சங்கீதம் 106 : 1 (ECTA)
அல்லேலூயா! ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்! என்றென்றுமுள்ளது அவரது பேரன்பு!
சங்கீதம் 106 : 2 (ECTA)
ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை யாரால் இயம்ப இயலும்? ஆவர்தம் புகழை யாரால் விளம்பக் கூடும்?
சங்கீதம் 106 : 3 (ECTA)
நீதிநெறி காப்போர் பேறு பெற்றோர்! எப்போதும் நேரியதே செய்வோர் பேறுபேற்றோர்!
சங்கீதம் 106 : 4 (ECTA)
ஆண்டவரே! நீர் உம்மக்கள்மீது இரக்கம் காட்டும்போது என்னை நினைவு கூரும்! அவர்களை நீர் விடுவிக்கும்போது எனக்கும் துணைசெய்யும்!
சங்கீதம் 106 : 5 (ECTA)
நீர் தேர்ந்தெடுத்த மக்களின் நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்; உம்முடைய மக்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்ளும்படிச் செய்யும்! அப்போது, உமது உரிமைச் சொத்தான மக்களோடு உம்மைப் போற்றிட இயலும்.
சங்கீதம் 106 : 6 (ECTA)
எங்கள் மூதாதையரின் வழிநடந்து, நாங்களும் பாவம் செய்தோம்; குற்றம் புரிந்தோம்; தீமை செய்தோம்.
சங்கீதம் 106 : 7 (ECTA)
எங்கள் மூதாதையர் எகிப்தில் நீர்செய்த வியத்தகு செயல்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை; உமது மாபெரும் பேரன்பை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை; மாறாக உன்னதமானவரை எதிர்த்துச் செங்கடல் ஓரத்தில் கலகம் செய்தனர்.
சங்கீதம் 106 : 8 (ECTA)
அவரோ தமது பெயரின் பொருட்டு அவர்களை விடுவித்தார்; இவ்வாறு அவர் தமது வலிமையை வெளிப்படுத்தினார்.
சங்கீதம் 106 : 9 (ECTA)
அவர் செங்கடலை அதட்டினார்; அது உலர்ந்து போயிற்று; பாலை நிலத்தில் நடத்திச் செல்வது போல் அவர்களை ஆழ்கடல் வழியே நடத்திச்சென்றார்.
சங்கீதம் 106 : 10 (ECTA)
எதிரியின் கையினின்று அவர்களை விடுவித்தார்; பகைவரின் பிடியினின்று அவர்களை மீட்டார்.
சங்கீதம் 106 : 11 (ECTA)
அவர்களுடைய எதிரிகளைக் கடல்நீர் மூழ்கடித்தது; அவர்களுள் ஒருவர்கூட எஞ்சியிருக்கவில்லை.
சங்கீதம் 106 : 12 (ECTA)
அப்பொழுது, அவர்கள் அவருடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்தார்கள்; அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.
சங்கீதம் 106 : 13 (ECTA)
ஆயினும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவிலேயே மறந்துவிட்டார்கள்; அவரது அறிவுரைக்காக அவர்கள் காத்திருக்கவில்லை.
சங்கீதம் 106 : 14 (ECTA)
பாலைநிலத்தில் அவர்கள் பெருவிருப்புக்கு இடங்கொடுத்தார்கள். பாழ்வெளியில் அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள்.
சங்கீதம் 106 : 15 (ECTA)
அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குச் கொடுத்தார்; அவர்களின் உயிரை அழிக்குமாறு அவர்கள்மீது நோயை அனுப்பினார்.
சங்கீதம் 106 : 16 (ECTA)
பாளையத்தில் இருக்கும்போது மோசேயின்மீதும், ஆண்டவருக்காகத் திருநிலைபெற்ற ஆரோன்மீதும், அவர்கள் பொறாமை கொண்டார்கள்.
சங்கீதம் 106 : 17 (ECTA)
நிலம் பிளந்து தாத்தானை விழுங்கியது; அபிராமின் கும்பலை அப்படியே புதைத்து விட்டது.
சங்கீதம் 106 : 18 (ECTA)
அக்கும்பலிடையே நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது; தீயோரைத் எரித்தது.
சங்கீதம் 106 : 19 (ECTA)
அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக் குட்டியைச் செய்துகொண்டனர்; வார்ப்புச் சிலையை விழுந்து வணங்கினர்;
சங்கீதம் 106 : 20 (ECTA)
தங்கள் "மாட்சி "க்குப் பதிலாக புல்தின்னும் காளையின் உருவத்தைச் செய்து கொண்டனர்;
சங்கீதம் 106 : 21 (ECTA)
தங்களை விடுவித்த இறைவனை மறந்தனர்; எகிப்தில் பெரியன புரிந்தவரை மறந்தனர்;
சங்கீதம் 106 : 22 (ECTA)
காம் நாட்டில் அவர் செய்த வியத்தகு செயல்களை மறந்தனர்; செங்கடலில் அவர் செய்த அச்சுறுத்தும் செயல்களையும் மறந்தனர்.
சங்கீதம் 106 : 23 (ECTA)
ஆகையால், அவர்களை அவர் அழித்துவிடுவதாகக் கூறினார்; ஆனால், அவரால் தேர்ந்து கொள்ளப்பட்ட மோசே, அவர்முன் உடைமதில் காவலர் போல் நின்று அவரது கடுஞ்சினம் அவர்களை அழிக்காதவாறு தடுத்தார்.
சங்கீதம் 106 : 24 (ECTA)
அருமையான நாட்டை அவர்கள் இகழ்ந்தார்கள்; அவரது வாக்குறுதியில் நம்பிக்கை கொள்ளவில்லை.
சங்கீதம் 106 : 25 (ECTA)
அவர்கள் தங்களின் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள்; ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை.
சங்கீதம் 106 : 26 (ECTA)
ஆகவே அவர் அவர்களுக்கு எதிராகத் தம் கையை ஓங்கி 'நான் உங்களைப் பாலைநிலத்தில் வீழ்ச்சியுறச் செய்வேன்;
சங்கீதம் 106 : 27 (ECTA)
உங்கள் வழிமரபினரை வேற்றினங்களிடையிலும் அன்னிய நாடுகளிலும் சிதறடிப்பேன்' என்றார்.
சங்கீதம் 106 : 28 (ECTA)
பின்னர் அவர்கள் பாகால்பெயோரைப் பற்றிக் கொண்டார்கள். உயிரற்ற தெய்வங்களுக்குப் பலியிட்டவற்றை உண்டார்கள்;
சங்கீதம் 106 : 29 (ECTA)
இவ்வாறு தங்கள் செய்கைகளினால் அவருக்குச் சினமூட்டினார்கள்; ஆகவே, கொள்ளைநோய் அவர்களிடையே பரவிற்று.
சங்கீதம் 106 : 30 (ECTA)
பினகாசு கொதித்தெழுந்து தலையிட்டதால் கொள்ளைநோய் நீங்கிற்று.
சங்கீதம் 106 : 31 (ECTA)
இதனால், தலைமுறை தலைமுறையாக என்றென்றும், அவரது செயல் நீதியாகக் கருதப்பட்டது.
சங்கீதம் 106 : 32 (ECTA)
மெரிபாவின் ஊற்றினருகில் அவருக்குச் சினமூட்டினார்கள். அவர்களின் பொருட்டு மோசேக்கும் தீங்கு நேரிட்டது.
சங்கீதம் 106 : 33 (ECTA)
மோசேக்கு அவர்கள் மனக்கசப்பை ஏற்படுத்தியதால் அவர் முன்பின் பாராது பேசினார்.
சங்கீதம் 106 : 34 (ECTA)
ஆண்டவர் இட்ட கட்டளைக்கு மாறாக, மக்களினங்களை அவர்கள் அழிக்கவில்லை.
சங்கீதம் 106 : 35 (ECTA)
வேற்றினத்தாரோடு கலந்துறவாடி, அவர்களின் வழக்கங்களைக் கற்றுக்கொண்டனர்;
சங்கீதம் 106 : 36 (ECTA)
அவர்களின் தெய்வச் சிலைகளைத் தொழுதனர்; அவையே அவர்களுக்குக் கண்ணிகளாயின.
சங்கீதம் 106 : 37 (ECTA)
அவர்கள் தங்கள் புதல்வர், புதல்வியரைப் பேய்களுக்குப் பலியிட்டனர்;
சங்கீதம் 106 : 38 (ECTA)
மாசற்ற இரத்தத்தை, தங்கள் புதல்வர் புதல்வியரின் இரத்தத்தைச் சிந்தினர்; கானான் நாட்டுத் தெய்வங்களின் சிலைகளுக்கு அவர்களைப் பலியிட்டார்கள்; அவர்களின் இரத்தத்தால் நாடு தீட்டுப்பட்டது.
சங்கீதம் 106 : 39 (ECTA)
அவர்கள் தங்கள் செயல்களால் தங்களைக் கறைப்படுத்திக் கொண்டனர்; தங்கள் செயல்கள் மூலம் வேசித்தனம் செய்தனர்.
சங்கீதம் 106 : 40 (ECTA)
எனவே, ஆண்டவரின் சினம் அவர்தம் மக்களுக்கெதிராகப் பற்றியெரிந்தது; தமது உரிமைச் சொத்தை அவர் அருவருத்தார்.
சங்கீதம் 106 : 41 (ECTA)
வேற்றினத்தாரின் கையில் அவர் அவர்களை ஒப்படைத்தார்; அவர்களை வெறுத்தோரே அவர்களை ஆட்சி செய்தனர்.
சங்கீதம் 106 : 42 (ECTA)
அவர்கள் எதிரிகள் அவர்களை ஒடுக்கினர்; தங்கள் கையின்கீழ் அவர்களைத் தாழ்த்தினர்.
சங்கீதம் 106 : 43 (ECTA)
பன்முறை அவர் அவர்களை விடுவித்தார்; அவர்களோ திட்டமிட்டே அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்; தங்கள் தீச்செயல்களினால் அவர்கள் தாழ்நிலை அடைந்தனர்.
சங்கீதம் 106 : 44 (ECTA)
எனினும் அவர் அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து, அவர்களது துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார்.
சங்கீதம் 106 : 45 (ECTA)
அவர்களுக்கு உதவுமாறு, அவர் தமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்; தமது பேரன்பிற்கேற்பக் கழிவிரக்கம் கொண்டார்;
சங்கீதம் 106 : 46 (ECTA)
அவர்களைச் சிறைசெய்த அனைவர் முன்னிலையிலும் அவர்கள் இரக்கம் பெறும்படி செய்தார்.
சங்கீதம் 106 : 47 (ECTA)
எங்கள் கடவுளாகிய ஆண்டவரே! எங்களை விடுவித்தருளும்; வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும்; அப்பொழுது நாங்கள் உமது திருப்பெயருக்கு நன்றி செலுத்துவோம்; உம்மைப் புகழ்வதில் பெருமை கொள்வோம்.
சங்கீதம் 106 : 48 (ECTA)
இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக! மக்கள் அனைவரும் "ஆமென்" எனச் சொல்வார்களாக! அல்லேலூயா!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48

BG:

Opacity:

Color:


Size:


Font: