எரேமியா 51 : 1 (ECTA)
{எருசலேமின் வீழ்ச்சி}[PS] [QS] ஆண்டவர் கூறுவது இதுவே:[QE][QS] பாபிலோனுக்கும் கல்தேயாவின்[QE][QS] குடிகளுக்கும் எதிராக[QE][QS] அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன்.[QE][QS]
எரேமியா 51 : 2 (ECTA)
2. புடைப்போரைப்[QE][QS] பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்;[QE][QS] அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்;[QE][QS] தண்டனை நாளில் அவர்கள்[QE][QS] எப்பக்கத்தினின்றும்[QE][QS] அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்;[QE][QS] அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள்.[QE][QS]
எரேமியா 51 : 3 (ECTA)
3. வில்வீரன் வில்லை[QE][QS] நாணேற்ற விடாதீர்கள்![QE][QS] தன் கவசத்தை[QE][QS] அணிந்து நிற்க விடாதீர்கள்![QE][QS] அதன் இளைஞர்கள் யாரையும்[QE][QS] விட்டுவைக்காதீர்கள்[QE][QS] அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.[QE][QS]
எரேமியா 51 : 4 (ECTA)
4. கொலையுண்டோர் கல்தேயரின் நாட்டில்[QE][QS] வீழ்ந்து கிடப்பர்.[QE][QS] காயமடைந்தோர்[QE][QS] அதன் தெருக்களில் கிடப்பர்.[QE][QS]
எரேமியா 51 : 5 (ECTA)
5. தங்கள் கடவுளாகிய[QE][QS] படைகளின் ஆண்டவர்[QE][QS] இஸ்ரயேலையும் யூதாவையும்[QE][QS] கைவிட்டுவிடவில்லை.[QE][QS] இஸ்ரயேலின் தூயவருக்கு எதிராகக்[QE][QS] கல்தேயரின் நாடு[QE][QS] குற்றங்களால் நிறைந்துள்ளது.[QE][QS]
எரேமியா 51 : 6 (ECTA)
6. பாபிலோன் நடுவினின்று[QE][QS] தப்பியோடுங்கள்;[QE][QS] ஒவ்வொருவரும் தம் உயிரைக்[QE][QS] காத்துக்கொள்ளட்டும்;[QE][QS] அதன் குற்றங்களுக்காக[QE][QS] நீங்கள் அழிந்து போகாதீர்கள்;[QE][QS] இது ஆண்டவர் பழிவாங்கும் காலம்,[QE][QS] அவரே அதற்குத்[QE][QS] தகுந்த தண்டனை வழங்குவார்;[QE][QS]
எரேமியா 51 : 7 (ECTA)
7. பாபிலோன் ஆண்டவரின் கையில்[QE][QS] பொற்கிண்ணம்போல் இருந்தது;[QE][QS] அது மண்ணுலகு முழுவதற்கும்[QE][QS] போதை ஊட்டியது;[QE][QS] மக்களினங்கள் அதன்[QE][QS] திராட்சை இரசத்தைப் பருகின;[QE][QS] நாடுகள் வெறிகொண்டன.[QE][QS]
எரேமியா 51 : 8 (ECTA)
8. பாபிலோன் திடீரென்று[QE][QS] விழுந்து நொறுங்கிற்று;[QE][QS] அதற்காகப் புலம்பியழுங்கள்;[QE][QS] அதன் காயத்துக்கு[QE][QS] மருந்து கொண்டு வாருங்கள்;[QE][QS] ஒருவேளை அது நலம் பெறலாம்![QE][QS]
எரேமியா 51 : 9 (ECTA)
9. நாங்கள் பாபிலோனைக்[QE][QS] குணப்படுத்த முயன்றோம்;[QE][QS] அதுவோ நலம் அடைவதாயில்லை![QE][QS] அதைக் கைவிட்டுவிடுங்கள்;[QE][QS] நாம் ஒவ்வொருவரும்[QE][QS] நம் சொந்த நாட்டுக்குப் போவோம்;[QE][QS] பாபிலோனுக்குரிய தண்டனைத் தீர்ப்பு[QE][QS] விண்ணுலகை எட்டியுள்ளது;[QE][QS] அது வானத்தைச் சென்றடைந்துள்ளது.[QE][QS]
எரேமியா 51 : 10 (ECTA)
10. ஆண்டவர் நமக்கு[QE][QS] நீதி வழங்கியுள்ளார்;[QE][QS] வாருங்கள்! நம் கடவுளான[QE][QS] ஆண்டவரின் செயலைச்[QE][QS] சீயோனில் பறைசாற்றுவோம்.[QE][QS]
எரேமியா 51 : 11 (ECTA)
11. அம்புகளைக் கூர்மையாக்குங்கள்;[QE][QS] கேடயங்களைக் கையிலெடுங்கள்;[QE][QS] ஆண்டவர் மேதிய அரசர்களைக்[QE][QS] கிளர்ந்தெழச் செய்துள்ளார்;[QE][QS] பாபிலோனை அழிப்பதே அவரது திட்டம்;[QE][QS] இவ்வாறு தம் கோவிலை முன்னிட்டு[QE][QS] ஆண்டவர் பழிவாங்குவார்.[QE][QS]
எரேமியா 51 : 12 (ECTA)
12. பாபிலோன் மதில்கள்மேல்[QE][QS] கொடியேற்றுங்கள்;[QE][QS] காவலை வலுப்படுத்துங்கள்;[QE][QS] இரவுக் காவலாளரை நிறுத்துங்கள்;[QE][QS] கண்ணிகளைத் தயார் செய்யுங்கள்;[QE][QS] பாபிலோனின் குடிகளுக்கு எதிராக[QE][QS] ஆண்டவர் உரைத்திருந்ததைத்[QE][QS] தமது திட்டப்படியே நிறைவேற்றுவார்.[QE][QS]
எரேமியா 51 : 13 (ECTA)
13. நீர்வளம் கொண்டவனே![QE][QS] செல்வம் மிகுந்தவனே![QE][QS] உனக்கு முடிவு வந்துவிட்டது;[QE][QS] உன் வாழ்நாளின் இழை[QE][QS] துண்டிக்கப்பட்டுவிட்டது.[QE][QS]
எரேமியா 51 : 14 (ECTA)
14. வெட்டுக்கிளிகளைப் போன்று[QE][QS] எண்ணற்ற மனிதரால் உன்னைத்[QE][QS] திண்ணமாய் நிரப்புவேன்;[QE][QS] அவர்கள் உனக்கு எதிராக[QE][QS] வெற்றி முழக்கம் செய்வார்கள்,[QE][QS] என்று படைகளின் ஆண்டவர்[QE][QS] தம்மேல் ஆணையிட்டுக் கூறியுள்ளார்.[QE][QS]
எரேமியா 51 : 15 (ECTA)
15. அவரே தம் ஆற்றலால்[QE][QS] மண்ணுலகைப் படைத்தார்[QE][QS] ; தம் ஞானத்தால்[QE][QS] பூவுலகை நிலைநாட்டினார்;[QE][QS] தம் கூர்மதியால்[QE][QS] விண்ணுலகை விரித்தார்.[QE][QS]
எரேமியா 51 : 16 (ECTA)
16. அவர் குரல் கொடுக்க,[QE][QS] வானத்து நீர்த்திரள்[QE][QS] முழக்கமிடுகின்றது;[QE][QS] மண்ணுலகின் எல்லையினின்று[QE][QS] முகில்கள் எழச் செய்கின்றார்;[QE][QS] மழை பொழியுமாறு[QE][QS] மின்னல் வெட்டச் செய்கிறார்;[QE][QS] தம் கிடங்குகளினின்று[QE][QS] காற்று வீசச்செய்கிறார்.[QE][QS]
எரேமியா 51 : 17 (ECTA)
17. மனிதர் யாவரும் மூடர்கள்,[QE][QS] அறிவிலிகள்;[QE][QS] கொல்லர் எல்லாரும்[QE][QS] தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;[QE][QS] அவர்களின் வார்ப்புப் படிமங்கள்[QE][QS] பொய்யானவை;[QE][QS] அவற்றிற்கு உயிர் மூச்சே இல்லை.[QE][QS]
எரேமியா 51 : 18 (ECTA)
18. அவை பயனற்றவை,[QE][QS] ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;[QE][QS] தம் தண்டனையின் காலத்தில்[QE][QS] அவை அழிந்துவிடும்.[QE][QS]
எரேமியா 51 : 19 (ECTA)
19. யாக்கோபின் பங்காய் இருப்பவரோ[QE][QS] இவற்றைப் போன்றவர் அல்லர்;[QE][QS] அவரே அனைத்தையும் உருவாக்கியவர்;[QE][QS] தம் உரிமைச் சொத்தாகிய இனத்தை[QE][QS] உருவாக்கியவரும் அவரே;[QE][QS] படைகளின் ஆண்டவர் என்பது[QE][QS] அவர் பெயராகும்.[QE][QS]
எரேமியா 51 : 20 (ECTA)
20. நீ என் சம்மட்டியும்[QE][QS] படைக்கருவியும் ஆவாய்;[QE][QS] நான் உன்னைக்கொண்டு[QE][QS] மக்களினங்களை நொறுக்குவேன்;[QE][QS] உன்னைக்கொண்டு[QE][QS] அரசுகளை அழித்தொழிப்பேன்.[QE][QS]
எரேமியா 51 : 21 (ECTA)
21. உன்னைக்கொண்டு குதிரையையும்[QE][QS] குதிரை வீரனையும் நொறுக்குவேன்;[QE][QS] உன்னைக்கொண்டு தேரையும்[QE][QS] தேரோட்டியையும் நொறுக்குவேன்.[QE][QS]
எரேமியா 51 : 22 (ECTA)
22. உன்னைக்கொண்டு ஆணையும்[QE][QS] பெண்ணையும் நொறுக்குவேன்;[QE][QS] உன்னைக்கொண்டு முதியோனையும்[QE][QS] சிறுவனையும் நொறுக்குவேன்;[QE][QS] உன்னைக்கொண்டு இளைஞனையும்[QE][QS] இளம்பெண்ணையும் நொறுக்குவேன்;[QE][QS]
எரேமியா 51 : 23 (ECTA)
23. உன்னைக்கொண்டு ஆயனையும்[QE][QS] அவனது மந்தையையும் நொறுக்குவேன்;[QE][QS] உன்னைக்கொண்டு உழவனையும்[QE][QS] அவன் காளைகளையும் நொறுக்குவேன்;[QE][QS] உன்னைக்கொண்டு ஆளுநர்களையும்[QE][QS] அதிகாரிகளையும் நொறுக்குவேன்;[QE][QS]
எரேமியா 51 : 24 (ECTA)
24. பாபிலோனும் கல்தேயாவின்[QE][QS] குடிகள் எல்லாரும்[QE][QS] சீயோனில் செய்த தீச்செயல்[QE][QS] அனைத்தின் பொருட்டு,[QE][QS] உங்கள் கண்முன்னால்[QE][QS] அவர்களைப் பழிவாங்குவேன்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
எரேமியா 51 : 25 (ECTA)
25. அழிவைக் கொணரும் மலையே,[QE][QS] மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே,[QE][QS] நான் உனக்கு எதிராய் இருப்பேன்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS] நான் உனக்கு எதிராய்[QE][QS] என் கையை நீட்டுவேன்;[QE][QS] உன்னைப் பாறை முகடுகளினின்று[QE][QS] உருட்டிவிடுவேன்;[QE][QS] உன்னை எரிந்துபோன[QE][QS] மலை ஆக்குவேன்.[QE][QS]
எரேமியா 51 : 26 (ECTA)
26. மூலைக்கல் என்றோ, அடிக்கல் என்றோ,[QE][QS] உன்னிடமிருந்து கல் எடுக்கப்படாது;[QE][QS] நீ என்றும் பாழடைந்தே கிடப்பாய்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
எரேமியா 51 : 27 (ECTA)
27. மண்ணுலகின்மேல் கொடி ஏற்றுங்கள்;[QE][QS] மக்களினங்கள் நடுவில்[QE][QS] எக்காளம் ஊதுங்கள்;[QE][QS] அதனை எதிர்த்துப் போரிட[QE][QS] மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;[QE][QS] அதனை எதிர்க்குமாறு[QE][QS] அரராத்து, மின்னி, அஸ்கனாசு[QE][QS] ஆகிய அரசுகளுக்கு[QE][QS] அழைப்பு விடுங்கள்;[QE][QS] அதற்கு எதிராய்த்[QE][QS] தானைத் தலைவனை ஏற்படுத்துங்கள்.[QE][QS] வெட்டுக்கிளிக் கூட்டம்போல்[QE][QS] குதிரைகளைக் கொணருங்கள்.[QE][QS]
எரேமியா 51 : 28 (ECTA)
28. அதனை எதிர்த்துப் போரிட[QE][QS] மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;[QE][QS] மேதிய மன்னர்கள், ஆளுநர்கள்,[QE][QS] அதிகாரிகளையும்[QE][QS] அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட[QE][QS] எல்லா நாடுகளையும் கூப்பிடுங்கள்.[QE][QS]
எரேமியா 51 : 29 (ECTA)
29. மண்ணுலகு நடுநடுங்கி,[QE][QS] வேதனையால் பதைபதைக்கிறது;[QE][QS] பாபிலோன் நாட்டை[QE][QS] மக்கள் குடியிருப்பில்லாத[QE][QS] பாழ்நிலம் ஆக்கும் பொருட்டு[QE][QS] அதற்கு எதிராக[QE][QS] ஆண்டவர் தீட்டியுள்ள திட்டங்கள்[QE][QS] நிலைக்கும்.[QE][QS]
எரேமியா 51 : 30 (ECTA)
30. பாபிலோனின் படைவீரர்கள்[QE][QS] போரிடுவதைக் கைவிட்டார்கள்;[QE][QS] அவர்கள் தங்கள்[QE][QS] கோட்டைகளுக்குள்ளேயே[QE][QS] தங்கியிருக்கிறார்கள்;[QE][QS] அவர்களின் வலிமை[QE][QS] குன்றிப்போயிற்று.[QE][QS] அவர்கள் பேடிகளாய் மாறிவிட்டார்கள்.[QE][QS] அதன் உறைவிடங்கள் எரிந்துபோயின;[QE][QS] அதன் தாழ்ப்பாள்கள் உடைந்து போயின.[QE][QS]
எரேமியா 51 : 31 (ECTA)
31. (31-32) ஓர் அஞ்சற்காரன்[QE][QS] அடுத்த அஞ்சற்காரனைச்[QE][QS] சந்திக்க ஓடுகின்றான்;[QE][QS] ஒரு தூதன் அடுத்த தூதனைச்[QE][QS] சந்திக்க ஓடுகின்றான்;[QE][QS] “நகர் எல்லாப் பக்கங்களிலும்[QE][QS] கைப்பற்றப்பட்டது;[QE][QS] கடவுத் துறைகள் பிடிப்பட்டன;[QE][QS] கோட்டை, கொத்தளங்கள்[QE][QS] தீக்கிரையாயின;[QE][QS] படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர்”, எனப்[QE][QS] பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்க[QE][QS] அவர்கள் ஓடுகிறார்கள்.[QE]
எரேமியா 51 : 32 (ECTA)
[QS]
எரேமியா 51 : 33 (ECTA)
33. இஸ்ரயேலின் கடவுளாகிய[QE][QS] படைகளின் ஆண்டவர்[QE][QS] கூறுவது இதுவே;[QE][QS] புணையடிக்கும் காலக் களத்துக்கு[QE][QS] மகள் பாபிலோன் ஒப்பாவாள்;[QE][QS] இன்றும் சிறிது காலத்தில்[QE][QS] அதன் அறுவடைக் காலம் வரும்.[QE][QS]
எரேமியா 51 : 34 (ECTA)
34. பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்[QE][QS] என்னை விழுங்கிவிட்டான்;[QE][QS] அவன் என்னைக்[QE][QS] கசக்கிப் பிழிந்து விட்டான்;[QE][QS] வெறுமையான பாத்திரம்போல்[QE][QS] என்னை ஆக்கிவிட்டான்;[QE][QS] அரக்கன் போன்று[QE][QS] என்னை விழுங்கிவிட்டான்;[QE][QS] என் அருஞ்சுவை உணவுகளால்[QE][QS] தன் வயிற்றை நிரப்பிக்கொண்டான்.[QE][QS] என்னைக் கொப்பளித்துத்[QE][QS] துப்பிவிட்டான்.[QE][QS]
எரேமியா 51 : 35 (ECTA)
35. “எனக்கும் என் உறவினர்க்கும்[QE][QS] இழைக்கப்பட்ட கொடுமை[QE][QS] பாபிலோன் மேல் வரட்டும்” என்று[QE][QS] சீயோன் குடிகள் கூறட்டும்;[QE][QS] “என் இரத்தப் பழி[QE][QS] கல்தேயக் குடிகள்மீது[QE][QS] வந்துவிழட்டும்,” என்று[QE][QS] எருசலேம் சொல்லட்டும்.[QE][QS]
எரேமியா 51 : 36 (ECTA)
36. எனவே, ஆண்டவர்[QE][QS] இவ்வாறு கூறுகிறார்:[QE][QS] நானே உனக்காக வழக்காடுவேன்;[QE][QS] உன் பொருட்டுப் பழிவாங்குவேன்;[QE][QS] அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்;[QE][QS] அதன் நீரூற்றுகள்[QE][QS] காய்ந்துபோகச் செய்வேன்.[QE][QS]
எரேமியா 51 : 37 (ECTA)
37. பாபிலோன் பாழ்மேடு ஆகும்;[QE][QS] குள்ளநரிகளின் உறைவிடமாக மாறும்.[QE][QS] அது குடியிருப்பாரற்றுப்[QE][QS] பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும்[QE][QS] உள்ளாகும்.[QE][QS]
எரேமியா 51 : 38 (ECTA)
38. அவர்கள் சிங்கங்களைப்போல்[QE][QS] சேர்ந்து கர்ச்சிப்பார்கள்;[QE][QS] சிங்கக் குட்டிகளைப்போல் சீறுவார்கள்.[QE][QS]
எரேமியா 51 : 39 (ECTA)
39. அவர்கள் கொதித்தெழுந்தபொழுது[QE][QS] நான் அவர்களுக்கு[QE][QS] விருந்து அளிப்பேன்;[QE][QS] அவர்கள் மயங்கி மகிழுமாறு[QE][QS] போதையுறும்வரை[QE][QS] குடிக்கச் செய்வேன்;[QE][QS] அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்;[QE][QS] துயில் எழவே மாட்டார்கள்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
எரேமியா 51 : 40 (ECTA)
40. செம்மறிக்குட்டிகள்,[QE][QS] ஆட்டுக்கிடாய்கள்,[QE][QS] வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்று,[QE][QS] நான் அவர்களைக்[QE][QS] கொலைக் களத்திற்குக்[QE][QS] கொண்டுபோவேன்.[QE][QS]
எரேமியா 51 : 41 (ECTA)
41. சேசாக்கு இப்படிப்[QE][QS] பிடிபட்டுப் போயிற்றே![QE][QS] மண்ணுலகு முழுவதன் சிறப்பிடம்[QE][QS] இப்படிக் கைப்பற்றப் பட்டுவிட்டதே![QE][QS] மக்களினங்கள் நடுவே பாபிலோன்[QE][QS] பாழடைந்துபோனது எவ்வாறு?[QE][QS]
எரேமியா 51 : 42 (ECTA)
42. கடலானது பாபிலோன்மீது[QE][QS] கொந்தளித்து வந்துள்ளது;[QE][QS] ஆர்ப்பரிக்கும் அலைகளால்[QE][QS] அது மூடப்பட்டுவிட்டது.[QE][QS]
எரேமியா 51 : 43 (ECTA)
43. அதன் நகர்கள் பாழடைந்துவிட்டன;[QE][QS] அது வறண்ட பாலைநிலமாய்[QE][QS] மாறிவிட்டது;[QE][QS] அந்நாட்டில் குடியிருப்பார்[QE][QS] யாரும் இல்லை;[QE][QS] எவரும் அதனைக்[QE][QS] கடந்து செல்லமாட்டார்.[QE][QS]
எரேமியா 51 : 44 (ECTA)
44. நான் பாபிலோனில்[QE][QS] பேலைத் தண்டிப்பேன்;[QE][QS] அது விழுங்கினதை[QE][QS] அதன் வாயினின்று கக்கச்செய்வேன்;[QE][QS] மக்களினங்கள் இனி ஒருபோதும்[QE][QS] அங்குக் செல்லமாட்டா;[QE][QS] பாபிலோன் மதிலும்[QE][QS] தரைமட்டமாக்கப்படும்.[QE][QS]
எரேமியா 51 : 45 (ECTA)
45. என் மக்களே,[QE][QS] அதனின்று வெளியேறுங்கள்;[QE][QS] ஆண்டவரின் வெஞ்சினத்தினின்று[QE][QS] ஒவ்வொருவனும் தன் உயிரைக்[QE][QS] காத்துக்கொள்ளட்டும்.[QE][QS]
எரேமியா 51 : 46 (ECTA)
46. உங்கள் உள்ளம் தளாரதிருக்கட்டும்;[QE][QS] நாட்டில் உலவும் வதந்திகளைத் கேட்டுக்[QE][QS] கலங்காதீர்கள்;[QE][QS] ஓராண்டில் ஒரு வதந்தி உலவும்;[QE][QS] மறு ஆண்டில்[QE][QS] மற்றொரு வதந்தி உருவெடுக்கும்;[QE][QS] நாட்டில் வன்முறை மலியும்;[QE][QS] ஆளுநன் ஆளுநனுக்கு எதிராய்[QE][QS] எழுவான்.[QE][QS]
எரேமியா 51 : 47 (ECTA)
47. எனவே நாள்கள் வருகின்றன.[QE][QS] அப்பொழுது நான்[QE][QS] பாபிலோன் சிலைகளைத் தண்டிப்பேன்.[QE][QS] அந்த நாடு முழுவதும் சிறுமையுறும்;[QE][QS] கொலையுண்டோர் அனைவரும்[QE][QS] அதன் நடுவே வீழ்ந்துகிடப்பர்.[QE][QS]
எரேமியா 51 : 48 (ECTA)
48. விண்ணுலகும் மண்ணுலகும்[QE][QS] அவற்றில் உள்ள அனைத்தும்[QE][QS] பாபிலோனைக் குறித்து[QE][QS] மகிழ்ச்சிக் குரல் எழுப்பும்;[QE][QS] வடக்கினின்று “அழிப்போர்”[QE][QS] அதை எதிர்த்து வருவர்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
எரேமியா 51 : 49 (ECTA)
49. பாபிலோனை முன்னிட்டு[QE][QS] மண்ணுலகு எங்கும்[QE][QS] மக்கள் கொலையுண்டு வீழ்ந்தனர்;[QE][QS] இஸ்ரயேலில்[QE][QS] கொலையுண்டோரை முன்னிட்டு[QE][QS] இப்போது பாபிலோன்[QE][QS] வீழ்ச்சியுற வேண்டும்.[QE][QS]
எரேமியா 51 : 50 (ECTA)
50. வாளுக்குத் தப்பியவர்களே,[QE][QS] போய்விடுங்கள், நிற்காதீர்கள்;[QE][QS] தொலையிலிருந்து[QE][QS] ஆண்டவரை நினைவுகூருங்கள்;[QE][QS] உங்கள் இதயத்தில்[QE][QS] எருசலேம் இடம்பெறட்டும்.[QE][QS]
எரேமியா 51 : 51 (ECTA)
51. பழிமொழி கேட்டதால்[QE][QS] நாங்கள் வெட்கத்துக்கு உள்ளானோம்;[QE][QS] ஆண்டவரது இல்லத்தின்[QE][QS] திரு இடங்களுக்குள்[QE][QS] அன்னியர் நுழைந்துவிட்டதால்,[QE][QS] மானக்கேடு எங்கள் முகங்களை[QE][QS] மூடிக்கொண்டது.[QE][QS]
எரேமியா 51 : 52 (ECTA)
52. ஆகவே நாள்கள் வருகின்றன,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS] நான் அதன் சிலைகளைத்[QE][QS] தண்டிப்பேன்;[QE][QS] அந்நாடு எங்கணும்[QE][QS] காயம்பட்டோர் குமுறியழுவர்.[QE][QS]
எரேமியா 51 : 53 (ECTA)
53. பாபிலோன் வானம்வரை[QE][QS] தன்னை உயர்த்திக் கொண்டாலும்,[QE][QS] தன் உயர்ந்த கோட்டை[QE][QS] கொத்தளங்களை[QE][QS] வலுப்படுத்திக் கொண்டாலும்,[QE][QS] அழிப்போரை நான்[QE][QS] அதன் மீது அனுப்புவேன்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
எரேமியா 51 : 54 (ECTA)
54. பாபிலோனிலிருந்து[QE][QS] கூக்குரல் கேட்கிறது;[QE][QS] கல்தேயரின் நாட்டிலிருந்து[QE][QS] பேரழிவின் இரைச்சல் கேட்கிறது.[QE][QS]
எரேமியா 51 : 55 (ECTA)
55. ஆண்டவர் பாபிலோனை அழிக்கிறார்;[QE][QS] அதன் பெரும் ஆரவாரத்தை[QE][QS] அடக்குகிறார்;[QE][QS] அவர்களின் அலைகள்[QE][QS] பெரும் வெள்ளம்போல் முழங்கும்.[QE][QS] அவர்கள் உரத்த குரலில்[QE][QS] ஆரவாரம் செய்வர்.[QE][QS]
எரேமியா 51 : 56 (ECTA)
56. “அழிப்போன்” பாபிலோன் மீதே[QE][QS] வந்துவிட்டான்.[QE][QS] அதன் படைவீரர்கள் பிடிபட்டார்கள்.[QE][QS] அவர்கள் அம்புகள்[QE][QS] முறித்தெறியப்பட்டன.[QE][QS] ஆண்டவர் பழிவாங்கும் கடவுள்;[QE][QS] அவர் திண்ணமாய்[QE][QS] பதிலடி கொடுப்பார்.[QE][QS]
எரேமியா 51 : 57 (ECTA)
57. அதன் தலைவர்கள், ஞானிகள்,[QE][QS] ஆளுநர்கள், படைத்தலைவர்கள்,[QE][QS] படைவீரர்கள் ஆகிய எல்லாரையும்[QE][QS] நான் குடிவெறி கொள்ளச்செய்வேன்.[QE][QS] அவர்கள் மீளாத்[QE][QS] துயில் கொள்வார்கள்;[QE][QS] துயில் எழவே மாட்டார்கள்,[QE][QS] என்கிறார் “படைகளின் ஆண்டவர்”[QE][QS] என்னும் பெயர் கொண்ட மன்னர்.[QE][QS]
எரேமியா 51 : 58 (ECTA)
58. படைகளின் ஆண்டவர்[QE][QS] கூறுவது இதுவே;[QE][QS] பாபிலோனின் அகன்ற மதில்கள்[QE][QS] முற்றிலும் தரைமட்டமாக்கப்படும்;[QE][QS] அதன் உயர்ந்த வாயில்கள்[QE][QS] தீக்கிரையாகும்;[QE][QS] மக்களின் உழைப்பு வீணாகும்;[QE][QS] மக்களினங்களின் முயற்சிகள்[QE][QS] தீயோடு தீயாகும்.[QE]
எரேமியா 51 : 59 (ECTA)
யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனும் அரசப் பயணவிடுதிப் பொறுப்பாளருமான செராயா செதேக்கியாவோடு பாபிலோனுக்குச் சென்றபொழுது, இறைவாக்கினர் எரேமியா அவருக்குக் கொடுத்த கட்டளை;
எரேமியா 51 : 60 (ECTA)
பாபிலோன் மேல் வரவிருந்த தண்டனைகள் அனைத்தையும், அதாவது பாபிலோன் மேல் குறித்து மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் எரேமியா ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைத்தார்.
எரேமியா 51 : 61 (ECTA)
எரேமியா செராயாவிடம் கூறியது: நீ பாபிலோனை அடைந்தபின், இச்சொற்களை எல்லாம் கண்டிப்பாக வாசி.
எரேமியா 51 : 62 (ECTA)
‘ஆண்டவரே, மனிதரோ விலங்கோ எதுவும் வாழாதபடி என்றும் பாழடைந்து கிடக்கும் அளவுக்கு நீர் அந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்’ எனச் சொல்.
எரேமியா 51 : 63 (ECTA)
இச்சுருளை வாசித்து முடித்த பின்னர், அதை ஒரு கல்லில் கட்டி, யூப்பிரத்தீசு நடுவே எறிந்துவிடு.
எரேமியா 51 : 64 (ECTA)
“நான் பாபிலோனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைக்குப் பின்னர், அது மீண்டும் தலைதூக்க முடியாமல், இவ்வாறே மூழ்கிப்போகும்” என்று சொல். எரேமியாவின் சொற்கள் இத்துடன் முற்றும்.[PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64

BG:

Opacity:

Color:


Size:


Font: