2 இராஜாக்கள் 20 : 1 (ERVTA)
அப்போது, எசேக்கியா நோயுற்று மரண நிலையை நெருங்கினான். ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எசேக்கியாவிடம் சென்று, "நீ உனது வீட்டை ஒழுங்குப்படுத்திவிடு. ஏனெனில், நீ மரிக்கப்போகிறாய். நீ வாழப் போவதில்லை! என்று கர்த்தர் கூறுகிறார்" என்றான்.
2 இராஜாக்கள் 20 : 2 (ERVTA)
எசேக்கியா தனது முகத்தைச் சுவரின் பக்கம் திருப் பிக்கொண்டான். அவன் கர்த்தரிடம் ஜெபம் செய்து,
2 இராஜாக்கள் 20 : 3 (ERVTA)
"கர்த்தாவே! நான் உண்மையாக என் முழு மனதோடு உமக்கு சேவை செய்திருக்கிறேன் என்பதை நினைத்துப்பாரும். நீர் நல்லதென்று சொன்ன செயல்களை மட்டுமே நான் செய்திருக்கிறேன் என்றான். பிறகு ஏசேக்கியா மிகப்பலமாக அழுதான்.
2 இராஜாக்கள் 20 : 4 (ERVTA)
ஏசாயா பாதி முற்றத்தை விட்டு விலகு முன், கர்த்தருடைய செய்தி அவனுக்கு வந்தது. கர்த்தர் அவனிடம்,
2 இராஜாக்கள் 20 : 5 (ERVTA)
"திரும்பிப் போய் எசேக்கியாவிடம் பேசு. எனது ஜனங்களின் தலைவனான அவனிடம், ‘கர்த்தரும் உனது முற்பிதாவான தாவீதின் தேவனும் சொல்லுவதாவது, "நான் உனது ஜெபத்தைக் கேட்டேன். உனது கண்ணீரைப் பார்த்தேன். எனவே நான் உன்னைக் குணப்படுத்துவேன். மூன்றாவது நாள் நீ கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவாய்.
2 இராஜாக்கள் 20 : 6 (ERVTA)
நான் உனது வாழ்நாளில் 15 ஆண்டுகளை அதிகரித்திருக்கிறேன். நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய அரசனின் வல்லமையிலிருந்து காப் பாற்றியிருக்கிறேன். நான் இந்த நகரத்தைப் பாதுகாப்பேன். நான் இவற்றை எனக்காகவே செய்வேன். ஏனென்றால் எனது தொண்டன் தாவீதுக்கு வாக்குறுதியளித்திருக்கிறேன். என்று சொல்" என்று கூறினார்.
2 இராஜாக்கள் 20 : 7 (ERVTA)
பிறகு ஏசாயா அரசனிடம், "அத்திப் பழத்தின் அடையைப் பிசைந்து புண்களின் மேல் பற்று போடுங்கள்" என்றான். அவ்விதமாகவே அத்திப்பழத்தின் அடையைப் பிசைந்து எசேக்கியாவின் புண்ணின் மேல் பூசினார்கள். பிறகு எசேக்கியா குணமானான்.
2 இராஜாக்கள் 20 : 8 (ERVTA)
எசேக்கியா ஏசாயாவிடம், "கர்ததர் என்னைக் குணப்படுத்துவார் என்பதற்கான அடையாளம் எது? மூன்றாவது நாள் நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போவதற்கான அடையாளமும் எது?" என்று கேட்டான்.
2 இராஜாக்கள் 20 : 9 (ERVTA)
ஏசாயாவோ, "நீ என்ன விரும்புகிறாய்? நிழல் பத்தடி முன்னே போகவேண்டுமா, பத்தடி பின்னே போகவேண்டுமா? இதுதான் கர்த்தர் தான் சொன்னபடியே செய்வார் என்று நிரூபிப்பதற்கான அடையாளமாகும்" என்றான்.
2 இராஜாக்கள் 20 : 10 (ERVTA)
"நிழல் பத்தடி முன்னே போவது என்பது எளிதானது. அதைவிட நிழல் பத்தடிபின்னே போகவேண்டும்" என்று பதில் சொன்னான்.
2 இராஜாக்கள் 20 : 11 (ERVTA)
பிறகு ஏசாயா, கர்த்தரிடம் வேண்டுதல் செய்தான். கர்த்தரும் ஆகாசுடைய (சூரிய கடியாரத்தில்) காலடிக்கு முன்போன நிழல் பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்.
2 இராஜாக்கள் 20 : 12 (ERVTA)
அப்போது, பாபிலோனின் அரசனான பலாதானின் மகனான பெரோதாக் பலாதான் என்பவன் இருந்தான். அவன் எசேக்கியாவிற்காக சில அன்பளிப்புகளையும் கடிதங்களையும் கொடுத்து அனுப்பினான். எசேக்கியா நோயுற்றிருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டே அவன் இவ்வாறு செய்தான்.
2 இராஜாக்கள் 20 : 13 (ERVTA)
எசேக்கியா, பாபிலோனிலிருந்து வந்த ஜனங்களை வரவேற்றான். தன் வீட்டில் உள்ள விலைமதிப்புள்ள பொருட்களையெல்லாம் அவர்களுக்கு காட்டினான். அவன் பொன், வெள்ளி, வாசனைப் பொருட்கள் விலைமதிப்புள்ள தைலங்கள், ஆயுதங்கள் கருவூலத்திலுள்ள மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் காட்டினான். தனது அரண்மனையிலும் அரசாங்கத்திலும் அவன் அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவுமில்லை.
2 இராஜாக்கள் 20 : 14 (ERVTA)
பிறகு ஏசாயா தீர்க்கதரிசி அரசன் எசேக்கியாவிடம் வந்து, "இவர்கள் என்ன சொன்னார்கள்? இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?". என்று கேட்டான். எசேக்கியா, "இவர்கள் வெகுதூரத்திலுள்ள நாடான பாபிலோனிலிருந்து வருகிறார்கள்" என்று பதிலுரைத்தான்.
2 இராஜாக்கள் 20 : 15 (ERVTA)
"இவர்கள் உன் வீட்டில் எதையெல்லாம் பார்த்திருக்கிறார்கள்?". என்று ஏசாயா கேட்டான். அதற்கு எசேக்கியா, "இவர்கள் என் வீட்டிலுள்ள அனைத்தையும் பார்த்துவிட்டார்கள், நான் அவர்களுக்குக் காட்டாதது என் கருவூலத்தில் எதுவும் இல்லை" என்று சொன்னான்.
2 இராஜாக்கள் 20 : 16 (ERVTA)
பிறகு ஏசாயா எசேக்கியாவிடம், "கர்த்தரிடமிருந்து வார்த்தையைக் கேள்.
2 இராஜாக்கள் 20 : 17 (ERVTA)
உன்னாலும் உன் முற்பிதாக்களாலும் சேமித்து வைக்கப்பட்ட உன் வீட்டிலும் கருவூலத்திலுமுள்ள பொருட்கள் எல்லாம் பாபிலோனுக்கு எடுத்துச்செல்லும் காலம் வந்துக் கொண்டிருக்கிறது. எதுவும் மீதியாக வைக்கப்படாது. இதனைக் கர்த்தர் கூறுகிறார்.
2 இராஜாக்கள் 20 : 18 (ERVTA)
பாபிலோனியர்கள் உனது மகன்களையும் எடுத்துச்செல்வார்கள். பாபிலோனிய அரசனின் அரண் மனையில் உனது மகன்கள் அலிகளாக இருப்பார்கள்" என்றான்.
2 இராஜாக்கள் 20 : 19 (ERVTA)
பிறகு எசேக்கியா ஏசாயாவிடம், "கர்த்தரிடமிருந்து வந்த இந்த செய்தி நல்லது தான்" என்றான். மேலும் எசேக்கியா, "என் வாழ்நாளிலேயே உண்மையான சமாதானம் இருப்பது நல்லதுதான்" என்றான்.
2 இராஜாக்கள் 20 : 20 (ERVTA)
எசேக்கியா செய்த மற்ற அருஞ்செயல்களும் அவனது வல்லமையும் ‘யூத அரசர்களின் வரலாறு’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அதில் அவன் ஒரு குளத்தை உருவாக்கி, குழாய் மூலம் நகரத்திற்கு தண்ணீர் கொண்டு வந்ததும் சொல்லப்பட்டுள்ளன.
2 இராஜாக்கள் 20 : 21 (ERVTA)
[This verse may not be a part of this translation]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

BG:

Opacity:

Color:


Size:


Font: