சங்கீதம் 124 : 1 (ECTA)
ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் - இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!
சங்கீதம் 124 : 2 (ECTA)
ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
சங்கீதம் 124 : 3 (ECTA)
அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
சங்கீதம் 124 : 4 (ECTA)
அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;
சங்கீதம் 124 : 5 (ECTA)
கொந்தளிக்கும் வெள்ளம்; நம்மீது பாய்ந்தோடியிருக்கும்.
சங்கீதம் 124 : 6 (ECTA)
ஆண்டவர் போற்றி! போற்றி! எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை.
சங்கீதம் 124 : 7 (ECTA)
வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்; கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.
சங்கீதம் 124 : 8 (ECTA)
ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே!

1 2 3 4 5 6 7 8

BG:

Opacity:

Color:


Size:


Font: