சங்கீதம் 6 : 1 (ECTA)
ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும்.
சங்கீதம் 6 : 2 (ECTA)
ஆண்டவரே, எனக்கு இரங்கும்; ஏனெனில், நான் தளர்ந்து போனேன்; ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்; ஏனெனில், என் எலும்புகள் வலுவிழந்து போயின.
சங்கீதம் 6 : 3 (ECTA)
என் உயிர் ஊசலாடுகின்றது; ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?
சங்கீதம் 6 : 4 (ECTA)
ஆண்டவரே, திரும்பும்; என் உயிரைக் காப்பாற்றும், உமது பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும்.
சங்கீதம் 6 : 5 (ECTA)
இறந்தபின் உம்மை நினைப்பவர் எவருமில்லை; பாதாளத்தில் உம்மைப் போற்றுபவர் யார்?
சங்கீதம் 6 : 6 (ECTA)
பெருமூச்சினால் இளைத்துப் போனேன்; ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது.
சங்கீதம் 6 : 7 (ECTA)
துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று; என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று.
சங்கீதம் 6 : 8 (ECTA)
தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்; ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்து விட்டார்.
சங்கீதம் 6 : 9 (ECTA)
ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்; அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.
சங்கீதம் 6 : 10 (ECTA)
என் எதிரிகள் யாவரும் வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்; அவர்கள் திடீரென நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10

BG:

Opacity:

Color:


Size:


Font: