எரேமியா 48 : 1 (ECTA)
{மோவாபுக்கு எதிராக} [PS]மோவாபைக் குறித்து, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: [QS]நெபோவுக்கு ஐயோ கேடு![QE][QS] அது பாழடைந்து கிடக்கிறது.[QE][QS] கிரியத்தாயிம் அவமானத்துக்கு உள்ளாகிக்[QE][QS] கைப்பற்றப்பட்டுள்ளது.[QE][QS] அதன் கோட்டை இழிவுபடுத்தப்பட்டு,[QE][QS] தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.[QE][QS]
எரேமியா 48 : 2 (ECTA)
2. போவாபின் புகழ் மங்கிவிட்டது;[QE][QS] எஸ்போனில் அதற்குத்[QE][QS] தீங்கிழைக்கத் திட்டமிடப்படுகிறது:[QE][QS] ‘வாருங்கள்; அதனை ஒரு நாடாய்[QE][QS] இல்லாதவாறு சிதைப்போம்’.[QE][QS] மத்மேன்! நீயும் அழிக்கப்படுவாய்;[QE][QS] வாள் உன்னைத் துரத்தி வரும்.[QE][QS]
எரேமியா 48 : 3 (ECTA)
3. ஓரொனாயிமினின்று[QE][QS] கூக்குரல் ஒலிக்கிறது.[QE][QS] ‘கொடுமை, பேரழிவு’ எனக் கேட்கிறது.[QE][QS]
எரேமியா 48 : 4 (ECTA)
4. மோவாபு அழிக்கப்பட்டுவிட்டது;[QE][QS] அதன் குழந்தைகளின்[QE][QS] அழுகுரல் கேட்கின்றது.[QE][QS]
எரேமியா 48 : 5 (ECTA)
5. லூகித்துக்கு ஏறிச்செல்லும் வழியில்[QE][QS] அவர்கள் அழுதுகொண்டே[QE][QS] போகிறார்கள்;[QE][QS] ஓரொனாயிமுக்கு[QE][QS] இறங்கிச் செல்லும் வழியில்[QE][QS] அழிவின் புலம்பல்* கேட்கிறது.[QE][QS]
எரேமியா 48 : 6 (ECTA)
6. தப்பியோடுங்கள், உங்கள் உயிரைப்[QE][QS] பாதுகாத்துக்கொள்ளுங்கள்;[QE][QS] பாலை நிலத்துக்[QE][QS] காட்டுக்கழுதைபோல் மாறுங்கள்.[QE][QS]
எரேமியா 48 : 7 (ECTA)
7. உன் கோட்டைகளையும்*[QE][QS] கருவூலங்களையும் நம்பியிருந்தாய்;[QE][QS] நீயும் கைப்பற்றப்படுவாய்.[QE][QS] கெமோசு தெய்வம் நாடுகடத்தப்படும்;[QE][QS] அதன் அர்ச்சகர்களும் தலைவர்களும்[QE][QS] அதனோடு செல்வார்கள்.[QE][QS]
எரேமியா 48 : 8 (ECTA)
8. ‘அழிப்போன்’[QE][QS] ஒவ்வொரு நகருக்கும் வருவான்.[QE][QS] எந்த நகரும் தப்பாது.[QE][QS] ஆண்டவர் சொல்லியிருப்பது போல்[QE][QS] பள்ளத்தாக்குகள் பாழாகும்;[QE][QS] சமவெளிகள் அழிக்கப்படும்.[QE][QS]
எரேமியா 48 : 9 (ECTA)
9. மோவாபுக்கு இறக்கைகள் கொடுங்கள்;[QE][QS] அது பறந்தோடட்டும்;[QE][QS] அதன் நகர்கள் பாழாக்கப்படும்;[QE][QS] அவை குடியிருப்போர் அற்றுப் போகும்.[QE][QS]
எரேமியா 48 : 10 (ECTA)
10. ஆண்டவர்தம் அலுவலை[QE][QS] அக்கறையின்றிச் செய்பவன்[QE][QS] சபிக்கப்பட்டவன்;[QE][QS] குருதி சிந்தாமல்[QE][QS] தன் வாளை வைத்திருப்பவனும்[QE][QS] சபிக்கப்பட்டவனே.[QE][QS]
எரேமியா 48 : 11 (ECTA)
11. மோவாபு இளமைமுதல்[QE][QS] அமைதியில் வாழ்ந்துவருகிறது;[QE][QS] மண்டியை அடியில் கொண்ட[QE][QS] பழந் திராட்சை இரசம் அது[QE][QS] . அது கலத்தினின்று கலத்திற்கு[QE][QS] மாற்றப்படாதது; நாடுகடத்தப்படாதது;[QE][QS] அதன் சுவை குன்றவில்லை;[QE][QS] அதன் நறுமணம் மாறவில்லை.[QE][PE][PS]
எரேமியா 48 : 12 (ECTA)
எனவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது நான் ‘கவிழ்ப்போரை’ அனுப்புவேன். அவர்கள் அதைக் கவிழ்ப்பார்கள்; அதன் கலங்களை வெறுமையாக்குவார்கள்; அதன் சாடிகளை நொறுக்குவார்கள்.
எரேமியா 48 : 13 (ECTA)
இஸ்ரயேல் வீட்டார் தாம் நம்பிக்கை வைத்திருந்த பெத்தேலைக் குறித்து இகழ்ச்சியுற்றது போல, மோவாபு கெமோசைக் குறித்து இகழ்ச்சியுறும்.[PE][PS] [QS]
எரேமியா 48 : 14 (ECTA)
14. ‘நாங்கள் படைவீரர்கள்;[QE][QS] போரில் வல்லவர்கள்’ என்று[QE][QS] நீங்கள் எப்படிச் சொல்லக்கூடும்?[QE][QS]
எரேமியா 48 : 15 (ECTA)
15. “மோவாபையும் அதன் நகர்களையும்[QE][QS] அழிப்பவன் வந்துவிட்டான்;[QE][QS] அதன் சிறந்த இளைஞர்கள்[QE][QS] கொலைக் களத்திற்குப்[QE][QS] போய் விட்டார்கள்,” என்கிறார்[QE][QS] படைகளின் ஆண்டவர் என்னும்[QE][QS] பெயருடைய மன்னர்.[QE][QS]
எரேமியா 48 : 16 (ECTA)
16. மோவாபின் அழிவு[QE][QS] அண்மையில் உள்ளது;[QE][QS] தீங்கு அதை நோக்கி[QE][QS] விரைந்து வருகிறது.[QE][QS]
எரேமியா 48 : 17 (ECTA)
17. அதைச் சுற்றியிருப்போரே,[QE][QS] நீங்கள் அனைவரும் அதற்காகத்[QE][QS] துக்கம் கொண்டாடுங்கள்.[QE][QS] அதன் புகழை அறிந்திருப்போரே,[QE][QS] நீங்கள் அனைவரும்[QE][QS] ‘வலிமைமிக்க செங்கோல்[QE][QS] முறிந்தது எங்ஙனம்?[QE][QS] மேன்மைமிக்க கோல்[QE][QS] உடைந்தது எவ்வாறு?’[QE][QS] என்று கேளுங்கள்.[QE][QS]
எரேமியா 48 : 18 (ECTA)
18. மகள் தீபோனின் குடிமகனே,[QE][QS] உன் மேன்மையை விட்டு இறங்கி வா;[QE][QS] வறண்ட நிலத்தில் வந்து அமர்ந்துகொள்.[BR]மோவாபை அழிப்பவன்[QE][QS] உனக்கு எதிராக எழுந்துவிட்டான்;[QE][QS] உன் கோட்டைகளை[QE][QS] அவன் தகர்த்து விட்டான்.[QE][QS]
எரேமியா 48 : 19 (ECTA)
19. அரோயேரின் குடிமகனே![QE][QS] நீ சாலை ஓரமாய் நின்று கவனி;[QE][QS] ஓட்டம்பிடிக்கிறவனையும்[QE][QS] தப்பி ஓடுகிறவளையும் நோக்கி,[QE][QS] ‘என்ன நடந்தது?’ என்று கேள்.[QE][QS]
எரேமியா 48 : 20 (ECTA)
20. மோவாபு அழிக்கப்பட்டுச்[QE][QS] சிறுமைக்குள்ளானது;[QE][QS] அழுது புலம்புங்கள்;[QE][QS] கூக்குரலிடுங்கள்;[QE][QS] மோவாபு பாழடைந்துவிட்டது என[QE][QS] அர்னோனில் அறிவியுங்கள்.[QE][PE][PS]
எரேமியா 48 : 21 (ECTA)
சமவெளி நாடுகள்மீது தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டது; ஓலோன், யாகுசா, மேப்பாத்து,
எரேமியா 48 : 22 (ECTA)
தீபோன், நெபோ, பெத்திப்லத்தாயிம்,
எரேமியா 48 : 23 (ECTA)
கிர்யத்தாயிம், பெத்-காமூல், பெத்-மெகோன்,
எரேமியா 48 : 24 (ECTA)
கெரியோத்து, போஸ்ரா மீதும் அருகிலும் தொலைவிலும் உள்ள மோவாபு நாட்டு நகர்கள் மீதும் வந்து விட்டது.
எரேமியா 48 : 25 (ECTA)
மோவாபின் கொம்பு முறிந்து விட்டது; அதன் கையும் ஒடிந்து போயிற்று, என்கிறார் ஆண்டவர்.[PE][PS]
எரேமியா 48 : 26 (ECTA)
மோவாபுக்குப் போதை வெறி ஏற்றுங்கள்; ஏனெனில் அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமையடித்துக் கொண்டது. அது, தான் வாந்தி எடுத்ததில் கிடந்து புரளும்; ஏளனத்துக்கு ஆளாகும்.
எரேமியா 48 : 27 (ECTA)
இஸ்ரயேல் உன் நகைப்புக்கு ஆளாகவில்லையா? அவனைப் பற்றி நீ பேசும்போதெல்லாம் உன் தலையை ஆட்டிப் பழித்தாயே? அவன் என்ன, திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவனா?[PE][PS] [QS]
எரேமியா 48 : 28 (ECTA)
28. மோவாபின் குடிமக்களே,[QE][QS] நகர்களை விட்டு வெளியேறுங்கள்;[QE][QS] பாறைப் பகுதியில் குடியேறுங்கள்.[QE][QS] பாறையின் இடுக்குகளில்[QE][QS] கூடுகட்டி வாழும்[QE][QS] புறாவைப் போல் இருங்கள்.[QE][QS]
எரேமியா 48 : 29 (ECTA)
29. மோவாபின் செருக்கைப் பற்றி[QE][QS] நாங்கள் கேள்வியுற்றோம்;[QE][QS] பெரிதே அதன் இறுமாப்பு![QE][QS] அதன் ஆணவம், செருக்கு,[QE][QS] அகங்காரம், அகந்தை பற்றி எல்லாம்[QE][QS] கேள்வியுற்றோம்.[QE][QS]
எரேமியா 48 : 30 (ECTA)
30. அதன் திமிரை நான் அறிவேன்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS] அதன் தற்புகழ்ச்சி எல்லாம் பொய்;[QE][QS] அதன் செயல்கள் யாவும் பொய்.[QE][QS]
எரேமியா 48 : 31 (ECTA)
31. மோவாபை முன்னிட்டு[QE][QS] நான் ஓலமிடுவேன்;[QE][QS] மோவாபு முழுவதையும் குறித்து[QE][QS] அலறியழுவேன்;[QE][QS] கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப்[QE][QS] புலம்புவேன்.[QE][QS]
எரேமியா 48 : 32 (ECTA)
32. சிப்மாவின் திராட்சைக் கொடியே,[QE][QS] யாசேருக்காக அழுவதைவிட[QE][QS] அதிகமாய் உனக்காக அழுவேன்.[QE][QS] உன் கொடிகள்[QE][QS] கடல் வரை படர்ந்துள்ளன;[QE][QS] யாசேர் கடலை எட்டியுள்ளன.[QE][QS] கோடைப் பழங்கள்மீதும்[QE][QS] திராட்சைப் பழங்கள்மீதும்[QE][QS] ‘அழிப்போன்’ பாய்ந்து வந்தான்.[QE][QS]
எரேமியா 48 : 33 (ECTA)
33. செழிப்பான மோவாபு நாட்டினின்று[QE][QS] மகிழ்ச்சியும், அக்களிப்பும்[QE][QS] அகற்றப்பட்டுவிட்டன;[QE][QS] திராட்சை ஆலைகளில்[QE][QS] இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்;[QE][QS] மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன்[QE][QS] எவனும் இலலை;[QE][QS] மகிழ்ச்சியின் ஆரவாரம்[QE][QS] அங்கு எழுவதில்லை.[QE]
எரேமியா 48 : 34 (ECTA)
எஸ்போனும் எலயாலேயும் கூக்குரலிடுகின்றன. யாகாசு வரை அவற்றின் அழுகுரல் கேட்கிறது; சோவாரிலிருந்து ஒரோனாயிம், எக்லாத்து செலிசியாவரை அது ஒலிக்கிறது. ஏனெனில், நிம்ரிம் தண்ணீரும் வற்றிப்போனது.
எரேமியா 48 : 35 (ECTA)
மோவாபின் தொழுகைமேடுகளில் தன் தெய்வங்களுக்குப் பலி செலுத்தித் தூபம் காட்டுபவனை நான் அழித்து விடுவேன், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 48 : 36 (ECTA)
எனவே, என் இதயம் புல்லாங்குழல் போன்று மோவாபுக்காகப் புலம்புகிறது; என் இதயம் புல்லாங்குழல் போன்று கீர்கெரேசின் மனிதருக்காகச் சோகப் பண் இசைக்கிறது. ஏனெனில் அவர்கள் சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் அழிந்து விட்டன.[PE][PS]
எரேமியா 48 : 37 (ECTA)
அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டுள்ளன; தாடிகள் அகற்றப்பட்டுள்ளன. எல்லாக் கைகளிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. இடைகளில் சாக்கு உடை காணப்படுகிறது.
எரேமியா 48 : 38 (ECTA)
மோவாபின் வீட்டு மேல்தளங்கள் எல்லாவற்றிலும், அதன் தெருக்களிலும் ஒரே புலம்பல்; ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போன்று மோவாபை நான் உடைத்தெறிந்தேன், என்கிறார் ஆண்டவர்.[PE][PS]
எரேமியா 48 : 39 (ECTA)
இப்படி அது நொறுக்கப்பட்டுக் கிடக்கின்றதே! இப்படி அவர்கள் புலம்புகின்றார்களே! இப்படி மோவாபு வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றதே! மோவாபு தன்னைச் சுற்றியிருப்போர் எல்லார் முன்னும் ஏளனத்துக்கும் பேரச்சத்திற்கும் உள்ளாயிற்று.[PE][PS] [QS]
எரேமியா 48 : 40 (ECTA)
40. ஆண்டவர் கூறுவது இதுவே;[QE][QS] ஒருவன் கழுகைப்போல்[QE][QS] பாய்ந்து வருவான்;[QE][QS] மோவாபின்மீது[QE][QS] தன் இறக்கைகளை விரிப்பான்.[QE][QS]
எரேமியா 48 : 41 (ECTA)
41. நகர்கள் பிடிபடும்;[QE][QS] கோட்டைகள் கைப்பற்றப்படும்.[QE][QS] அந்நாளில் மோவாபிய[QE][QS] படைவீரர்களின் இதயம்[QE][QS] பேறுகாலப் பெண்ணின்[QE][QS] இதயத்தைப்போல் துடிக்கும்.[QE][QS]
எரேமியா 48 : 42 (ECTA)
42. மோவாபு அழிக்கப்படும்;[QE][QS] இனி அது ஒரு மக்களினமாய் இராது.[QE][QS] அது ஆண்டவருக்கு எதிராகப்[QE][QS] பெருமை அடித்துக் கொண்டது.[QE][QS]
எரேமியா 48 : 43 (ECTA)
43. மோவாபின் மகனே,[QE][QS] திகிலும் படுகுழியும் கண்ணியுமே[QE][QS] உன்முன் இருக்கின்றன,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
எரேமியா 48 : 44 (ECTA)
44. திகிலுக்கு அஞ்சி ஓடுபவன்[QE][QS] படுகுழியில் விழுவான்;[QE][QS] படுகுழியினின்று வெளியே வருபவன்[QE][QS] கண்ணியில் மாட்டிக்கொள்வான்.[QE][QS] அவர்களுடைய தண்டனைக் காலத்தில்[QE][QS] இவற்றை மோவாபின்மீது[QE][QS] வரவழைப்பேன், என்கிறார் ஆண்டவர்.[QE][QS]
எரேமியா 48 : 45 (ECTA)
45. தப்பியோடுவோர்[QE][QS] எஸ்போனின் நிழலில்[QE][QS] வலுவிழந்து நிற்கின்றனர்;[QE][QS] எஸ்போனிலிருந்து[QE][QS] நெருப்பு கிளம்பிற்று;[QE][QS] சீகோனிலிருந்து[QE][QS] தீப்பிழம்பு புறப்பட்டது;[QE][QS] மோவாபின் நெற்றியை[QE][QS] அது விழுங்கிற்று;[QE][QS] கலக்காரரின் உச்சந்தலையை[QE][QS] அது பொசுக்கிற்று.[QE][QS]
எரேமியா 48 : 46 (ECTA)
46. மோவாபே, உனக்கு ஐயோ கேடு![QE][QS] கெமோசின் மக்கள்[QE][QS] அழிந்துபோயினர்;[QE][QS] உன் புதல்வர்[QE][QS] நாடு கடத்தப்பட்டனர்;[QE][QS] உன் புதல்வியரும்[QE][QS] நாடுகடத்தப்பட்டனர்.[QE][QS]
எரேமியா 48 : 47 (ECTA)
47. ஆயினும், இறுதி நாள்களில்[QE][QS] அடிமைத்தனத்தினின்று[QE][QS] மோவாபை நான்[QE][QS] திரும்பக் கொணர்வேன்,[QE][QS] என்கிறார் ஆண்டவர்.[QE][QS] மோவாபின் மீதான தண்டனைத் தீர்ப்பு[QE][QS] இத்துடன் முற்றிற்று.[QE][PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47

BG:

Opacity:

Color:


Size:


Font: