எண்ணாகமம் 7 : 1 (ECTA)
மோசே திருஉறைவிடத்தை எழுப்பிமுடித்து, அதனை அதன் அனைத்துப் பொருள்களோடும் திருப்பொழிவு செய்து அர்ப்பணித்து. பீடத்தையும், அதன் துணைக்கலன்களோடு திருப்பொழிவு செய்து அர்ப்பணித்த நாளில்,
எண்ணாகமம் 7 : 2 (ECTA)
கணக்கிடப்பட்டோர்க்கு மேற்பார்வையாளராயிருந்த இஸ்ரயேல் தலைவர்கள், அவர்கள் மூதாதையர் வீட்டுத்தலைவர்கள், குலத் தலைவர்கள் ஆகியோர் காணிக்கைகள் கொணர்ந்தனர்.
எண்ணாகமம் 7 : 3 (ECTA)
அவர்கள் ஆண்டவர் திருமுன் இரு தலைவர்களுக்கு ஒரு வண்டியும், ஒவ்வொருவருக்கும் ஒரு மாடுமாக ஆறுகூண்டு வண்டிகளையும், பன்னிரண்டு மாடுகளையும் திருஉறைவிடத்திற்குத் தங்கள் காணிக்கைகளாகக் கொண்டு வந்தனர்.
எண்ணாகமம் 7 : 4 (ECTA)
பின் ஆண்டவர் மோசேயிடம் கூறியது;
எண்ணாகமம் 7 : 5 (ECTA)
"சந்திப்புக் கூடாரப் பணியைச் செய்வதற்குப் பயன்படும்படி இவற்றைப் பெற்றுக்கொள்; ஒவ்வொருவரின் பணிக்கும் ஏற்ப இவற்றை லேவியரிடம் ஒப்படைப்பாய் ".
எண்ணாகமம் 7 : 6 (ECTA)
அவ்வாறே மோசே வண்டிகளையும் மாடுகளையும் பெற்று லேவியரிடம் ஒப்படைத்தார்.
எண்ணாகமம் 7 : 7 (ECTA)
கேர்சோன் புதல்வருக்கு அவரவர் பணிக்கேற்ப இரண்டு வண்டிகளையும் நான்கு மாடுகளையும் கொடுத்தார்.
எண்ணாகமம் 7 : 8 (ECTA)
அவர் மெராரிப் புதல்வருக்கு அவர்கள் பணிக்கேற்ப நான்கு வண்டிகளையும், எட்டு மாடுகளையும் கொடுத்தார்; இவர்கள் பணி குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமரின் மேற்பார்வையில் இருந்தது.
எண்ணாகமம் 7 : 9 (ECTA)
ஆனால் கோகாத்தின் புதல்வருக்கு அவர் ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் தோளில் வைத்துச் சுமக்க வேண்டிய புனிதப் பொருள்களைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்தனர்.
எண்ணாகமம் 7 : 10 (ECTA)
மேலும் பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்ட நாளில் அதன் அர்ப்பணத்துக்காகவும் தலைவர்கள் காணிக்கைகள் கொண்டு வந்து பலிபீடத்தின் முன்வைத்தனர்.
எண்ணாகமம் 7 : 11 (ECTA)
ஆண்டவர் மோசேயிடம் "நாளுக்கு ஒருவராகத் தலைவர்கள் தங்கள் காணிக்கைகளைப் பலிபீட அர்ப்பணத்திற்காகக் கொண்டு வரட்டும்" என்றார்.
எண்ணாகமம் 7 : 12 (ECTA)
முதல் நாளில் தம் காணிக்கையைக் கொண்டு வந்தவர் நகசோன், இவர் யூதா குலத்து அம்மினதாபின் மகன்.
எண்ணாகமம் 7 : 13 (ECTA)
அவரது காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று; உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது;
எண்ணாகமம் 7 : 14 (ECTA)
நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறையத் தூபம் இருந்தது;
எண்ணாகமம் 7 : 15 (ECTA)
இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று இவை எரிபலிக்குரியவை.
எண்ணாகமம் 7 : 16 (ECTA)
பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று.
எண்ணாகமம் 7 : 17 (ECTA)
நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக்கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து அம்மினதாபின மகன் நகசோனின் காணிக்கை இதுவே.
எண்ணாகமம் 7 : 18 (ECTA)
இரண்டாம் நாளில் காணிக்கை கொண்டு வந்தவர் இசக்கார் தலைவரான சூவாரின் மகன் நெத்தனியேல்.
எண்ணாகமம் 7 : 19 (ECTA)
அவர் கொண்டு வந்த காணிக்கை; தூயகச்செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
எண்ணாகமம் 7 : 20 (ECTA)
நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறையத் தூபம் இருந்தது.
எண்ணாகமம் 7 : 21 (ECTA)
இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரிபலிக்குரியவை.
எண்ணாகமம் 7 : 22 (ECTA)
பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று;
எண்ணாகமம் 7 : 23 (ECTA)
நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக்கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து சூவாரின் மகன் நெத்தனியேலின் காணிக்கை இதுவே.
எண்ணாகமம் 7 : 24 (ECTA)
மூன்றாம் நாள்; செபுலோன் மக்கள் தலைவரான கேலோனின் மகன் எலியாபு.
எண்ணாகமம் 7 : 25 (ECTA)
அவரது காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவு இருந்தது.
எண்ணாகமம் 7 : 26 (ECTA)
நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறையத் தூபம் இருந்தது.
எண்ணாகமம் 7 : 27 (ECTA)
இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று. ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று இவை எரிபலிக்குரியவை.
எண்ணாகமம் 7 : 28 (ECTA)
பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று;
எண்ணாகமம் 7 : 29 (ECTA)
நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து கேலோனின் மகன் எலியாபின் காணிக்கை இதுவே.
எண்ணாகமம் 7 : 30 (ECTA)
நான்காம் நாள்; ரூபன் மக்களின் தலைவர் எலிட்சூர்; இவர் செதேயூரின் மகன்.
எண்ணாகமம் 7 : 31 (ECTA)
அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
எண்ணாகமம் 7 : 32 (ECTA)
நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறைய தூபம் இருந்தது.
எண்ணாகமம் 7 : 33 (ECTA)
இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை.
எண்ணாகமம் 7 : 34 (ECTA)
பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
எண்ணாகமம் 7 : 35 (ECTA)
நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டுகள் செம்மறிக் கிடாய்கள் ஐந்து, செதேயூரின் புதல்வன் எலிட்சூரின் காணிக்கை இதுவே.
எண்ணாகமம் 7 : 36 (ECTA)
ஐந்தாம் நாள்; சிமியோன் மக்களின் தலைவர் செலுமியேல்; இவர் கரிசத்தாயின் மகன்.
எண்ணாகமம் 7 : 37 (ECTA)
அவர் காணிக்கை; தூயகச்செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
எண்ணாகமம் 7 : 38 (ECTA)
நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று அது நிறையத் தூபம் இருந்தது.
எண்ணாகமம் 7 : 39 (ECTA)
இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரிபலிக்குரியவை.
எண்ணாகமம் 7 : 40 (ECTA)
பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று;
எண்ணாகமம் 7 : 41 (ECTA)
நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து சுரிசத்தாயின் புதல்வன் செலுமியேலின் காணிக்கை இதுவே.
எண்ணாகமம் 7 : 42 (ECTA)
ஆறாம் நாள்; காத்து மக்களின் தலைவர் எல்யாசாபு; இவர் தெகுவேலின் மகன்.
எண்ணாகமம் 7 : 43 (ECTA)
அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரைக் கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
எண்ணாகமம் 7 : 44 (ECTA)
நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.
எண்ணாகமம் 7 : 45 (ECTA)
இளங்காளை ஒன்று; ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரி பலிக்குரியவை.
எண்ணாகமம் 7 : 46 (ECTA)
பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று;
எண்ணாகமம் 7 : 47 (ECTA)
நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து தெகுவேலின் புதல்வன் எல்யாசாபின் காணிக்கை இதுவே.
எண்ணாகமம் 7 : 48 (ECTA)
ஏழாம் நாள்; எப்ராயிம் மக்களின் தலைவர் எலிசாமா; இவர் அம்மிகூதின் மகன்.
எண்ணாகமம் 7 : 49 (ECTA)
அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
எண்ணாகமம் 7 : 50 (ECTA)
நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.
எண்ணாகமம் 7 : 51 (ECTA)
இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று இவை எரிபலிக்குரியவை.
எண்ணாகமம் 7 : 52 (ECTA)
பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
எண்ணாகமம் 7 : 53 (ECTA)
நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக் கிடாய்கள் ஐந்து அம்மிகூதின் புதல்வன் எலிசாமாவின் காணிக்கை இதுவே.
எண்ணாகமம் 7 : 54 (ECTA)
எட்டாம் நாள்;
எண்ணாகமம் 7 : 55 (ECTA)
அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித் தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
எண்ணாகமம் 7 : 56 (ECTA)
நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறைய தூபம் இருந்தது.
எண்ணாகமம் 7 : 57 (ECTA)
இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை.
எண்ணாகமம் 7 : 58 (ECTA)
பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
எண்ணாகமம் 7 : 59 (ECTA)
நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து பெதாசூரின் புதல்வன் காமாலியேலின் காணிக்கை இதுவே.
எண்ணாகமம் 7 : 60 (ECTA)
ஒன்பதாம் நாள்; பென்யமின் மக்களின் தலைவர் அபிதான்; இவர்கிதயோனியின் மகன்.
எண்ணாகமம் 7 : 61 (ECTA)
அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
எண்ணாகமம் 7 : 62 (ECTA)
நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறைய தூபம் இருந்தது.
எண்ணாகமம் 7 : 63 (ECTA)
இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, இவை எரிபலிக்குரியவை.
எண்ணாகமம் 7 : 64 (ECTA)
பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
எண்ணாகமம் 7 : 65 (ECTA)
நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள்கள் ஐந்து கிதயோனியின் புதல்வன் அபிதானியின் காணிக்கை இதுவே.
எண்ணாகமம் 7 : 66 (ECTA)
பத்தாம் நாள்; தாண் மக்களின் தலைவர் அகியேசர், இவர் அம்மிசத்தாயின் மகன்.
எண்ணாகமம் 7 : 67 (ECTA)
அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
எண்ணாகமம் 7 : 68 (ECTA)
நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.
எண்ணாகமம் 7 : 69 (ECTA)
இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை.
எண்ணாகமம் 7 : 70 (ECTA)
பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய் ஒன்று,
எண்ணாகமம் 7 : 71 (ECTA)
நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து அம்மிசத்தாயின் புதல்வன் அகியேசரின் காணிக்கை இதுவே.
எண்ணாகமம் 7 : 72 (ECTA)
பதினோராம் நாள்; ஆசேர் மக்களின் தலைவர் பகியேல், இவர் ஒக்ரானின் மகன்.
எண்ணாகமம் 7 : 73 (ECTA)
அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப்படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
எண்ணாகமம் 7 : 74 (ECTA)
நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.
எண்ணாகமம் 7 : 75 (ECTA)
இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று; இவை எரிபலிக்குரியவை.
எண்ணாகமம் 7 : 76 (ECTA)
பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று.
எண்ணாகமம் 7 : 77 (ECTA)
நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து ஒக்ரானின் மகன் பகியேலின் காணிக்கை இதுவே.
எண்ணாகமம் 7 : 78 (ECTA)
பன்னிரண்டாம் நாள்; நப்தலி மக்களின் தலைவர் அகிரா, இவர் ஏனானின் மகன்;
எண்ணாகமம் 7 : 79 (ECTA)
அவர் காணிக்கை; தூயகச் செக்கேலின்படி ஒன்றரை கிலோ கிராம் நிறையுடைய வெள்ளித்தட்டு ஒன்று, எண்ணூறு கிராம் நிறையுடைய வெள்ளிக்கலம் ஒன்று உணவுப் படையலுக்காக அவை நிறைய எண்ணெயில் பிசைந்த மிருதுவான மாவு இருந்தது.
எண்ணாகமம் 7 : 80 (ECTA)
நூற்றுப் பதினைந்து கிராம் நிறையுடைய பொன் பாத்திரம் ஒன்று; அது நிறையத் தூபம் இருந்தது.
எண்ணாகமம் 7 : 81 (ECTA)
இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஓராண்டு செம்மறிக் கிடாய் ஒன்று; இவை எரி பலிக்குரியவை.
எண்ணாகமம் 7 : 82 (ECTA)
பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று,
எண்ணாகமம் 7 : 83 (ECTA)
நல்லுறவுப் பலி செலுத்துவதற்காக மாடுகள் இரண்டு, ஆட்டுக்கிடாய்கள் ஐந்து, வெள்ளாட்டுக் கிடாய்கள் ஐந்து, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் ஐந்து ஏனானின் புதல்வன் அகிராவின் காணிக்கை இதுவே.
எண்ணாகமம் 7 : 84 (ECTA)
பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்ட நாளில் இஸ்ரயேல் தலைவர்களிடமிருந்து வந்த அதற்கான அர்ப்பணக்காணிக்கை இதுவே; வெள்ளித்தட்டுகள் பன்னிரண்டு, வெள்ளிக் கலங்கள் பன்னிரண்டு, பொன் பாத்திரங்கள் பன்னிரண்டு;
எண்ணாகமம் 7 : 85 (ECTA)
தூயகச் செக்கேலின்படி வெள்ளித்தட்டின் நிறை ஒன்றரை கிலோ கிராம், வெள்ளிக்கலத்தின் நிறை எண்ணூறு கிராம். ஆக, தூயகச் செக்கேலின்படி அனைத்து வெள்ளிப்பாத்திரங்களின் நிறை இருபத்தியேழு கிலோ அறுநூறு கிராம்.
எண்ணாகமம் 7 : 86 (ECTA)
தூபம் நிறைந்திருந்த பொன் பாத்திரங்கள் பன்னிரண்டு; தூயகச் செக்கேலின்படி ஒவ்வொன்றின் நிறை நூற்றுப் பதினைந்து கிராம். ஆக, பொன் பாத்திரங்கள் அனைத்தின் நிறை ஒரு கிலோ முந்நூற்றி எண்பது கிராம்.
எண்ணாகமம் 7 : 87 (ECTA)
எரிபலிக்கான மொத்த கால்நடைகள்; காளைகள் பன்னிரண்டு, ஆட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் பன்னிரண்டு; இவற்றின் உணவுப் படையலும், இவற்றுடன் சேரும்; பாவம் போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக்கிடாய்கள் பன்னிரண்டு;
எண்ணாகமம் 7 : 88 (ECTA)
நல்லுறவுப் பலி செலுத்துவதற்கான மொத்தக் கால்நடைகள்; காளைகள் இருபத்துநான்கு, ஆட்டுக்கிடாய்கள் அறுபது, வெள்ளாட்டுக் கிடாய்கள் அறுபது, ஓராண்டு செம்மறிக்கிடாய்கள் அறுபது, பலிபீடம் திருப்பொழிவு செய்யப்பட்டபின் அதன் அர்ப்பண காணிக்கை இதுவே.
எண்ணாகமம் 7 : 89 (ECTA)
ஆண்டவருடன் பேசும்படி மோசே சந்திப்புக் கூடாரத்தினுள் சென்றார். இரு கெருபுகளிடையே உடன்படிக்கை பேழையின் மேலிருந்த இரக்கத்தின் அரியணையிலிருந்து பேசிய குரலை அவர் கேட்டார்; ஆண்டவர் அவருடன் பேசினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89

BG:

Opacity:

Color:


Size:


Font: