உபாகமம் 33 : 1 (ERVTA)
{மோசே ஜனங்களை ஆசீர்வதிக்கிறான்} [PS] மோசே மரிப்பதற்கு முன்பு, தேவனுடைய [PE][PS] மனுஷனான அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதம் இதுதான்.
உபாகமம் 33 : 2 (ERVTA)
மோசே சொன்னான்: “சீனாயிலிருந்து கர்த்தர் வந்தார். [QBR2] கர்த்தர் சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமாகும் ஒளிபோன்று தோன்றினார். [QBR2] அவர் பாரான் மலையிலிருந்து ஒளி வீசும் வெளிச்சத்தைப் போன்று இருந்தார். [QBR] கர்த்தர் 10,000 பரிசுத்தரோடு வந்தார். [QBR2] தேவனின் பலமிக்க படை வீரர்கள் அவரது பக்கத்திலேயே இருந்தார்கள். [QBR]
உபாகமம் 33 : 3 (ERVTA)
ஆம்! கர்த்தர் அவரது ஜனங்களை நேசிக்கிறார். [QBR2] அவரது பரிசுத்தமான ஜனங்கள் அனைவரும் அவரது கைக்குள் இருக்கிறார்கள். [QBR] அவர்கள் அவரது காலடியில் இருந்து, அவரது போதனையைக் கற்கிறார்கள்! [QBR]
உபாகமம் 33 : 4 (ERVTA)
மோசே சட்டத்தை கொடுத்தான். [QBR2] அந்தப் போதனைகள் எல்லாம் யாக்கோபின் ஜனங்களுக்குரியது. [QBR]
உபாகமம் 33 : 5 (ERVTA)
அந்த நேரத்தில், இஸ்ரவேலின் ஜனங்களும் அவர்களது தலைவர்களும், ஒன்று கூடினார்கள். [QBR2] கர்த்தர் யெஷுரனுக்கு அரசரானார்!
உபாகமம் 33 : 6 (ERVTA)
{ரூபனுக்கான ஆசீர்வாதம்} [PS] “ரூபன் வாழட்டும். அவன் சாகவேண்டாம்! [QBR2] ஆனால், அவனது குடும்பத்தில் கொஞ்சம் ஜனங்கள் மட்டும் இருக்கட்டும்!” [PS]
உபாகமம் 33 : 7 (ERVTA)
{யூதாவுக்கான ஆசீர்வாதம்} [PS] மோசே யூதாவைப் பற்றி இவற்றைச் சொன்னான்: “கர்த்தாவே, யூதாவிலிருந்து தலைவன் உதவிக்காக அழைக்கும்போது கேளும். [QBR2] அவனை அவனது ஜனங்களிடம் கொண்டு வாரும். [QBR] அவனைப் பலப்படுத்தும், அவனது பகைவர்களை தோற்கடிக்கும்படி உதவும்.” [PS]
உபாகமம் 33 : 8 (ERVTA)
{லேவிக்கான ஆசீர்வாதம்} [PS] மோசே லேவியைப் பற்றி இவற்றைச் சொன்னான்: “லேவி உமது உண்மையான சீடன். [QBR2] அவன் ஊரீம் மற்றும் தும்மீமை வைத்திருக்கிறான். [QBR] நீர் மாசாவிலே லேவியின் ஜனங்களைச் சோதித்தீர். [QBR] மேரிபாவின் தண்ணீரிடத்திலே அவர்கள் உமது ஜனங்களாக இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தீர். [QBR]
உபாகமம் 33 : 9 (ERVTA)
கர்த்தாவே, அவர்கள் சொந்தக் குடும்பத்தை காட்டிலும் உமக்கென்று மிகவும் கவனம் செலுத்தினார்கள். [QBR] அவர்களது தந்தை மற்றும் தாயைப் பற்றியும் கவலைப்படவில்லை. [QBR] அவர்கள் தமது சகோதரர்களையும் அடையாளம் காணவில்லை. [QBR] அவர்கள் தங்கள் சொந்தப் பிள்ளைகள் மேலும் அக்கறை செலுத்தவில்லை. [QBR] ஆனால், அவர்கள் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். [QBR2] அவர்கள் உமது உடன்படிக்கையைக் காத்தார்கள். [QBR]
உபாகமம் 33 : 10 (ERVTA)
அவர்கள் உமது விதிகளை யாக்கோபிற்குப் போதிப்பார்கள். [QBR] அவர்கள் உமது சட்டத்தை இஸ்ரவேலுக்குப் போதிப்பார்கள். [QBR] அவர்கள் உமக்கு முன்னால் நறுமண பொருட்களை எரிப்பார்கள். [QBR2] அவர்கள் உமது பலிபீடத்தில் தகன பலிகளைச் செலுத்துவார்கள்.
உபாகமம் 33 : 11 (ERVTA)
“கர்த்தாவே, லேவியின் உடமைகளை ஆசீர்வதியும். [QBR2] அவன் செய்கின்றவற்றை ஏற்றுக்கொள்ளும். [QBR] அவனைத் தாக்குகிறவர்களை அழித்துப்போடும்! [QBR2] அவனது பகைவர்களைத் தோற்கடியும் அப்போது அவர்கள் மீண்டும் அவனை தாக்கமாட்டார்கள்.” [PS]
உபாகமம் 33 : 12 (ERVTA)
{பென்யமீனுக்கான ஆசீர்வாதம்} [PS] மோசே பென்யமீனைப் பற்றி இதனைச் சொன்னான்: “கர்த்தர் பென்யமீனை நேசிக்கிறார். [QBR2] பென்யமீன் அவர் அருகில் பாதுகாப்பாக வாழ்வான். [QBR] கர்த்தர் எல்லா நேரத்திலும் அவனைக் காப்பாற்றுகிறார். [QBR2] கர்த்தர் அவனது நாட்டில் வாழ்வார்.” [PS]
உபாகமம் 33 : 13 (ERVTA)
{யோசேப்புக்கான ஆசீர்வாதம்} [PS] மோசே யோசேப்பைப் பற்றி இதனைச் சொன்னான்: “கர்த்தர் யோசேப்பின் நாட்டை ஆசீர்வதிக்கட்டும். [QBR2] கர்த்தாவே, வானத்தின் மேலிருந்து மழையையும் பூமிக்குக் கீழிருந்து நீரூற்றுகளையும் அனுப்பும். [QBR]
உபாகமம் 33 : 14 (ERVTA)
அவர்களுக்குச் சூரியன் நல்ல கனியைக் கொடுக்கட்டும். [QBR2] ஒவ்வொரு மாதமும் அதன் நல்ல கனியைக் கொடுக்கட்டும். [QBR]
உபாகமம் 33 : 15 (ERVTA)
குன்றுகளும், பழைமையான மலைகளும் [QBR2] அவற்றின் சிறந்த கனியைத் தயார் செய்யட்டும். [QBR]
உபாகமம் 33 : 16 (ERVTA)
பூமி தனது சிறந்த பொருட்களை யோசேப்பிற்குத் தரட்டும். [QBR] யோசேப்பு தனது சகோதரர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டான். [QBR2] எனவே, எரியும் முட்செடிகளில் இருந்து கர்த்தர் தன்னிடமுள்ள சிறந்தவற்றை யோசேப்பிற்குக் கொடுக்கட்டும். [QBR]
உபாகமம் 33 : 17 (ERVTA)
யோசேப்பு பலமுள்ள காளையைப் போன்றிருக்கிறான். [QBR2] அவனது இரு மகன்களும் காளையின் கொம்புகளைப் போன்றுள்ளனர். [QBR] அவர்கள் மற்ற ஜனங்களைத் தாக்கிப் [QBR2] பூமியின் கடைசிவரை தள்ளுவர்! [QBR] ஆமாம், மனாசே ஆயிரக்கணக்கான ஜனங்களையும், [QBR2] எப்பிராயீம் பத்தாயிரக்கணக்கான ஜனங்களையும் தள்ளியிருக்கிறார்கள்.” [PS]
உபாகமம் 33 : 18 (ERVTA)
{செபுலோன் மற்றும் இசக்காருக்கான ஆசீர்வாதம்} [PS] மோசே இதனைச் செபுலோனுக்குச் சொன்னான்: “செபுலோன், நீ வெளியே போகும்போது மகிழ்ச்சியாய் இரு. [QBR2] இசக்கார், நீ உன் கூடாரங்களாகிய தாபரத்தில் மகிழ்ச்சியாய் இரு. [QBR]
உபாகமம் 33 : 19 (ERVTA)
அவர்கள் ஜனங்களை தங்கள் மலைக்கு அழைப்பார்கள். [QBR2] அவர்கள் அங்கே நல்ல பலிகளை செலுத்துவார்கள். [QBR] அவர்கள் கடலிலிருந்து செல்வங்களையும் [QBR2] கடற்கரையிலிருந்து பொக்கிஷங்களையும் எடுப்பார்கள்.” [PS]
உபாகமம் 33 : 20 (ERVTA)
{காத்துக்குரிய ஆசீர்வாதம்} [PS] மோசே இதனைச் சொன்னார். “தேவனைப் போற்றுங்கள்.அவர் காத்திற்கு மிகுதியான நாட்டைக் கொடுத்தவர்! [QBR2] காத் ஒரு சிங்கத்தைப் போன்றவன். அவன்படுத்துக் காத்திருக்கிறான். பிறகு, அவன் தாக்கி மிருகத்தைத் துண்டுகளாகக் கிழிப்பான். [QBR]
உபாகமம் 33 : 21 (ERVTA)
அவன் அவனுக்குரிய சிறந்த பகுதியைத் தேர்ந்தெடுக்கிறான். [QBR2] அவன் அரசனின் பாகத்தை எடுக்கிறான். [QBR] ஜனங்களின் தலைவர்கள் அவனிடம் வருகிறார்கள். [QBR2] கர்த்தர் சொன்ன நல்லவற்றை அவன் செய்கிறான். [QBR2] இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சரியானதை அவன் செய்கிறான்.” [PS]
உபாகமம் 33 : 22 (ERVTA)
{தாணுக்குரிய ஆசீர்வாதம்} [PS] மோசே தாணைப்பற்றி இதனைச் சொன்னான்: “தாண் சிங்கத்தின் குட்டியாக இருக்கிறான். [QBR2] அது பாசானிலிருந்து வெளியே குதித்தது.” [PS]
உபாகமம் 33 : 23 (ERVTA)
{நப்தலிக்கான ஆசீர்வாதம்} [PS] மோசே நப்தலியைப் பற்றி இதனைச் சொன்னான்: “நப்தலி, ஏராளமான நல்லவற்றைப் பெறுவாய். [QBR2] கர்த்தர் உன்னை உண்மையாக ஆசீர்வதிப்பார். [QBR2] நீ கலிலேயா ஏரி உள்ள நாட்டைப் பெறுவாய்.” [PS]
உபாகமம் 33 : 24 (ERVTA)
{ஆசேருக்கான ஆசீர்வாதம்} [PS] மோசே ஆசேரைப் பற்றி இதனைச் சொன்னான்: “மகன்கள் அனைவரிலும், ஆசீர்வதிக்கப்பட்டவனாக ஆசேர் இருக்கிறான். [QBR2] அவன் தனது சகோதரர்களுக்கு பிரியமானவனாக இருக்கட்டும். அவன் தனது கால்களை எண்ணெயில் கழுவட்டும். [QBR]
உபாகமம் 33 : 25 (ERVTA)
உனது வாசல்கள் இரும்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பூட்டுகளைப் பெறட்டும். [QBR2] உனது வாழ்நாள் முழுவதும் நீ பலத்தோடு இருப்பாய்.”
உபாகமம் 33 : 26 (ERVTA)
{மோசே தேவனைப் புகழுகிறான்} [PS] “யெஷுரனுடைய, தேவனைப் போன்றவர் எவருமில்லை! [QBR2] தேவன் உனக்கு உதவுவதற்காகத் தமது மகிமையோடு மேகங்களின் மேல் சவாரி செய்து வானங்களின் மேல் வருகிறார். [QBR]
உபாகமம் 33 : 27 (ERVTA)
தேவன் என்றென்றும் வாழ்கிறார். [QBR2] அவர் உனது பாதுகாப்பான இடம். [QBR] தேவனின் வல்லமை என்றென்றும் தொடரும்! [QBR2] அவர் உன்னைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார். [QBR] உனது பகைவர்கள் உன் நாட்டை விட்டு விலகும்படி தேவன் துரத்துவார். [QBR] அவர், ‘பகைவரை அழித்துப்போடு’ என்று சொல்லுவார். [QBR]
உபாகமம் 33 : 28 (ERVTA)
எனவே இஸ்ரவேல் பாதுகாப்பில் வாழும். [QBR2] யாக்கோபின் ஊற்று அவர்களுக்கு உரியதாக இருக்கும். [QBR] அவர்கள் தானியமும், திராட்சை ரசமும் நிறைந்த நாட்டைப் பெறுவார்கள். [QBR2] அந்த நாடு மிகுதியான மழையைப் பெறும். [QBR]
உபாகமம் 33 : 29 (ERVTA)
இஸ்ரவேலே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். [QBR2] வேறு எந்த நாடும் உன்னைப் போன்றில்லை. [QBR] கர்த்தர் உன்னைக் காப்பாற்றினார். [QBR2] கர்த்தர் உனக்குப் பாதுகாப்பான கேடயத்தைப் போன்றிருக்கிறார்! [QBR2] கர்த்தர் பலமுள்ள வாளைப் போன்றும் இருக்கிறார். [QBR] உனது பகைவர்கள் உனக்குப் பயப்படுவார்கள். [QBR2] நீ அவர்களது பரிசுத்த இடங்களை மிதிப்பாய்!” [PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29

BG:

Opacity:

Color:


Size:


Font: