சங்கீதம் 125 : 1 (ECTA)
ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர் சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர்.
சங்கீதம் 125 : 2 (ECTA)
எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பதுபோல, ஆண்டவர் இப்போதும்; எப்போதும் தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.
சங்கீதம் 125 : 3 (ECTA)
நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில் பொல்லாரின் ஆட்சி நிலைக்காது; இல்லையெனில் நல்லாரும் பொல்லாதது செய்ய நேரிடும்.
சங்கீதம் 125 : 4 (ECTA)
ஆண்டவரே! நல்லவர்களுக்கும் நேரிய இதயமுள்ளவர்களுக்கும் நீர் நன்மை செய்தருளும்.
சங்கீதம் 125 : 5 (ECTA)
கோணல் வழிநோக்கித் திரும்புவோரை ஆண்டவர் தீயவரோடு சேர்த்து இழுத்துச் செல்வார். இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!

1 2 3 4 5

BG:

Opacity:

Color:


Size:


Font: