 31 (ERVTA)
நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் தேவன் கொடுத்த மன்னாவை (உணவு) உண்டார்கள். இது ԅதேவன் பரலோகத்தில் இருந்து அவர்களுக்கு உண்பதற்கு அப்பத்தைக் கொடுத்தார், என்று எழுதப்பட்டிருக்கிறது என்று மக்கள் கேட்டனர்.
யோவான் 6 : 32 (ERVTA)
நான் உண்மையைச் சொல்லுகிறேன். பரலோகத்திலிருந்து அப்பத்தை உங்களுக்கு கொடுத்தது மோசே அல்ல. ஆனால் என்னுடைய பிதா பரலோகத்திலிருந்து உண்மையான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார்.
யோவான் 6 : 33 (ERVTA)
தேவனின் அப்பம் என்பது என்ன? பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்து உலகத்துக்காக ஜீவனைத் தருகிற ஒருவர் தான் தேவனின் அப்பம் என்றார் இயேசு.
யோவான் 6 : 34 (ERVTA)
ஆண்டவரே, எப்பொழுதும் அந்த அப்பத்தை எங்களுக்குத் தாரும் என்றனர் மக்கள்.
யோவான் 6 : 35 (ERVTA)
நான்தான் உங்களுக்கு ஜீவனளிக்கும் அப்பம். என்னிடம் வருகிற மனிதன் என்றென்றைக்கும் பசியோடு இருப்பதில்லை. என்மீது நம்பிக்கை வைக்கிற எவனும் எப்பொழுதும் தாகமாய் இருப்பதில்லை.
யோவான் 6 : 36 (ERVTA)
நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் என்மீது நம்பிக்கையில்லாமல் இருக்கிறீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்.
யோவான் 6 : 37 (ERVTA)
எனது பிதா என் மக்களை எனக்குத் தந்திருக்கிறார். அம் மக்களில் ஒவ்வொருவரும் என்னிடம் வருவார்கள். என்னிடம் வருகிற ஒவ்வொருவரையும் நான் ஏற்றுக் கொள்வேன்.
யோவான் 6 : 38 (ERVTA)
நான் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்வதற்காக நான் பரலோகத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் விரும்புவதைச் செய்வதற்கு வரவில்லை.
யோவான் 6 : 39 (ERVTA)
தேவன் கொடுத்த மக்களில் எவரையும் நான் இழக்கக் கூடாது. நான் இறுதி நாளில் அவர்களையெல்லாம் எழுப்புவேன். என்னை அனுப்பினவர் நான் செய்யவேண்டும் என்று விரும்புவதும் இதைத்தான்.
யோவான் 6 : 40 (ERVTA)
குமாரனைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவரில் நம்பிக்கை வைத்து நித்திய ஜீவனைப் பெறுகின்றனர். நான் அந்த மனிதர்களை இறுதி நாளில் எழுப்புவேன். இது தான் எனது பிதாவின் விருப்பமும் ஆகும் என்றார் இயேசு.
யோவான் 6 : 41 (ERVTA)
பிறகு யூதர்கள் இயேசுவைப் பற்றி முறு முறுக்கத் தொடங்கினர். ஏனென்றால் நான் பரலோகத்திலிருந்து வந்த அப்பம் என்று இயேசு சொன்னார்.
யோவான் 6 : 42 (ERVTA)
அதற்கு யூதர்கள் இவர் இயேசு. நாங்கள் இவரது தந்தையையும் தாயையும் அறிவோம். இயேசு யோசேப்பின் மகன். அவர் எப்படி நான் பரலோகத்திலிருந்து வந்தேன் என்று சொல்லலாம்? என்று கேட்டனர்.
யோவான் 6 : 43 (ERVTA)
ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்.
யோவான் 6 : 44 (ERVTA)
என்னை அனுப்பியவர் அந்தப் பிதாதான். அவரே மக்களை என்னிடம் அழைத்து வருகிறவர். நான் இறுதி நாளில் அவர்களை எழுப்புவேன். என் பிதா என்னிடம் மக்களை அழைத்து வராவிட்டால், எவரும் என்னிடம் வர முடிவதில்லை.
யோவான் 6 : 45 (ERVTA)
இது தீர்க்கதரிசிகளின் மூலம் எழுதப்பட்டிருக்கிறது, தேவன் எல்லா மக்களுக்கும் கற்றுத் தருவார். மக்கள் அப்பிதாவைக் கவனிக்கிறார்கள். கற்றுக்கொள்கிறார்கள். பிறகு அவர்கள் என்னிடம் வருகிறார்கள்.
யோவான் 6 : 46 (ERVTA)
எவரும் பிதாவைப் பார்த்திருப்பதாக நான் கருதவில்லை. தேவனிடம் இருந்து வந்தவர் மட்டுமே அவரைப் பார்த்திருக்கிறார்.
யோவான் 6 : 47 (ERVTA)
நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒருவன் நம்பிக்கை வைத்தால் அவன் நித்திய ஜீவனைப் பெறுவான்.
யோவான் 6 : 48 (ERVTA)
நானே ஜீவனளிக்கும் அப்பம்.
யோவான் 6 : 49 (ERVTA)
உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப் போன்றே மாண்டு போனார்கள்.
யோவான் 6 : 50 (ERVTA)
நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் எனறென்றைக்கும் உயிர்வாழ்வான்.
யோவான் 6 : 51 (ERVTA)
என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். நான் என் சரீரத்தைத் தருவேன். உலகில் உள்ளவர்கள் வாழ்வைப் பெறுவார்கள் என்று இயேசு கூறினார்.
யோவான் 6 : 52 (ERVTA)
பிறகு யூதர்கள் தங்களுக்குள் விவாதம் செய்து கொண்டனர். எவ்வாறு இந்த மனிதன் தனது சரீரத்தை நாம் உண்ணும்படி தருவான்? என்றனர் அவர்கள்.
யோவான் 6 : 53 (ERVTA)
நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் மனித குமாரனின் சரீரத்தை உண்ண வேண்டும். அவரது இரத்தத்தை அருந்த வேண்டும். இதனை நீங்கள் செய்யாவிட்டால், உங்களுக்கு உண்மையான வாழ்க்கை கிடைக்காது.
யோவான் 6 : 54 (ERVTA)
எனது சரீரத்தைப் புசித்து இரத்தத்தை அருந்துகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான். நான் அவனை இறுதி நாளில் எழுப்புவேன்.
யோவான் 6 : 55 (ERVTA)
எனது சரீரமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம்.
யோவான் 6 : 56 (ERVTA)
ஒருவன் எனது சரீரத்தைப் புசித்து என் இரத்தத்தை அருந்துவானேயானால் அவன் என்னிலும் நான் அவனிலும் வாழ்வதாகும்.
யோவான் 6 : 57 (ERVTA)
பிதா என்னை அனுப்பினார். பிதா வாழ்கிறார். அவரால் நானும் வாழ்கிறேன். ஆகையால் என்னை உண்ணுகிறவன் என்னால் உயிர் வாழ்கிறான்.
யோவான் 6 : 58 (ERVTA)
நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் புசித்த அப்பத்தைப்போல் அல்ல நான். அவர்கள் அந்த அப்பத்தை உண்டார்கள். ஆனால், மற்றவர்களைப் போன்று அவர்கள் இறந்து போயினர். நானோ பரலோகத்திலிருந்து இறங்கி வந்த அப்பம். இதனை உண்ணுகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான் என்றார் இயேசு.
யோவான் 6 : 59 (ERVTA)
இவை எல்லாவற்றையும் இயேசு, கப்பர்நகூமிலுள்ள யூதர்களின் ஜெப ஆலயத்தில் போதனை செய்யும்போது கூறினார்.
யோவான் 6 : 60 (ERVTA)
இயேசுவின் சீஷர்கள் இவற்றைக் கேட்டார்கள். இந்த உபதேசங்கள் ஏற்றுக்கொள்வதற்குக் கடினமானவை, இவற்றை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்? என சீஷர்கள் கூறினர்.
யோவான் 6 : 61 (ERVTA)
அவருடைய சீஷர்கள் முறுமுறுப்பதை இயேசு அறிந்து கொண்டார். எனவே இயேசு அவர்களிடம், நான் சொன்னவற்றை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறதா? என்று கேட்டார்.
யோவான் 6 : 62 (ERVTA)
அப்படியானால் மனித குமாரன் தாம் வந்த இடத்திற்கே திரும்பி ஏறிப்போவதைக் காண்பது எப்படியிருக்கும்?
யோவான் 6 : 63 (ERVTA)
ஒரு மனிதனுக்கு அவனது சரீரம் மட்டுமே வாழ்வு அளிப்பது இல்லை. அவனது ஆவியே ஜீவனைத் தருகிறது. நான் உங்களுக்குச் சொன்ன வசனங்கள் யாவும் ஆவியே. இவையே ஜீவனைத் தருவன.
யோவான் 6 : 64 (ERVTA)
ஆனால் உங்களில் சிலர் விசுவாசம் இல்லாமல் இருக்கிறீர்கள் என்றார். (தன்னை விசுவாசிக்காதவர்களை இயேசு புரிந்துகொண்டார். இதனை அவர் துவக்கம் முதலே புரிந்துகொண்டார். தனக்கு எதிராகத் திரும்புகிறவனையும் இயேசு அறிந்திருந்தார்.)
யோவான் 6 : 65 (ERVTA)
அதனால்தான் நான், பிதா அனுமதித்தால் ஒழிய ஒருவனும் என்னிடம் வரமாட்டான் என்று சொன்னேன் என்றார் இயேசு.
யோவான் 6 : 66 (ERVTA)
இயேசு இவ்வாறு சொன்னபிறகு அவரது சீஷர்களில் அநேகர் அவரை விட்டுப் போயினர். அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்வதை நிறுத்தினர்.
யோவான் 6 : 67 (ERVTA)
பிறகு இயேசு தனது பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும் பார்த்து, நீங்களும் விட்டுவிட்டு விலகிச் செல்ல விரும்புகிறீர்களா? என்று கேட்டார்.
யோவான் 6 : 68 (ERVTA)
சீமோன் பேதுரு இயேசுவைப் பார்த்து, ஆண்டவரே, நாங்கள் எங்கே போவோம்? நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகளை நீரே வைத்திருக்கிறீர்.
யோவான் 6 : 69 (ERVTA)
நாங்கள்உம்மை நம்புகிறோம். நீரே தேவனிடமிருந்து வந்த பரிசுத்தமானவர் என்பதை நாங்கள் அறிவோம் என்றார்.
யோவான் 6 : 70 (ERVTA)
பிறகு இயேசு அவர்களிடம், என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிருவர் நீங்கள். ஆனால் உங்களில் ஒருவன் பிசாசு என்றார்.
யோவான் 6 : 71 (ERVTA)
இயேசு யூதாஸைப் பற்றியே இவ்வாறு கூறினார். அவன் சீமோன் ஸ்காரியோத்தின் மகன். பன்னிருவரில் ஒருவன். ஆனால் பிற் காலத்தில் யூதாஸ் இயேசுவிற்கு எதிராகத் திரும்பிவிட்டான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71

BG:

Opacity:

Color:


Size:


Font: