ஆதியாகமம் 49 : 1 (ERVTA)
{யாக்கோபு தன் மகன்களை ஆசீர்வதித்தல்} [PS] பின்பு யாக்கோபு தன் அனைத்து பிள்ளைகளையும் அழைத்து, “பிள்ளைகளே! என்னிடம் வாருங்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்கிறேன்.
ஆதியாகமம் 49 : 2 (ERVTA)
“சேர்ந்து வாருங்கள், கவனியுங்கள். யாக்கோபின் பிள்ளைகளே. [QBR] இஸ்ரவேலாகிய உங்கள் தந்தை சொல்வதைக் கேளுங்கள்.
ஆதியாகமம் 49 : 3 (ERVTA)
{ரூபன்} [PS] “ரூபனே! என் முதல் மகனே! நீ எனக்கு முதல் பிள்ளை. [QBR2] எனது மனித சக்தியின் முதல் அடையாளம் நீயே. [QBR] நீயே வல்லமையும் [QBR2] மரியாதையும் உள்ள மகனாக விளங்கியிருக்கலாம். [QBR]
ஆதியாகமம் 49 : 4 (ERVTA)
ஆனால் உனது உணர்ச்சிகளை வெள்ளம்போல உன்னால் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது. [QBR2] எனவே நீ மரியாதைக்குரியவனாக இருக்கமாட்டாய். [QBR] நீ உன் தந்தையின் படுக்கையில் அவர் மனைவிகளுள் ஒருத்தியோடு படுத்தவன். [QBR2] நீ எனது படுக்கைக்கே அவமானம் தேடித் தந்தவன்.
ஆதியாகமம் 49 : 5 (ERVTA)
{சிமியோனும் லேவியும்} [PS] “சிமியோனும் லேவியும் சகோதரர்கள். [QBR2] அவர்கள் வாள்களால் சண்டையிடுவதை விரும்புவார்கள். [QBR]
ஆதியாகமம் 49 : 6 (ERVTA)
இரகசியமாகப் பாவம் செய்யத் திட்டமிடுவார்கள். [QBR2] அவர்களின் திட்டங்களில் என் ஆத்துமா பங்குகொள்ள விரும்பவில்லை. [QBR] அவர்களின் இரகசியக் கூட்டங்களை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். கோபமாக இருக்கும்போது மனிதர்களைக் கொல்லுகிறார்கள், மிருகங்களை வேடிக்கைக்காகவே துன்புறுத்துகிறார்கள். [QBR]
ஆதியாகமம் 49 : 7 (ERVTA)
அவர்களின் கோபமே ஒரு சாபம். [QBR2] அது வலிமையானது. அவர்கள் பைத்தியமாகும்போது கொடூரமானவர்களாகிறார்கள். [QBR] யாக்கோபின் பூமியிலே அவர்கள் சொந்த பூமியைப் பெறமாட்டார்கள். [QBR2] அவர்கள் இஸ்ரவேல் முழுவதும் பரவி வாழ்வார்கள்.
ஆதியாகமம் 49 : 8 (ERVTA)
{யூதா} [PS] “உன்னை உன் சகோதரர்கள் போற்றுவார்கள். [QBR2] நீ உன் பகைவர்களை வெல்வாய். [QBR2] உன் சகோதரர்கள் உனக்கு அடிபணிவார்கள். [QBR]
ஆதியாகமம் 49 : 9 (ERVTA)
யூதா ஒரு சிங்கத்தைப் போன்றவன். [QBR2] என் மகனே, தான் கொன்ற மிருகத்தின் மேல் நிற்கும் ஒரு சிங்கத்தை போன்றவன் நீ. [QBR] நீ ஓய்வெடுக்கும்போது உன்னை எவரும் [QBR2] தொந்தரவு செய்யமுடியாது. [QBR]
ஆதியாகமம் 49 : 10 (ERVTA)
யூதாவின் குடும்பத்தில் வருபவர்கள் அரசர் ஆவார்கள். [QBR2] சமாதான கர்த்தர் வரும்வரை உன்னை விட்டு செங்கோல் நீங்குவதில்லை. [QBR] ஏராளமான ஜனங்கள் அவனுக்கு அடிபணிந்து சேவை செய்வார்கள். [QBR]
ஆதியாகமம் 49 : 11 (ERVTA)
அவன் தன் கழுதையைத் திராட்சைக் கொடியில் கட்டி வைப்பான். [QBR2] அவன் தன் இளைய கழுதையை சிறந்த திராட்டைக் கொடியில் கட்டி வைப்பான். [QBR2] அவன் சிறந்த திராட்சைரசத்தை ஆடைவெளுக்கப் பயன்படுத்துவான். [QBR]
ஆதியாகமம் 49 : 12 (ERVTA)
அவன் கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகும். [QBR2] அவன் பற்கள் பாலால் வெளுக்கும்.
ஆதியாகமம் 49 : 13 (ERVTA)
{செபுலோன்} [PS] “இவன் கடற்கரையில் வசிப்பான். [QBR2] அவனது துறைமுகம் கப்பல்களுக்கு ஏற்றதாக இருக்கும். [QBR2] அவனது எல்லை சீதோன்வரை இருக்கும்.
ஆதியாகமம் 49 : 14 (ERVTA)
{இசக்கார்} [PS] “இசக்கார் ஒரு கழுதையைப்போல கடினமாக உழைப்பான். [QBR2] இரண்டு பொதியின் நடுவே படுத்திருப்பவனைப் போன்றவன். [QBR]
ஆதியாகமம் 49 : 15 (ERVTA)
தன் ஓய்விடத்தை நன்றாக இருக்கும்படி பார்த்துக்கொள்வான். [QBR2] தன் பூமியை செழிப்பாக வைத்துக்கொள்வான். [QBR] அடிமையைப்போல [QBR2] வேலை செய்ய சம்மதிப்பான்.
ஆதியாகமம் 49 : 16 (ERVTA)
{தாண்} [PS] “தாண் இஸ்ரவேல் குடும்பத்தில் ஒருவனாக [QBR2] தன் சொந்த ஜனங்களையே நியாயம்தீர்ப்பான். [QBR]
ஆதியாகமம் 49 : 17 (ERVTA)
இவன் சாலையோரத்தில் அலையும் பாம்பைப் போன்றவன். [QBR2] இவன் பாதையிலேபடுத்திருக்கும் பாம்பைப் போன்று பயங்கரமானவன். [QBR] இப்பாம்பு ஒரு குதிரையின் காலை கடிக்கிறது, [QBR2] சவாரி செய்தவன் கீழே விழுகிறான்.
ஆதியாகமம் 49 : 18 (ERVTA)
“கர்த்தாவே நான் உமது இரட்சிப்புக்காகக் காத்திருக்கிறேன்.
ஆதியாகமம் 49 : 19 (ERVTA)
{காத்} [PS] “ஒரு கொள்ளைக் கூட்டம் காத்தைத் தாக்கும். [QBR2] ஆனால் அவர்களை அவன் துரத்திவிடுவான்.
ஆதியாகமம் 49 : 20 (ERVTA)
{ஆசேர்} [PS] “இவனது நிலம் அதிகமாக விளையும். [QBR2] ஒரு அரசனுக்கு வேண்டிய உணவு பொருட்களைத் தருவான்.
ஆதியாகமம் 49 : 21 (ERVTA)
{நப்தலி} [PS] “இவன் சுதந்திரமாக ஓடுகிற மானைப் போன்றவன். [QBR2] அவன் வார்த்தைகள் குழந்தைகளைப் போன்று அழகானவைகள்.”
ஆதியாகமம் 49 : 22 (ERVTA)
{யோசேப்பு} [PS] “இவன் வெற்றி பெற்றவன். [QBR2] இவன் பழத்தால் மூடப்பட்ட திராட்சைக்கொடியைப் போன்றவன். [QBR2] நீரூற்றுக்கருகிலும் வேலிக்குள்ளும் இருக்கிற கொடியைப் போன்றவன். [QBR]
ஆதியாகமம் 49 : 23 (ERVTA)
பலர் அவனுக்கு எதிராகப் போரிடுவார்கள். [QBR2] வில் வீரர்களே அவன் பகைவர். [QBR]
ஆதியாகமம் 49 : 24 (ERVTA)
ஆனால் அவன் பலம் வாய்ந்த வில்லாலும் திறமையான கைகளாலும் சண்டையில் வென்றான். [QBR2] அவன் யாக்கோபின் வல்லவரும், மேய்ப்பரும், இஸ்ரவேலின் பாறையும் ஆனவரிடமிருந்தும் உன் பிதாவின் தேவனிடமிருந்தும் வலிமை பெற்றான். [QBR]
ஆதியாகமம் 49 : 25 (ERVTA)
தேவன் உன்னை ஆசீர்வதிக்கிறார். [QBR] சர்வ வல்லமையுள்ள தேவன் [QBR2] வானத்திலிருந்தும், கீழே ஆழத்திலிருந்தும் உன்னை ஆசீர்வதிக்கட்டும். [QBR2] ஸ்தனங்களுக்கும், கர்ப்பங்களுக்குமுரிய ஆசிகளை அவர் உனக்கு வழங்கட்டும். [QBR]
ஆதியாகமம் 49 : 26 (ERVTA)
எனது பெற்றோர்களுக்கு எவ்வளவோ நன்னமைகள் ஏற்பட்டன எனினும் எனது ஆசீர்வாதங்கள் அவற்றைவிட மேலானது. [QBR] உனது சகோதரர்கள் உன்னை எதுவுமில்லாமல் விட்டுவிட்டுப் போனார்கள். [QBR2] ஆனால், இப்போது எனது ஆசீர்வாதங்களையெல்லாம் மலையின் உயரம்போல் கூட்டித் தருகிறேன்.
ஆதியாகமம் 49 : 27 (ERVTA)
{பென்யமீன்} [PS] “பென்யமீன் ஒரு பசித்த நரி போன்றவன். [QBR2] காலையில் கொன்று தின்பான். [QBR2] மாலையில் மிஞ்சியதைப் பகிர்ந்துகொள்வான்.” [PS]
ஆதியாகமம் 49 : 28 (ERVTA)
இவர்கள் அனைவரும் இஸ்ரவேலின் 12 குடும்பத்தினர். இவ்வாறு யாக்கோபு அவர்கள் ஒவ்வொரு வருக்கும் அவரவருக்குப் பொருத்தமான ஆசீர்வாதங்களைக் கொடுத்தான்.
ஆதியாகமம் 49 : 29 (ERVTA)
பின் இஸ்ரவேல் ஒரு ஆணையிட்டான். “நான் மரிக்கும்போது என் ஜனங்களோடு இருக்க விரும்புகிறேன். என் முற்பிதாக்களோடு நான் அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தக் கல்லறை ஏத்தியரிடம் வாங்கிய எப்பெரோனில் உள்ளது.
ஆதியாகமம் 49 : 30 (ERVTA)
அந்தக் குகை மம்ரேக்கு அருகில் மக்பேலா எனும் இடத்தில் வயலில் உள்ளது. இது கானான் நாட்டில் உள்ளது. இதனை ஆபிரகாம் எப்ரோனிடமிருந்து விலைக்கு வாங்கி கல்லறையாக மாற்றிவிட்டார்.
ஆதியாகமம் 49 : 31 (ERVTA)
ஆபிரகாமும் அவன் மனைவி சாராளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். நான் என் மனைவி லேயாளையும் அதே குகையில் அடக்கம் பண்ணினேன்.
ஆதியாகமம் 49 : 32 (ERVTA)
அந்தக் குகை இருக்கும் நிலம் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான்.
ஆதியாகமம் 49 : 33 (ERVTA)
யாக்கோபு பேசி முடித்ததும் படுத்தான். கால்களைக் கட்டிலின்மேல் மடக்கியபடியே மரணமடைந்தான். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

BG:

Opacity:

Color:


Size:


Font: