நீதிமொழிகள் 2 : 1 (ECTA)
பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி,
நீதிமொழிகள் 2 : 2 (ECTA)
என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள்.
நீதிமொழிகள் 2 : 3 (ECTA)
ஆம், நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து, மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு.
நீதிமொழிகள் 2 : 4 (ECTA)
செல்வத்தை நாடுவதுபோல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு.
நீதிமொழிகள் 2 : 5 (ECTA)
அப்பொழுது, ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இன்னதென்பதை உணர்ந்து கொள்வாய். கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய்.
நீதிமொழிகள் 2 : 6 (ECTA)
ஏனெனில் ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே, அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே.
நீதிமொழிகள் 2 : 7 (ECTA)
நேர்மையாளருக்கு அவர் துணை செய்யக் காத்திருக்கின்றார்; மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கின்றார்.
நீதிமொழிகள் 2 : 8 (ECTA)
நேர்மையாளரின் பாதைகளை அவர் பாதுகாக்கின்றார்; தம் அடியாரின் வழிகளைக் காவல் செய்கின்றார்.
நீதிமொழிகள் 2 : 9 (ECTA)
எனவே, நீ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நலமார்ந்த நெறிகள் அனைத்தையும் தெரிந்துகொள்வாய்.
நீதிமொழிகள் 2 : 10 (ECTA)
ஞானம் உன் உள்ளத்தில் குடிபுகும்; அறிவு உன் இதயத்திற்கு இன்பம் தரும்.
நீதிமொழிகள் 2 : 11 (ECTA)
அப்பொழுது, நுண்ணறிவு உனக்குக் காவலாய் இருக்கும்; மெய்யறிவு உன்னைக் காத்துக்கொள்ளும்.
நீதிமொழிகள் 2 : 12 (ECTA)
நீ தீய வழியில் செல்லாமலும், வஞ்சகம் பேசும் மனிதரிடம் அகப்படாமலும் இருக்கும்படி, அது உன்னைப் பாதுகாக்கும்.
நீதிமொழிகள் 2 : 13 (ECTA)
நேர்மையான வழியை விட்டு விலகி, இருளான பாதையில் நடப்போரின் கைக்கு உன்னைத் தப்புவிக்கும்.
நீதிமொழிகள் 2 : 14 (ECTA)
அவர்கள் தீமை செய்து களிக்கின்றவர்கள்.
நீதிமொழிகள் 2 : 15 (ECTA)
அவர்களுடைய வழிகள் கோணலானவை. அவர்களுடைய பாதைகள் நேர்மையற்றவை.
நீதிமொழிகள் 2 : 16 (ECTA)
ஞானம் உன்னைக் கற்புநெறி தவறியளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்.
நீதிமொழிகள் 2 : 17 (ECTA)
அவள் இளமைப் பருவத்தில் தான் மணந்த கணவனைக் கைவிட்டவள்; தான் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்தவள்.
நீதிமொழிகள் 2 : 18 (ECTA)
அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றது; அவளின் வழிகள் இறந்தோரிடத்திற்குச் செல்கின்றன.
நீதிமொழிகள் 2 : 19 (ECTA)
அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை; வாழ்வெனும்; பாதையை அவன் மீண்டும் அடைவதில்லை
நீதிமொழிகள் 2 : 20 (ECTA)
எனவே, நீ நல்லாரின் நெறியில் நடப்பாயாக! நேர்மையாளரின் வழியைப் பின்பற்றுவாயாக!
நீதிமொழிகள் 2 : 21 (ECTA)
நேர்மையாளரே உலகில் வாழ்வர்; மாசற்றாரே அதில் நிலைத்திருப்பர்.
நீதிமொழிகள் 2 : 22 (ECTA)
பொல்லாரோ உலகினின்று பூண்டோடு அழிவர்; நயவஞ்சகர் அதனின்று வேரோடு களைந்தெறியப்படுவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: