ஆதியாகமம் 6 : 1 (ERVTA)
பூமியில் ஜனங்கள் தொகை பெருக ஆரம்பித்தது. அவர்களுக்குப் பெண் பிள்ளைகள் ஏராளமாகப் பிறந்தனர்.
ஆதியாகமம் 6 : 2 (ERVTA)
[This verse may not be a part of this translation]
ஆதியாகமம் 6 : 3 (ERVTA)
[This verse may not be a part of this translation]
ஆதியாகமம் 6 : 4 (ERVTA)
[This verse may not be a part of this translation]
ஆதியாகமம் 6 : 5 (ERVTA)
பூமியில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெரும் பாவிகளாக இருப்பதைக் கர்த்தர் அறிந்தார். அவர்கள் எல்லாக் காலத்திலும் பாவ எண்ணங்களையே கொண்டிருப்பதைக் கர்த்தர் பார்த்தார்.
ஆதியாகமம் 6 : 6 (ERVTA)
கர்த்தர் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காக வருத்தப்பட்டார்.
ஆதியாகமம் 6 : 7 (ERVTA)
எனவே கர்த்தர், "பூமியில் நான் படைத்த அனைத்து மனிதர்களையும், மிருகங்களையும், ஊர்வனவற்றையும், வானத்தில் பறக்கும் பறவைகளையும் அழிக்கப் போகிறேன். ஏனென்றால் நான் இவற்றையெல்லாம் படைத்ததற்காக வருத்தப்படுகிறேன்" என்றார்.
ஆதியாகமம் 6 : 8 (ERVTA)
ஆனால் கர்த்தருக்கு விருப்பமான வழியில் நடப்பவனாக நோவா என்னும் ஒரே ஒரு மனிதன் மட்டும் இருந்தான்.
ஆதியாகமம் 6 : 9 (ERVTA)
இது நோவாவின் குடும்பத்தைப்பற்றிக் கூறுகின்ற பகுதி. நோவா நேர்மையான மனிதனாக இருந்தான். அவன் தன்னைச் சுற்றியுள்ள ஜனங்களில் குற்றமற்றவனாக இருந்தான். அவன் எப்பொழுதும் தேவனைப் பின்பற்றி வாழ்ந்தான்.
ஆதியாகமம் 6 : 10 (ERVTA)
அவனுக்கு சேம், காம், யாப்பேத் எனும் மூன்று மகன்கள் இருந்தனர்.
ஆதியாகமம் 6 : 11 (ERVTA)
[This verse may not be a part of this translation]
ஆதியாகமம் 6 : 12 (ERVTA)
[This verse may not be a part of this translation]
ஆதியாகமம் 6 : 13 (ERVTA)
எனவே, தேவன் நோவாவிடம், "எல்லோரும் பூமியில் பாவத்தையும் வன்முறையையும் பரவ வைத்துள்ளனர். எனவே நான் எல்லா உயிர்களையும் அழித்து, அவற்றை பூமியிலிருந்து விலக்குவேன்.
ஆதியாகமம் 6 : 14 (ERVTA)
கொப்பேர் மரத்தைப் பயன்படுத்தி நீயே ஒரு பெரிய கப்பலைச் செய். அதில் பல அறைகளை ஏற்படுத்து. உள்ளும் புறம்புமாகத் தார் பூசி விடு.
ஆதியாகமம் 6 : 15 (ERVTA)
"கப்பல் 450 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமும் இருக்கட்டும்.
ஆதியாகமம் 6 : 16 (ERVTA)
இதில் 18 அங்குலம் கூரையை விட்டு கீழே ஒரு ஜன்னல் இருக்கட்டும். கப்பலின் பக்கவாட்டில் ஒரு கதவு இருக்கட்டும். அதில் மேல்தளம், நடுத்தளம், கீழ்த்தளம் என்று மூன்று தளங்கள் இருக்கட்டும்.
ஆதியாகமம் 6 : 17 (ERVTA)
"நான் உனக்குச் சொல்வதைக் கவனமாகக் கேள். நான் பூமியில் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கை ஏற்படுத்துவேன். வானத்துக்குக் கீழேயுள்ள அனைத்து உயிர்களையும் அழிப்பேன். மண்ணிலுள்ள அனைத்தும் மரணமடையும்.
ஆதியாகமம் 6 : 18 (ERVTA)
ஆனால் நான் உன்னோடு ஒரு சிறப்பான உடன்படிக்கையைச் செய்கிறேன். நீயும் உன் மனைவியும் உன் மகன்களும், மகன்களின் மனைவிமார்களும் கப்பலுக்குள் போய் விடுங்கள்.
ஆதியாகமம் 6 : 19 (ERVTA)
பூமியிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஆண், பெண் என இணையாகத் தேர்ந்தெடுத்துக் கொள். கப்பலில் அவைகள் உயிரோடு இருக்கட்டும்.
ஆதியாகமம் 6 : 20 (ERVTA)
ஒவ்வொரு பறவை இனங்களிலும் ஒவ்வொரு ஜோடியும், ஒவ்வொரு மிருக இனங்களிலும் ஒவ்வொரு ஜோடியும், எல்லா ஊர்வனவற்றிலும் ஒவ்வொரு ஜோடியும் கண்டு பிடித்து, அவற்றையும் உனது கப்பலில் உயிரோடு வைத்துக்கொள்.
ஆதியாகமம் 6 : 21 (ERVTA)
எல்லாவகை உணவுப் பொருட்களையும் கப்பலில் சேமித்து வை. அவ்வுணவு உங்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் உதவியாக இருக்கட்டும்" என்றார்.
ஆதியாகமம் 6 : 22 (ERVTA)
நோவா தேவன் சொன்னபடி எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடித்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: