சங்கீதம் 120 : 1 (ECTA)
நான் இன்னலுற்ற வேளையில் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; அவரும் எனக்குச் செவி சாய்த்தார்.
சங்கீதம் 120 : 2 (ECTA)
ஆண்டவரே! பொய் பேசும் வாயினின்று என்னை விடுவித்தருளும்; வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும்.
சங்கீதம் 120 : 3 (ECTA)
வஞ்சகம் பேசும் நாவே! உனக்கு என்ன கிடைக்கும்? அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?
சங்கீதம் 120 : 4 (ECTA)
வீரனின் கூரிய அம்புகளும் தணல் வீசும் கரிகளும்தான் கிடைக்கும்!
சங்கீதம் 120 : 5 (ECTA)
ஐயோ! நான் மேசேக்கில் அன்னியனாய் வாழ்ந்தபோதும், கேதாரில் கூடாரங்களில் தங்க நேர்ந்தபோதும்,
சங்கீதம் 120 : 6 (ECTA)
சமாதானத்தைக் குலைப்பவர்களோடு, நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.
சங்கீதம் 120 : 7 (ECTA)
நான் சமாதானத்தை நாடுவேன்; அதைப் பற்றியே பேசுவேன்; ஆனால், அவர்களுக்கோ போர் ஒன்றில்தான் நாட்டம்!

1 2 3 4 5 6 7

BG:

Opacity:

Color:


Size:


Font: