நாகூம் 1 : 1 (ECTA)
நினிவேயைக் குறித்த இறைவாக்கு; எல்கோசைச் சார்ந்த நாகூம் கண்ட காட்சி நூல். [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13- 15 ]
நாகூம் 1 : 2 (ECTA)
நினிவேயின்மீது ஆண்டவர் சினம் கொள்ளல் ஆண்டவர் அநீதியைப் பொறாத இறைவன்; பழிவாங்குபவர்; ஆண்டவர் பழிவாங்குபவர்; வெகுண்டெழுபவர்; தம் எதிரிகளைப் பழிவாங்குபவர்; தம் பகைவர்மீது சினம் கொள்பவர். [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13- 15 ]
நாகூம் 1 : 3 (ECTA)
ஆண்டவர் விரைவில் சினம் கொள்ளார்; ஆனால் அவர் மிகுந்த ஆற்றலுள்ளவர். அவர் குற்றவாளிகளை எவ்வகையிலும் பழிவாங்காமல் விடமாட்டார். சுழற்காற்றிலும் புயற்காற்றிலும் அமைந்துள்ளது அவர் வழி; மேகங்கள் அவர்தம் காலடியில் எழுகின்ற புழுதிப்படலம்! [* :19 எசா 10:5-34; 14:24-27; செப் 2:13- 15 ]
நாகூம் 1 : 4 (ECTA)
அவர் கடலை அதட்டி வற்றச் செய்கின்றார்; ஆறுகளையெல்லாம் வற்றிப்போகச் செய்கின்றார்; பாசானும் கர்மேலும் காய்ந்து போகின்றன; லெபனோனின் மலர்கள் வாடிப்போகின்றன.
நாகூம் 1 : 5 (ECTA)
அவர் முன்னிலையில் மலைகள் அதிர்கின்றன; குன்றுகள் கரைகின்றன; நிலமும் உலகும் அதில் குடியிருக்கும் அனைத்தும் அவர் முன்னிலையில் நடுநடுங்கின்றன.
நாகூம் 1 : 6 (ECTA)
அவரது கடும் சினத்தை எதிர்த்து நிற்கக்கூடியவன் யார்? அவர் கோபத்தீயின் முன் நிற்பவன் யார்? தீயைப்போல் அவரது கோபம் கொட்டுகின்றது; பாறைகளும் அவர்முன் தவிடு பொடியாகின்றன.
நாகூம் 1 : 7 (ECTA)
ஆண்டவர் நல்லவர்; துன்பநாளில் அவர் காவலரண் ஆவார்; அவரிடம் அடைக்கலம் புகுந்தோரை அவர் அறிவார்.
நாகூம் 1 : 8 (ECTA)
தம் எதிரிகளைப் பொங்கியெழும் வெள்ளத்தின் நடுவே முற்றிலும் அழித்திடுவார்; தம் பகைவர்களை இருளுக்குள் விரட்டியடிப்பார்.
நாகூம் 1 : 9 (ECTA)
ஆண்டவரைப்பற்றி நீங்கள் நினைப்பது என்ன? அவர் முற்றிலும் அழித்துவிடுவார்; தீமை மீண்டும் தலைதூக்காது.
நாகூம் 1 : 10 (ECTA)
குடிவெறியில் மயங்கிக் கிடக்கும் அவர்கள் பின்னிக் கிடக்கும் முட்புதர்போலும் காய்ந்த சருகுபோலும் முற்றிலும் எரிந்துபோவார்கள்.
நாகூம் 1 : 11 (ECTA)
ஆண்டவருக்கு எதிராய்த் திட்டம் தீட்டித் தீய ஆலோசனைகளைக் கூறுபவன் உன்னிடமிருந்து தோன்றினான்.
நாகூம் 1 : 12 (ECTA)
ஆண்டவர் கூறுவது இதுவே: “அவர்கள் வல்லவர்களாயினும் பெரும் தொகையினராயினும் வெட்டி வீழ்த்தப்பட்டு அழிந்துவிடுவார்கள்; உன்னை நான் இதுவரை துன்புறுத்தியிருந்தாலும் இனிமேல் உன்னைத் துன்புறுத்தமாட்டேன்.
நாகூம் 1 : 13 (ECTA)
இப்பொழுதே, உன்மேல் இருக்கும் அவன் நுகத்தை முறித்து உன் கட்டுகளை நான் அறுத்துவிடுவேன்.”
நாகூம் 1 : 14 (ECTA)
ஆண்டவர் உன்னைப்பற்றி இட்ட தீர்ப்பு இதுவே: “உன் பெயரைத்தாங்கும் வழிமரபே இல்லாமல் போகும்; உன் தெய்வங்களின் கோவிலில் உள்ள செதுக்கிய சிலைகளையும் வார்ப்புப் படிமங்களையும் அழிப்பேன். நானே உனக்கு அங்குப் புதை குழி வெட்டுவேன்; ஏனெனில், நீ வெறுக்கத்தக்கவன்.
நாகூம் 1 : 15 (ECTA)
“வெற்றி! வெற்றி!” என்று முழங்கி நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன! யூதாவே, உன் திருவிழாக்களைக் கொண்டாடு! உன் பொருத்தனைகளை நிறைவேற்று! ஏனெனில், தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்; அவன் முற்றிலும் அழிந்து விட்டான். [* எசா 52:7.. ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15