ஆதியாகமம் 11 : 1 (ERVTA)
{உலகம் பிரிக்கப்பட்டது} [PS] வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர்.
ஆதியாகமம் 11 : 2 (ERVTA)
ஜனங்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநெயார் நாட்டில் ஒரு சமவெளியைக் கண்டு அங்கே தங்கினர்.
ஆதியாகமம் 11 : 3 (ERVTA)
ஜனங்கள், “நாம் செங்கற்களைச் செய்து, நெருப்பில் அவற்றைச் சுடுவோம். அது பல முடையதாகும்” என்றனர். எனவே ஜனங்கள் கற்களைப் பயன்படுத்தாமல் செங்கற்களைப் பயன்படுத்தி வீடு கட்டினர். சாந்துக்கு பதிலாக தாரைப் பயன்படுத்தினர். [PE][PS]
ஆதியாகமம் 11 : 4 (ERVTA)
மேலும் ஜனங்கள், “நமக்காக நாம் ஒரு நகரத்தை நிர்மாணிக்க வேண்டும். ஒரு பெரிய கோபுரத்தை வானத்தை எட்டுமளவு கட்ட வேண்டும். நாம் புகழ் பெறுவோம். அது நம்மை ஒன்றுபடுத்தும். பூமி எங்கும் பரவிப் போகாமல் இருக்கலாம்” என்றனர். [PE][PS]
ஆதியாகமம் 11 : 5 (ERVTA)
கர்த்தர் பூமிக்கு இறங்கி வந்து அவர்கள் நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதைப் பார்வையிட்டார்.
ஆதியாகமம் 11 : 6 (ERVTA)
கர்த்தர், “இந்த ஜனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலையைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக் கூடியவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத்திட்டமிட்டுள்ள எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்.
ஆதியாகமம் 11 : 7 (ERVTA)
எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று சொன்னார். [PE][PS]
ஆதியாகமம் 11 : 8 (ERVTA)
அவ்வாறே, கர்த்தர் ஜனங்களைப் பூமி முழுவதும் சிதறிப் போகும்படி செய்தார். அதனால் அவர்கள் அந்த நகரத்தைக் கட்டி முடிக்க முடியாமல் போயிற்று.
ஆதியாகமம் 11 : 9 (ERVTA)
உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச் செய்தார். [PS]
ஆதியாகமம் 11 : 10 (ERVTA)
{சேம் குடும்பத்தின் வரலாறு} [PS] இது சேமின் குடும்பத்தைப்பற்றி கூறுகின்ற பகுதி: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சேமுக்கு 100 வயதானபோது அர்பக்சாத் என்னும் மகன் பிறந்தான்.
ஆதியாகமம் 11 : 11 (ERVTA)
அதன் பிறகு அவன் 500 ஆண்டுகள் வாழ்ந்தான். அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் இருந்தனர். [PE][PS]
ஆதியாகமம் 11 : 12 (ERVTA)
அர்பக்சாத்துக்கு 35 வயதானபோது சாலா என்னும் மகன் பிறந்தான்.
ஆதியாகமம் 11 : 13 (ERVTA)
சாலா பிறந்த பின் அர்பக்சாத் 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர். [PE][PS]
ஆதியாகமம் 11 : 14 (ERVTA)
சாலாவுக்கு 30 வயதானபோது ஏபேர் பிறந்தான்.
ஆதியாகமம் 11 : 15 (ERVTA)
ஏபேர் பிறந்தபின் சாலா 403 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர். [PE][PS]
ஆதியாகமம் 11 : 16 (ERVTA)
ஏபேருக்கு 34 வயதானபோது பேலேகைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 17 (ERVTA)
பேலேக் பிறந்த பின் ஏபேர் 430 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர். [PE][PS]
ஆதியாகமம் 11 : 18 (ERVTA)
பேலேக்குக்கு 30 வயதானபோது அவனது மகன் ரெகூ பிறந்தான்.
ஆதியாகமம் 11 : 19 (ERVTA)
ரெகூ பிறந்த பின் பேலேகு 209 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர். [PE][PS]
ஆதியாகமம் 11 : 20 (ERVTA)
ரெகூவுக்கு 32 வயது ஆனதும் அவனது மகன் செரூகைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 21 (ERVTA)
செரூகு பிறந்தபின் ரெகூ 207 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர். [PE][PS]
ஆதியாகமம் 11 : 22 (ERVTA)
செரூகுக்கு 30 வயது ஆனதும் நாகோர் பிறந்தான்.
ஆதியாகமம் 11 : 23 (ERVTA)
நாகோர் பிறந்தபின் செரூகு 200 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர். [PE][PS]
ஆதியாகமம் 11 : 24 (ERVTA)
நாகோருக்கு 29 வயது ஆனதும் அவனது மகன் தேராகைப் பெற்றான்.
ஆதியாகமம் 11 : 25 (ERVTA)
தேராகு பிறந்ததும் நாகோர் 119 ஆண்டுகள் வாழ்ந்தான். அப்போது அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் பிறந்தனர். [PE][PS]
ஆதியாகமம் 11 : 26 (ERVTA)
தேராகுக்கு 70 வயதானபோது அவனது மகன்கள் ஆபிராம், நாகோர், ஆரான் பிறந்தார்கள். [PS]
ஆதியாகமம் 11 : 27 (ERVTA)
{தேராகு குடும்பத்தின் வரலாறு} [PS] இது தேராகு குடும்பத்தின் வரலாறு ஆகும். தேராகு என்பவன் ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோரின் தந்தையானவன். ஆரான் லோத்தின் தந்தையானவன்.
ஆதியாகமம் 11 : 28 (ERVTA)
ஆரான் தனது பிறந்த நகரமான பாபிலோனியாவில் உள்ள ஊர் என்ற இடத்தில்மரண மடைந்தான். அப்போது அவனது தந்தையான தேராகு உயிரோடு இருந்தான்.
ஆதியாகமம் 11 : 29 (ERVTA)
ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்துகொண்டனர். ஆபிராமின் மனைவியின் பெயர் சாராய். நாகோரின் மனைவியின் பெயர் மில்காள். இவள் ஆரானுடைய மகள். ஆரான் மில்காளுக்கும் இஸ்காளுக்கும் தந்தை.
ஆதியாகமம் 11 : 30 (ERVTA)
சாராய் பிள்ளைகள் இல்லாமல் மலடியாய் இருந்தாள். [PE][PS]
ஆதியாகமம் 11 : 31 (ERVTA)
தேராகு தனது குடும்பத்தோடு பாபிலோனியாவில் உள்ள ஊர் எனும் இடத்தை விட்டுப் போனான். அவர்கள் கானானுக்குப் போகத் திட்டமிட்டனர். தேராகு தனது மகன் ஆபிராமையும் பேரன் லோத்தையும், மருமகள் சாராவையும் தன்னோடு அழைத்துச் சென்றான். அவர்கள் ஆரான் நகரத்துக்கு போய் அங்கே தங்கிவிட முடிவு செய்தனர்.
ஆதியாகமம் 11 : 32 (ERVTA)
தேராகு 205 ஆண்டுகள் வாழ்ந்து அங்கேயே மரணமடைந்தான். [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32

BG:

Opacity:

Color:


Size:


Font: