யோசுவா 15 : 1 (ECTA)
யூதா மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த நிலப்பகுதி தெற்கே ஏதோம் வரையிலும் அதன் தென்கோடி எல்லைசீன் பாலைநிலம் வரையிலும் அமைந்திருந்தது.
யோசுவா 15 : 2 (ECTA)
அவர்களது தென் எல்லை சாக்கடலின் தென்முனை வளைவிலிருந்து,
யோசுவா 15 : 3 (ECTA)
தெற்குநோக்கி அக்கிரபிம் மேட்டைத்தாண்டி, சீன் பாலைநிலத்தைக் கடந்து, தெற்கே காதேசு பர்னேயாவை நோக்கி மேலே ஏறுகிறது. எஸ்ரோனைக் கடந்து அத்தார்வரை ஏறி கர்க்காவை நோக்கித் திரும்புகிறது;
யோசுவா 15 : 4 (ECTA)
அட்சமோனைக் கடந்து, எகிப்தின் நதியைத் தொட்டுக் கடலுடன் முடிவடைகிறது. இதுவே உங்கள் தென் எல்லை.
யோசுவா 15 : 5 (ECTA)
கிழக்கு எல்லை யோர்தானின் முகத்துவாரம் வரை உள்ள சாக்கடல்; வட எல்லை யோர்தானின் முகத்துவாரத்திலிருந்து தொடங்கி
யோசுவா 15 : 6 (ECTA)
பேத்தொகிலா வரை மேலேறி, வடக்கே பெத்தராபா வரை செல்கிறது. இவ்வெல்லை தொடர்ந்து ரூபனின் மகன் போகனின் கல்வரை செல்கிறது.
யோசுவா 15 : 7 (ECTA)
இவ்வெல்லை ஆக்கோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீர்வரை சென்று பள்ளத்தாக்கிற்குத் தெற்கே அதும்மிம் மேட்டுக்கு எதிரே உள்ள கில்காலுக்குப் பக்கமாக வடக்கே ஓடி, ஏன்செமசு நீர்நிலைகளைத் தொட்டு ஏன்ரோகேல்வரை செல்கிறது.
யோசுவா 15 : 8 (ECTA)
மேலும் இவ்வெல்லை இன்னோம் மகன் பள்ளத்தாக்கின் வட எல்லையாகிய இன்னோம் பள்ளத்தாக்கின் வழியே சென்று எபூசியரின் தென் அரணாகிய எருசலேம் வழியாக மேற்கே இரபாயிம் பள்ளத்தாக்கின் வடஎல்லையாகிய இன்னோம் பள்ளத்தாக்கின் எதிரே உள்ள மலை உச்சிவரை செல்கிறது.
யோசுவா 15 : 9 (ECTA)
மேலும் இவ்வெல்லை மலை உச்சியிலிருந்து நெப்தோவாகு நீரூற்றுவரை எபிரோன் மலை நகர்களுக்கு வெளியே செல்கிறது. பிறகு இவ்வெல்லை பாலாவுக்கு, அதாவது கிரியத்து எயாரிமுக்குச் செல்கிறது.
யோசுவா 15 : 10 (ECTA)
மேலும் இவ்வெல்லை பாலாவின் மேற்கே சேயிர் மலையை நோக்கிச் சுற்றுகிறது. எயாரிம் மலையின் வடக்குச் சரிவான கெசலோன் பக்கம் செல்கிறது. பெத்சமேசில் இறங்கி திம்னா பக்கம் செல்கிறது.
யோசுவா 15 : 11 (ECTA)
பிறகு இவ்வெல்லை எக்ரோனின் வடக்கிலுள்ள மலைச்சரிவில் சென்று சிக்ரோனைச் சுற்றுகிறது. பிறகு பாலா மலையைக் கடந்து யாப்னவேலுக்குச் சென்று கடலில் முடிவடைகிறது.
யோசுவா 15 : 12 (ECTA)
மேற்கு எல்லை பெருங்கடல். இவையே யூதா மக்களின் குடும்பங்களைச் சுற்றி அமைந்த எல்லைகள்.
யோசுவா 15 : 13 (ECTA)
யோசுவாவுக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி, எபுன்னேயின் மகன் காலேபுக்கு யோசுவா யூதாவின் நடுவில் எபிரோன் என்ற கிரியத்து அர்பா நிலப்பகுதியை அளித்தார், அர்பா என்பவன் ஆனாக்கின் தந்தை.
யோசுவா 15 : 14 (ECTA)
சேசாய், அகிமான், தல்மாய் என்ற ஆனாக்கின் மூன்று புதல்வர்களை காலேபு அங்கிருந்து துரத்திவிட்டார்.
யோசுவா 15 : 15 (ECTA)
அங்கிருந்து அவர் தெபீர்வாழ் மக்களுக்கு எதிராகச் சென்றார். கிரியத்சேபர் என்பது தெபீரின் முன்னாளைய பெயர்.
யோசுவா 15 : 16 (ECTA)
"கிரியத்து சேபேரைத் தாக்கி அதைக் கைப்பற்றுபவருக்கு என் மகள் அக்சாவை மனைவியாகக் கொடுப்பேன், "என்று காலேபு அறிவித்தார்.
யோசுவா 15 : 17 (ECTA)
காலேபின் சகோதரர் கெனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினார். காலேபு தம் மகள் அக்சாவை அவருக்கு மனைவியாகக் கொடுத்தார்.
யோசுவா 15 : 18 (ECTA)
அவள் வந்தபோது அவளுடைய தந்தையிடமிருந்து ஒரு நிலம் கேட்குமாறு அவர் அவளைத் தூண்டினார். எனவே அவள் கழுதை மேலிருந்து இறங்கியபொழுது காலேபு அவளிடம், "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.
யோசுவா 15 : 19 (ECTA)
அவள், "எனக்கு ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். நீர் எனக்கு வறண்ட நிலத்தைக் கொடுத்துள்ளீர். இப்பொழுது எனக்கு நீரூற்றுகளையும் தாரும்" என்றாள். அவர் அவளுக்கு மேல் ஊற்றுகளையும் கீழ் ஊற்றுகளையும் கொடுத்தார்.
யோசுவா 15 : 20 (ECTA)
இது யூதா மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களின் உரிமைச் சொத்து;
யோசுவா 15 : 21 (ECTA)
தென்கோடியில் ஏதோம் எல்லையில் யூதா குலத்திற்குச் சொந்தமான நகர்களின் பின்வருமாறு; கப்சாவேல், ஏதேர், யாகூர்;
யோசுவா 15 : 22 (ECTA)
கீனா, தீமோனா, அதாதா,
யோசுவா 15 : 23 (ECTA)
கெதேசு, ஆட்சோர். இத்னான்;
யோசுவா 15 : 24 (ECTA)
சீபு, தெலேம், பெயலோத்து;
யோசுவா 15 : 25 (ECTA)
ஆட்சோர் அதாத்தா, கெரியோத்து, எட்சரோன் என்னும் ஆட்சோர்;
யோசுவா 15 : 26 (ECTA)
அமாம், சேமா, மோலதா;
யோசுவா 15 : 27 (ECTA)
ஆட்சோர் கத்தா, எஸ்மோன், பெத்பலேத்து
யோசுவா 15 : 28 (ECTA)
அட்சர்சூவால், பெயேர் செபா, பிஸ்தோத்தியா;
யோசுவா 15 : 29 (ECTA)
பாலா, ஈயிம் எட்சேம்,
யோசுவா 15 : 30 (ECTA)
எல்தோலது, கெசீல், ஓர்மா;
யோசுவா 15 : 31 (ECTA)
சிக்லாகு, மத்மன்னா, சன்சன்னா;
யோசுவா 15 : 32 (ECTA)
இலபவோத்து, சில்கிம், அயின், ரிம்மோன்; ஆகிய இவை அனைத்தும் இருபத்தொன்று நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
யோசுவா 15 : 33 (ECTA)
தாழ்வான நிலப்பகுதியில் எசுத்தாவோல், சோரா, அஸ்னா;
யோசுவா 15 : 34 (ECTA)
சானோவாகு, ஏன்கன்னிம், தப்புவாகு, ஏனாம்;
யோசுவா 15 : 35 (ECTA)
யார்முத்து, அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
யோசுவா 15 : 36 (ECTA)
சாராயிம், அதித்தாயிம், கேதரா, கெதரோத்தாயிம்; ஆகிய இவை பதினான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
யோசுவா 15 : 37 (ECTA)
செனான், அதாசா, மிக்தல்-காத்து;
யோசுவா 15 : 38 (ECTA)
திலயான், மிஸ்பே, யோக்தவேல்;
யோசுவா 15 : 39 (ECTA)
இலாக்கிசு, பொட்சகாது, எக்லோன்;
யோசுவா 15 : 40 (ECTA)
கபோன், இலகுமாசு, கித்திலுசு;
யோசுவா 15 : 41 (ECTA)
கெதேரோத்து, பெத்தாகோன், நாமா, மக்கேதா ஆகிய இவை பதினாறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
யோசுவா 15 : 42 (ECTA)
லிப்னா, எத்தேர், ஆசான்;
யோசுவா 15 : 43 (ECTA)
இப்தா, அஸ்னா, நெட்சிபு;
யோசுவா 15 : 44 (ECTA)
கெயிலா, அக்சீபு, மாரேசா ஆகிய இவை ஒன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
யோசுவா 15 : 45 (ECTA)
எக்ரோன், அதன் நகர்களும் சிற்றூர்களும்;
யோசுவா 15 : 46 (ECTA)
எக்ரோனிலிருந்து கடல்வரை, அஸ்தோது அருகில் உள்ள அனைத்து நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்;
யோசுவா 15 : 47 (ECTA)
அஸ்தோது, அதன் நகர்களும் சிற்றூர்களும்; எகிப்தின் ஆறுவரை பரவியுள்ள காசாவும் அதன் நகரங்களும் சிற்றூர்களும் பெருங்கடலே அதன் எல்லை.
யோசுவா 15 : 48 (ECTA)
மலைப்பகுதியில் உள்ள சாமீர், யாத்திர், சோக்கோ;
யோசுவா 15 : 49 (ECTA)
தன்னா, தெபீர் என்னும் கிரியத்துசன்னா;
யோசுவா 15 : 50 (ECTA)
அனாபு, எஸ்தமோ, ஆனிம்;
யோசுவா 15 : 51 (ECTA)
கோசேன், கோலோன், கீலோ ஆகிய இவை பதினொரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
யோசுவா 15 : 52 (ECTA)
அராபு, தூமா, எசான்;
யோசுவா 15 : 53 (ECTA)
யானிம், பெத்தபுவாகு, அப்பேக்கா;
யோசுவா 15 : 54 (ECTA)
உமற்றா, எபிரோன், கிரியத்து அர்பா, சீயோர் ஆகிய இவை ஒன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
யோசுவா 15 : 55 (ECTA)
மாவோன், கர்மேல், சீபு, யூற்றா;
யோசுவா 15 : 56 (ECTA)
இஸ்ரியேல், யோக்தயாம், சானோவாகு;
யோசுவா 15 : 57 (ECTA)
காயின், கிபயா, திம்னா ஆகிய இவை பத்து நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
யோசுவா 15 : 58 (ECTA)
கல்குல், பெட்சூர், கெதோர்,
யோசுவா 15 : 59 (ECTA)
மாராத்து, பெத்தனோத்து, எல்டதக்கோன் ஆகிய இவை ஆறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
யோசுவா 15 : 60 (ECTA)
கிரியத்து எயாரிம் என்ற கிரியத்துபாகால், இரபா ஆகிய இவை இரண்டு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
யோசுவா 15 : 61 (ECTA)
பாலை நிலப்பகுதியில் பெத்தராபா, மிதின், செகாக்கா,
யோசுவா 15 : 62 (ECTA)
நிப்சான், ஈர்மாலக்கு ஏன்கேதி ஆகிய இவை ஆறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
யோசுவா 15 : 63 (ECTA)
எருசலேமில் வாழ்ந்த எபூசியரை யூதா மக்கள் வெளியேற்ற இயலவில்லை. எபூசியர் யூதா மக்களுடன் இன்றும் வாழ்கின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63

BG:

Opacity:

Color:


Size:


Font: