எரேமியா 17 : 1 (ECTA)
{யூதாவின் பாவமும் தண்டனையும்} [PS]யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியாலும் வைர நுனியாலும் எழுதப்பட்டுள்ளது. அது அவர்கள் இதயப் பலகையிலும் பலிபீடக் கொம்புகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
எரேமியா 17 : 2 (ECTA)
தழைத்த மரங்களின் கீழும், உயர்ந்த குன்றுகளின் மேலும், திறந்த வெளி மலைகள் மீதும் உள்ள அவர்கள் பலிபீடங்களையும் அசேராக் கம்பங்களையும் அவர்களின் பிள்ளைகளே நினைவுகூருகின்றார்கள்.
எரேமியா 17 : 3 (ECTA)
ஆகவே, நாடெங்கும் செய்யப்படும் பாவங்களுக்கு ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் தொழுகைமேடுகளையும் கொள்ளைப்பொருள் ஆக்குவேன்.
எரேமியா 17 : 4 (ECTA)
நான் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ள நாட்டின்மேல் உனக்குள்ள பிடி தளரும். முன்பின் தெரியாத ஒரு நாட்டில், உன் எதிரிகளுக்கு நீ அடிபணியச் செய்வேன். ஏனெனில், நீ என்னில் மூட்டியுள்ள கோபக்கனல் என்றென்றும் கொழுந்துவிட்டு எரியும்.
எரேமியா 17 : 5 (ECTA)
{அறிவுரைகள்}[PS] [QS] ஆண்டவர் கூறுவது இதுவே:[QE][QS] மனிதரில் நம்பிக்கை வைப்போரும்[QE][QS] வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக்[QE][QS] காண்போரும் சபிக்கப்படுவர்.[QE][QS]
எரேமியா 17 : 6 (ECTA)
6. அவர்கள் பாலைநிலத்துப்[QE][QS] புதர்ச்செடிக்கு ஒப்பாவர்.[QE][QS] பருவ காலத்திலும்[QE][QS] அவர்கள் பயனடையார்;[QE][QS] பாலை நிலத்தின்[QE][QS] வறண்ட பகுதிகளிலும்[QE][QS] யாரும் வாழா உவர் நிலத்திலுமே[QE][QS] அவர்கள் குடியிருப்பர்.[QE][QS]
எரேமியா 17 : 7 (ECTA)
7. ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்[QE][QS] பேறுபெற்றோர்;[QE][QS] ஆண்டவரே அவர்களது நம்பிக்கை.[QE][QS]
எரேமியா 17 : 8 (ECTA)
8. அவர்கள் நீர் அருகில் நடப்பட்ட[QE][QS] மரத்துக்கு ஒப்பாவர்;[QE][QS] அது நீரோடையை நோக்கி[QE][QS] வேர் விடுகின்றது.[QE][QS] வெப்பமிகு நேரத்தில்[QE][QS] அதற்கு அச்சமில்லை;[QE][QS] அதன் இலைகள்[QE][QS] பசுமையாய் இருக்கும்;[QE][QS] வறட்சிமிகு ஆண்டிலும்[QE][QS] அதற்குக் கவலை இராது;[QE][QS] அது எப்போதும் கனி கொடுக்கும்.[QE][QS]
எரேமியா 17 : 9 (ECTA)
9. இதயமே அனைத்திலும்[QE][QS] வஞ்சகம் மிக்கது;[QE][QS] அதனை நலமாக்க முடியாது.[QE][QS] அதனை யார்தான் புரிந்துகொள்வர்?[QE][QS]
எரேமியா 17 : 10 (ECTA)
10. ஆண்டவராகிய நானே[QE][QS] இதயச் சிந்தனைகளை ஆய்பவர்;[QE][QS] உள்ளுணர்வுகளைச்[QE][QS] சோதித்து அறிபவர்.[QE][QS] ஒவ்வொருவரின் வழிகளுக்கும்[QE][QS] செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு[QE][QS] நடத்துபவர்.[QE][QS]
எரேமியா 17 : 11 (ECTA)
11. நேர்மையற்ற வழிகளில்[QE][QS] செல்வம் சேர்ப்போர்[QE][QS] தாம் இடாத முட்டைகளை அடைகாக்கும்[QE][QS] கௌதாரி போன்றோர்;[QE][QS] தம் வாழ்நாள்களின் நடுவிலேயே[QE][QS] அவர்கள் அச்செல்வத்தை[QE][QS] இழந்துவிடுவர்;[QE][QS] இறுதியில் அவமதிப்புக்கு உள்ளாவர்.[QE][QS]
எரேமியா 17 : 12 (ECTA)
12. “நம் திருத்தூயகம்[QE][QS] தொடக்கத்திலிருந்தே[QE][QS] உயர்ந்த இடத்தில் அமைந்த,[QE][QS] மாட்சிமிகு அரியணையாய் உள்ளது.”[QE][QS]
எரேமியா 17 : 13 (ECTA)
13. ஆண்டவரே![QE][QS] இஸ்ரயேலின் நம்பிக்கையே![QE][QS] உம்மைப் புறக்கணித்தோர் யாவரும்[QE][QS] வெட்கமுறுவர்;[QE][QS] உம்மைவிட்டு அகன்றோர்[QE][QS] தரையில் எழுதப்பட்டோர் ஆவர்;[QE][QS] ஏனெனில், அவர்கள்[QE][QS] வாழ்வளிக்கும் நீரூற்றாகிய[QE][QS] ஆண்டவரைப் புறக்கணித்தார்கள்.[QE]
எரேமியா 17 : 14 (ECTA)
{எரேமியாவின் மன்றாட்டு}[PS] [QS] ஆண்டவரே, என்னை நலமாக்கும்;[QE][QS] நானும் நலமடைவேன்.[QE][QS] என்னை விடுவியும்;[QE][QS] நானும் விடுதலை அடைவேன்;[QE][QS] ஏனெனில், நீரே என் புகழ்ச்சிக்குரியவர்.[QE][QS]
எரேமியா 17 : 15 (ECTA)
15. இதோ அவர்கள் என்னிடம்,[QE][QS] “ஆண்டவரின் வாக்கு எங்கே?[QE][QS] அது நிறைவேறட்டுமே” என்கிறார்கள்.[QE][QS]
எரேமியா 17 : 16 (ECTA)
16. அவர்கள்மேல்[QE][QS] தீமையை அனுப்ப வேண்டும் என்று[QE][QS] நான் உம்மை நெருக்கவில்லை;[QE][QS] கொடுமையின் நாளை[QE][QS] நான் விரும்பவில்லை;[QE][QS] நான் கூறியவைதாம்[QE][QS] உமக்குத் தெரியமே;[QE][QS] அவை உம்முன்தாமே கூறப்பட்டன.[QE][QS]
எரேமியா 17 : 17 (ECTA)
17. நீ எனக்குத் திகிலாய் இராதீர்;[QE][QS] தீமையின் நாளில் நீரே என் புகலிடம்.[QE][QS]
எரேமியா 17 : 18 (ECTA)
18. என்னைத் துன்புறுத்துவோர்[QE][QS] வெட்கம் அடையட்டும்;[QE][QS] நானோ வெட்கம் அடையாதிருப்பேனாக![QE][QS] அவர்கள் திகிலுறட்டும்;[QE][QS] நானோ திகிலுறாதிருப்பேனாக.[QE][QS] தீமையின் நாளை[QE][QS] அவர்கள்மேல் வரச்செய்யும்;[QE][QS] இரட்டிப்பான அழிவு[QE][QS] அவர்கள்மேல் வரட்டும்;[QE][QS] அவர்கள் அடியோடு ஒழியட்டும்.[QE]
எரேமியா 17 : 19 (ECTA)
{ஓய்வுநாளை அனுசரித்தல்} [PS]ஆண்டவர் கூறியது இதுவே: நீ போய் யூதாவின் அரசர்களின் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் பயன்படும் பொதுமக்கள் வாயிலிலும் எருசலேமின் வாயில்கள் அனைத்திலும் நின்றுகொள்.[PE][PS]
எரேமியா 17 : 20 (ECTA)
நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டியது; இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் அரசர்களே, யூதாவின் அனைத்து மக்களே, எருசலேமில் வாழ்வோரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.
எரேமியா 17 : 21 (ECTA)
ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் உயிரை முன்னிட்டு ஓய்வுநாளில் சுமை தூக்க வேண்டாம்; அவற்றை எருசலேமின் வாயில்கள் வழியாகக் கொண்டு செல்லவும் வேண்டாம்.
எரேமியா 17 : 22 (ECTA)
ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்தும் சுமைகள் தூக்கிச் செல்லவேண்டாம். அன்று எந்த வேலையும் செய்யவேண்டாம். உங்கள் மூதாதையருக்கு நான் கொடுத்த கட்டளைப்படி ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடியுங்கள்.
எரேமியா 17 : 23 (ECTA)
அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை; நான் சொன்னதைக் கவனிக்கவில்லை; கேட்டுக் கற்றுக்கொள்ளாதபடி முரட்டுப் பிடிவாதம் செய்தனர்.[PE][PS]
எரேமியா 17 : 24 (ECTA)
ஆண்டவர் கூறுவது; நீங்கள் எனக்குச் செவிகொடுத்து ஓய்வு நாளில் இந்நகரின் வாயில்கள் வழியாகச் சுமை தூக்கிச் செல்லாது, வேலை எதுவும் செய்யாது, ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிப்பீர்களாகில்,
எரேமியா 17 : 25 (ECTA)
தாவீதின் அரியணையில் அமரும் அரசர்களும் இளவரசர்களும் இந்நகரின் வாயில் வழியாகச் செல்வார்கள்; குதிரைகளிலும் தேர்களிலும் ஏறிச் செல்வார்கள். அவர்களோடு தலைவர்களும் யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் செல்வார்கள். இந்நகரில் என்றுமே மக்கள் குடியிருப்பார்கள்.
எரேமியா 17 : 26 (ECTA)
அப்போது யூதாவின் நகர்களிலிருந்தும் எருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்தும் பென்யமின் நாட்டிலிருந்தும் செபேலா சமவெளியிலிருந்தும் மலை நாட்டிலிருந்தும் நெகேபிலிருந்தும் வருபவர்கள் எரி பலிகளையும் மற்றப் பலிகளையும் உணவுப் படையலையும் தூபத்தையும் நன்றிப் பலிகளையும் ஆண்டவர் இல்லத்துக்குக் கொண்டுவருவார்கள்.
எரேமியா 17 : 27 (ECTA)
ஆனால், நீங்கள் ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிக்கவேண்டும்; அன்று எருசலேமின் வாயில்கள் வழியாகச் சுமை தூக்கிச் செல்லக் கூடாது; எனினும் என்னுடைய சொல்லுக்கு நீங்கள் செவி கொடுக்காமல் இருந்தால், நான் எருசலேமின் வாயில்களில் தீப்பற்றியெரியச் செய்வேன்; அது நகரின் அரண்மனைகளை அழித்துவிடும்; அத்தீயோ அணையாது.[PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

BG:

Opacity:

Color:


Size:


Font: