சங்கீதம் 76 : 1 (ECTA)
யூதாவில் கடவுள் தம்மையே வெளிப்படுத்தியுள்ளார்; இஸ்ரயேலில் அவரது பெயர் மாண்புடன் திகழ்கின்றது.
சங்கீதம் 76 : 2 (ECTA)
எருசலேமில் அவரது கூடாரம் இருக்கின்றது; சீயோனில் அவரது உறைவிடம் இருக்கின்றது.
சங்கீதம் 76 : 3 (ECTA)
அங்கே அவர் மின்னும் அம்புகளை முறித்தெறிந்தார். கேடயத்தையும் வாளையும் படைக்கலன்களையும் தகர்த்தெறிந்தார். (சேலா)
சங்கீதம் 76 : 4 (ECTA)
ஆண்டவரே, நீர் ஒளிமிக்கவர்; உமது மாட்சி என்றுமுள மலைகளினும் உயர்ந்தது.
சங்கீதம் 76 : 5 (ECTA)
நெஞ்சுறுதி கொண்ட வீரர் கொள்ளையிடப்பட்டனர்; அவர்கள் துயிலில் ஆழ்ந்துவிட்டனர்; அவர்களின் கைகள் போர்க்கலன்களைத் தாங்கும் வலுவிழந்தன.
சங்கீதம் 76 : 6 (ECTA)
யாக்கோபின் கடவுளே! உமது கடிந்துரையால் குதிரைகளும் வீரர்களும் மடிந்து விழுந்தனர்.
சங்கீதம் 76 : 7 (ECTA)
ஆண்டவரே, நீர் அஞ்சுதற்கு உரியவர்; நீர் சினமுற்ற வேளையில் உம் திருமுன் நிற்கக்கூடியவர் யார்?
சங்கீதம் 76 : 8 (ECTA)
கடவுளே! நீதித் தீர்ப்பளிக்க நீர் எழுந்தபோது, மண்ணுலகில் ஒடுக்கப்பட்டோரைக் காக்க விழைந்தபோது, வானின்று தீர்ப்பு முழங்கச் செய்தீர்;
சங்கீதம் 76 : 9 (ECTA)
பூவுலகு அச்சமுற்று அடங்கியது. (சேலா)
சங்கீதம் 76 : 10 (ECTA)
மாறாக, சினமுற்ற மாந்தர், உம்மைப் புகழ்தேத்துவர்; உமது கோபக் கனலுக்குத் தப்பியோர் உமக்கு விழாக்கொண்டாடுவர்;
சங்கீதம் 76 : 11 (ECTA)
உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பொருத்தனை செய்து அதை நிறைவேற்றுங்கள்; அவரைச் சுற்றலுமிருக்கிற அனைவரும் அஞ்சுதற்குரிய அவருக்கே காணிக்கைகளைக் கொண்டுவருவராக!
சங்கீதம் 76 : 12 (ECTA)
செருக்குற்ற தலைவர்களை அவர் அழிக்கின்றார்; பூவுலகின் அரசர்க்குப் பேரச்சம் ஆனார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

BG:

Opacity:

Color:


Size:


Font: