ஆதியாகமம் 5 : 1 (ERVTA)
{ஆதாமின் குடும்ப வரலாறு} [PS] இது ஆதாமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி. தேவன் மனிதரைத் தம் சாயலிலேயே படைத்தார்.
ஆதியாகமம் 5 : 2 (ERVTA)
தேவன் அவர்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார். தேவன் அவர்களைப் படைத்த அந்நாளிலேயே அவர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு “மனிதர்” என்று பெயரிட்டார். [PE][PS]
ஆதியாகமம் 5 : 3 (ERVTA)
ஆதாமுக்கு 130 வயது ஆன பிறகு இன்னொரு மகன் பிறந்தான். அவன் ஆதாமைப்போலவே இருந்தான். ஆதாம் அவனுக்குச் சேத் என்று பெயர் வைத்தான்.
ஆதியாகமம் 5 : 4 (ERVTA)
சேத் பிறந்த பிறகும்Ԕஆதாம் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் ஆதாமுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 5 (ERVTA)
எனவே ஆதாம் மொத்தமாக 930 ஆண்டுகள் வாழ்ந்து, மரணமடைந்தான். [PE][PS]
ஆதியாகமம் 5 : 6 (ERVTA)
சேத்துக்கு 105 வயதானபோது அவனுக்கு ஏனோஸ் என்ற மகன் பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 7 (ERVTA)
ஏனோஸ் பிறந்த பிறகு சேத் 807 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 8 (ERVTA)
சேத் மொத்தம் 912 ஆண்டுகள் வாழ்ந்து பிறகு மரணமடைந்தான். [PE][PS]
ஆதியாகமம் 5 : 9 (ERVTA)
ஏனோசுக்கு 90 வயதானபோது அவனுக்குக் கேனான் என்ற மகன் பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 10 (ERVTA)
கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 11 (ERVTA)
ஏனோஸ் 905 ஆண்டுகள் வாழ்ந்து பின்னர் மரணமடைந்தான். [PE][PS]
ஆதியாகமம் 5 : 12 (ERVTA)
கேனானுக்கு 70 வயதானபோது அவனுக்கு மகலாலேயேல் என்ற மகன் பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 13 (ERVTA)
மகலாலேயேல் பிறந்த பிறகு கேனான் 840 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு ஆண் பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 14 (ERVTA)
ஆகவே கேனான் 910 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான். [PE][PS]
ஆதியாகமம் 5 : 15 (ERVTA)
மகலாலேயேல் 65 வயதானபோது அவனுக்கு யாரேத் என்ற மகன் பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 16 (ERVTA)
யாரேத் பிறந்த பின் மகலாலேயேல் 830 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 17 (ERVTA)
மகலாலேயேல் 895 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான். [PE][PS]
ஆதியாகமம் 5 : 18 (ERVTA)
யாரேத்துக்கு 162 வயதானபோது அவனுக்கு ஏனோக் என்ற மகன் பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 19 (ERVTA)
ஏனோக் பிறந்த பின் யாரேத் 800 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 20 (ERVTA)
யாரேத் மொத்தம் 962 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான். [PE][PS]
ஆதியாகமம் 5 : 21 (ERVTA)
ஏனோக்குக்கு 65 வயதானபோது அவனுக்கு மெத்தூசலா என்ற மகன் பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 22 (ERVTA)
மெத்தூசலா பிறந்தபின் ஏனோக் 300 ஆண்டுகள் தேவனோடு வழிநடந்தான். அக்காலத்தில் அவன் ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 23 (ERVTA)
அவன் மொத்தம் 365 ஆண்டுகள் வாழ்ந்தான்.
ஆதியாகமம் 5 : 24 (ERVTA)
ஒரு நாள் ஏனோக் தேவனோடு நடந்துகொண்டிருக்கும்போதே அவன் மறைந்து போனான். தேவன் அவனை எடுத்துக்கொண்டார். [PE][PS]
ஆதியாகமம் 5 : 25 (ERVTA)
மெத்தூசலாவுக்கு 187 வயதானபோது அவனுக்கு லாமேக் என்ற மகன் பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 26 (ERVTA)
லாமேக் பிறந்தபின் மெத்தூசலா 782 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவனுக்கு ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் பிறந்தனர்.
ஆதியாகமம் 5 : 27 (ERVTA)
மெத்தூசலா 969 ஆண்டுகள் வாழ்ந்து மரணமடைந்தான். [PE][PS]
ஆதியாகமம் 5 : 28 (ERVTA)
லாமேக்கிற்கு 182 வயதானபோது அவனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
ஆதியாகமம் 5 : 29 (ERVTA)
அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். அவன், “நாம் விவசாயிகளாக பாடுபடுகிறோம். ஏனென்றால் தேவன் பூமியைச் சபித்திருக்கிறார். ஆனால் நோவா, நமக்கு இளைப்பாறுதலை அளிப்பான்” என்றான். [PE][PS]
ஆதியாகமம் 5 : 30 (ERVTA)
நோவா பிறந்தபின், லாமேக் 595 ஆண்டுகள் வாழ்ந்தான். அக்காலத்தில் அவன் ஆண் பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் பெற்றெடுத்தான்.
ஆதியாகமம் 5 : 31 (ERVTA)
லாமேக் மொத்தம் 777 ஆண்டுகள் வாழ்ந்து மரண மடைந்தான். [PE][PS]
ஆதியாகமம் 5 : 32 (ERVTA)
நோவாவுக்கு 500 வயதானபின் அவனுக்கு சேம், காம், யாப்பேத் என்னும் ஆண்பிள்ளைகள் பிறந்தனர். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

BG:

Opacity:

Color:


Size:


Font: