சங்கீதம் 49 : 1 (ECTA)
மக்களினங்களே! அனைவரும் இதைக் கேளுங்கள்; மண்ணுலகில் வாழ்வோரே, யாவரும் செவிகொடுங்கள்.
சங்கீதம் 49 : 2 (ECTA)
தாழ்ந்தோரே, உயர்ந்தோரே, செல்வர்களே, ஏழைகளே, அனைவரும் ஒருங்கே செவிகொடுங்கள்.
சங்கீதம் 49 : 3 (ECTA)
என் வாய் ஞானமிகு சொற்களை உரைக்கும்; என் மனம் விவேகமானவற்றை ஆழ்ந்து சிந்திக்கும்.
சங்கீதம் 49 : 4 (ECTA)
நீதிமொழிக்குச் செவிசாய்ப்பதில் நான் கருத்தாய் உள்ளேன்; யாழிசைத்து அதன் புதிரை விடுவிப்பேன்.
சங்கீதம் 49 : 5 (ECTA)
துன்பக்காலத்தில் நான் அஞ்சுவானேன்? என்னை வளைத்துக்கொண்டு கொடுமைப்படுத்தும் வஞ்சகர்க்கு நான் அஞ்சுவானேன்?
சங்கீதம் 49 : 6 (ECTA)
தம் செல்வத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றவரோ தம் செல்வப்பெருக்கைக் குறித்துப் பெருமையாகப் பேசுகின்றனர்.
சங்கீதம் 49 : 7 (ECTA)
உண்மையில், தம்மைதாமே மீட்டுக்கொள்ள எவராலும் இயலாது; தம் உயிரை மீட்க எதையும் கடவளுக்குத் தர இயலாது.
சங்கீதம் 49 : 8 (ECTA)
மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது; எவராலும் அதனைச் செலுத்த இயலாது.
சங்கீதம் 49 : 9 (ECTA)
ஒருவரால் என்றென்றும் வாழ்ந்திடமுடியுமா? படுகுழியைக் காணாமல் இருந்திட முடியுமா?
சங்கீதம் 49 : 10 (ECTA)
ஏனெனில், அறிவிலிகளும் மதிகேடரும் மாண்டழிவதுபோல, ஞானமுள்ளோரும் உயிர் துறப்பதை நாம் காண்கின்றோம் அன்றோ! அவர்கள் எல்லாருமே தத்தம் செல்வத்தைப் பிறருக்கு விட்டுச்செல்கின்றனர்.
சங்கீதம் 49 : 11 (ECTA)
கல்லறைகளே! அவர்களுக்கு நிலையான வீடுகள்! அவையே எல்லாத் தலைமுறைக்கும் அவர்கள் குடியிருப்பு! அவர்களுக்குத் தங்கள் பெயரில் நிலபுலன்கள் இருந்தும் பயனில்லை.
சங்கீதம் 49 : 12 (ECTA)
ஒருவர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது; அவர் விலங்குகளைப் போலவே மாண்டழிவார்.
சங்கீதம் 49 : 13 (ECTA)
தம்மையே மதியீனமாக நம்பியிருப்போரின் முடிவு இதுவே; தம் சொத்திலேயே மகிழ்ச்சி கொள்வோரின் கதி இதுவே. (சேலா)
சங்கீதம் 49 : 14 (ECTA)
பலியாடுகளைப் போலவே அவர்களும் சாவுக்கெனக் குறிக்கப்பட்டுள்ளனர்; சாவே அவர்களின் மேய்ப்பன்; அவர்கள் நேரடியாகக் கல்லறைக்குள் செல்வர்; அப்பொழுது அவர்களது உருவம் மாய்ந்து போகும்; பாதாளமே அவர்களது குடியிருப்பு.
சங்கீதம் 49 : 15 (ECTA)
ஆனால், கடவுள் என்னுயிரை மீட்பது உறுதி; பாதாளத்தின் பிடியினின்று விடுவித்து என்னைத் தூக்கி நிறுத்துவார். (சேலா)
சங்கீதம் 49 : 16 (ECTA)
சிலர் செல்வர் ஆனாலோ, அவர்களின் குடும்பச் செல்வம் பெருகினாலோ, அவர்களைக் கண்டு நிலைகுலையாதே!
சங்கீதம் 49 : 17 (ECTA)
ஏனெனில் சாகும்போது அவர்கள் எதையும் எடுத்துப் போவதில்லை; அவர்களது செல்வமும் அவர்கள்பின் செல்வதில்லை.
சங்கீதம் 49 : 18 (ECTA)
உயிரோடிருக்கையில் அவர்கள் தம்மை ஆசிபெற்றோர் என்று கருதினாலும், 'நீங்கள் நன்மையையே நாடினீர்கள்' என மக்கள் அவர்களைப் புகழ்ந்தாலும்,
சங்கீதம் 49 : 19 (ECTA)
அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்; ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை.
சங்கீதம் 49 : 20 (ECTA)
மனிதர் தம் மேன்மையிலேயே நிலைத்திருக்க முடியாது; அவர்கள் விலங்குகளைப் போலவே மாண்டழிவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

BG:

Opacity:

Color:


Size:


Font: