ஆதியாகமம் 7 : 1 (ERVTA)
பிறகு கர்த்தர் நோவாவிடம், "நீ நல்லவன் என்பதை, எல்லோரும் கெட்டுப்போன இக்காலத்திலும் கண்டிருக்கிறேன். ஆகையால் உனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு கப்பலுக்குள் செல்.
ஆதியாகமம் 7 : 2 (ERVTA)
பலிக்குரிய சுத்தமான விலங்குகளில் ஏழு ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள். மற்ற மிருகங்களில் ஒரு ஜோடி போதும். இவற்றையெல்லாம் உனது கப்பலுக்குள் சேர்த்து வை.
ஆதியாகமம் 7 : 3 (ERVTA)
பறவைகளில் ஒவ்வொரு வகையிலும் ஏழு ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள். இதனால் மற்ற இனங்கள் அழிந்தாலும் இவை நிலைத்திருக்கும்.
ஆதியாகமம் 7 : 4 (ERVTA)
இன்றிலிருந்து ஏழு நாட்களானதும் பூமியில் பெருமழை பொழியச் செய்வேன். 40 இரவும் 40 பகலுமாக தொடர்ந்து மழை பொழியும். உலகில் வாழும் அனைத்து உயிர்களும் அழிந்துபோகும். என்னால் படைக்கப்பட்ட அனைத்தும் அழியும்" என்றார்.
ஆதியாகமம் 7 : 5 (ERVTA)
நோவா கர்த்தர் சொன்னபடி எல்லாவற்றையும் செய்து முடித்தான்.
ஆதியாகமம் 7 : 6 (ERVTA)
மழை பெய்தபோது நோவாவுக்கு 600 வயதாயிருந்தது.
ஆதியாகமம் 7 : 7 (ERVTA)
நோவாவும் அவனது குடும்பத்தினரும் கப்பலுக்குள் சென்று வெள்ளத்திலிருந்து உயிர் பிழைத்தனர். நோவாவோடு அவனது மனைவியும் அவனது மகன்களும், மகன்களின் மனைவியரும் இருந்தனர்.
ஆதியாகமம் 7 : 8 (ERVTA)
பலிக்குரிய மிருகங்களும் மற்ற மிருகங்களும் பறவைகளும் ஊர்வனவும்,
ஆதியாகமம் 7 : 9 (ERVTA)
நோவாவோடு கப்பலுக்குள் கொண்டுவரப்பட்டன. அவை ஆணும் பெண்ணுமாக ஜோடி ஜோடியாக தேவனுடைய ஆணையின்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.
ஆதியாகமம் 7 : 10 (ERVTA)
ஏழு நாட்களானதும் வெள்ளப்பெருக்கு துவங்கியது. மழை தொடர்ந்து பெய்தது.
ஆதியாகமம் 7 : 11 (ERVTA)
[This verse may not be a part of this translation]
ஆதியாகமம் 7 : 12 (ERVTA)
[This verse may not be a part of this translation]
ஆதியாகமம் 7 : 13 (ERVTA)
[This verse may not be a part of this translation]
ஆதியாகமம் 7 : 14 (ERVTA)
அவர்களும் எல்லாவகை மிருகங்களும் கப்பலுக்குள் இருந்தனர். எல்லா வகை மிருகங்களும், எல்லாவகைப் பறவைகளும், எல்லாவகை ஊர்வனவும் கப்பலுக்குள் இருந்தன.
ஆதியாகமம் 7 : 15 (ERVTA)
இவை எல்லாம் நோவாவோடு கப்பலுக்குள் சென்றன. அவைகள் எல்லா மிருக வகைகளிலிருந்தும் ஜோடி, ஜோடியாக வந்தன.
ஆதியாகமம் 7 : 16 (ERVTA)
இந்த மிருகங்கள் எல்லாம் இரண்டு இரண்டாக, கப்பலுக்குள் சென்றன. தேவனுடைய ஆணையின்படியே அவை கப்பலுக்குள் சென்றன. பிறகு கர்த்தர் கப்பலின் கதவை அடைத்துவிட்டார்.
ஆதியாகமம் 7 : 17 (ERVTA)
பூமியில் 40 நாட்கள் தொடர்ந்து வெள்ளம் பெருகியது. அவ்வெள்ளம் கப்பலைத் தரையிலிருந்து மேல் நோக்கிக் கிளப்பியது.
ஆதியாகமம் 7 : 18 (ERVTA)
வெள்ளம் தொடர்ந்து ஏறியது. அதனால் கப்பல் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்தது.
ஆதியாகமம் 7 : 19 (ERVTA)
உயரமான மலைகளும் மூழ்கும்படி வெள்ளம் உயர்ந்தது.
ஆதியாகமம் 7 : 20 (ERVTA)
வெள்ளம் மலைகளுக்கு மேலும் உயர்ந்தது. அதன் உயரம் மலைகளுக்கு மேல் 20 அடி இருந்தது.
ஆதியாகமம் 7 : 21 (ERVTA)
[This verse may not be a part of this translation]
ஆதியாகமம் 7 : 22 (ERVTA)
[This verse may not be a part of this translation]
ஆதியாகமம் 7 : 23 (ERVTA)
இவ்வாறு தேவன் பூமியை அழித்தார். தேவன் பூமியில் உயிருள்ள அனைத்தையும் மனிதன், மிருகம், ஊர்ந்து செல்லும் பிராணிகள், பறவைகள் உட்பட எல்லாவற்றையும் பூமியிலிருந்து முற்றிலுமாய் அழித்தார். நோவாவும் அவனது குடும்பத்தினரும் அவனோடு கப்பலிலிருந்த பறவைகளும், மிருகங்களும் மட்டுமே உயிர் பிழைத்தன.
ஆதியாகமம் 7 : 24 (ERVTA)
வெள்ளமானது தொடர்ந்து 150 நாட்கள் பூமியில் பரவியிருந்தது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

BG:

Opacity:

Color:


Size:


Font: