மத்தேயு 1 : 1 (ECTA)
{இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும்}{இயேசுவின் மூதாதையர் பட்டியல்[BR](லூக் 3:23-38)} [PS][QOS] (-2) தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:[QOE] [QS]ஆபிரகாமின் மகன் ஈசாக்கு;[QE][QS] ஈசாக்கின் மகன் யாக்கோபு;[QE][QS] யாக்கோபின் புதல்வர்கள்[QE][QS] யூதாவும் அவர் சகோதரர்களும்.[QE]
மத்தேயு 1 : 2 (ECTA)
[QS]
மத்தேயு 1 : 3 (ECTA)
3. யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த[QE][QS] புதல்வர்கள் பெரேட்சும் செராகும்;[QE][QS] பெரேட்சின் மகன் எட்சரோன்;[QE][QS] எட்சரோனின் மகன் இராம்.*[QE][QS]
மத்தேயு 1 : 4 (ECTA)
4. இராமின் மகன் அம்மினதாபு;[QE][QS] அம்மினதாபின் மகன் நகசோன்;[QE][QS] நகசோனின் மகன் சல்மோன்.[QE][QS]
மத்தேயு 1 : 5 (ECTA)
5. சல்மோனுக்கும் இராகாபுக்கும்[QE][QS] பிறந்த மகன் போவாசு;[QE][QS] போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த[QE][QS] மகன் ஓபேது;[QE][QS] ஓபேதின் மகன் ஈசாய்.[QE][QS]
மத்தேயு 1 : 6 (ECTA)
6. ஈசாயின் மகன் தாவீது அரசர்;[QE][QS] தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம்[QE][QS] பிறந்த மகன் சாலமோன்.[QE][QS]
மத்தேயு 1 : 7 (ECTA)
7. சாலமோனின் மகன் ரெகபயாம்;[QE][QS] ரெகபயாமின் மகன் அபியாம்;[QE][QS] அபியாமின் மகன் ஆசா.*[QE][QS]
மத்தேயு 1 : 8 (ECTA)
8. ஆசாவின் மகன் யோசபாத்து;[QE][QS] யோசபாத்தின் மகன் யோராம்;[QE][QS] யோராமின் மகன் உசியா.[QE][QS]
மத்தேயு 1 : 9 (ECTA)
9. உசியாவின் மகன் யோத்தாம்;[QE][QS] யோத்தாமின் மகன் ஆகாசு;[QE][QS] ஆகாசின் மகன் எசேக்கியா.[QE][QS]
மத்தேயு 1 : 10 (ECTA)
10. எசேக்கியாவின் மகன் மனாசே;[QE][QS] மனாசேயின் மகன் ஆமோன்;[QE][QS] ஆமோனின் மகன் யோசியா.[QE][QS]
மத்தேயு 1 : 11 (ECTA)
11. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும்* அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.[QE][QS]
மத்தேயு 1 : 12 (ECTA)
12. பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல்.[QE][QS]
மத்தேயு 1 : 13 (ECTA)
13. செருபாபேலின் மகன் அபியூது;[QE][QS] அபியூதின் மகன் எலியாக்கிம்;[QE][QS] எலியாக்கிமின் மகன் அசோர்.[QE][QS]
மத்தேயு 1 : 14 (ECTA)
14. அசோரின் மகன் சாதோக்கு;[QE][QS] சாதோக்கின் மகன் ஆக்கிம்;[QE][QS] ஆக்கிமின் மகன் எலியூது.[QE][QS]
மத்தேயு 1 : 15 (ECTA)
15. எலியூதின் மகன் எலயாசர்;[QE][QS] எலயாசரின் மகன் மாத்தான்;[QE][QS] மாத்தானின் மகன் யாக்கோபு.[QE][QS]
மத்தேயு 1 : 16 (ECTA)
16. யாக்கோபின் மகன்[QE][QS] மரியாவின் கணவர் யோசேப்பு.[QE][QS] மரியாவிடம் பிறந்தவரே[QE][QS] கிறிஸ்து* என்னும் இயேசு.[QE][QS]
மத்தேயு 1 : 17 (ECTA)
17. ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்கு; தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு; பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.[QE]
மத்தேயு 1 : 18 (ECTA)
{இயேசுவின் பிறப்பு[BR](லூக் 2:1-7)} [PS]இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார்.
மத்தேயு 1 : 19 (ECTA)
அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
மத்தேயு 1 : 20 (ECTA)
அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
மத்தேயு 1 : 21 (ECTA)
அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
மத்தேயு 1 : 22 (ECTA)
[QIS] (22-23) “இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்”[QIE] என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள்.
மத்தேயு 1 : 23 (ECTA)
மத்தேயு 1 : 24 (ECTA)
யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
மத்தேயு 1 : 25 (ECTA)
மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.[PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25

BG:

Opacity:

Color:


Size:


Font: