எரேமியா 14 : 1 (ECTA)
{கொடிய வறட்சி} [PS]வறட்சி பற்றி எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:[QS]
எரேமியா 14 : 2 (ECTA)
2. யூதா துயருற்றுள்ளது;[QE][QS] அதன் வாயில்கள் சோர்வுற்றுள்ளன;[QE][QS] அதன் மக்கள் தரையில் விழுந்து[QE][QS] புலம்புகின்றார்கள்;[QE][QS] எருசலேமின் அழுகைக் குரல்[QE][QS] எழும்பியுள்ளது.[QE][QS]
எரேமியா 14 : 3 (ECTA)
3. உயர்குடி மக்கள் தம் ஊழியரைத்[QE][QS] தண்ணீர் எடுக்க அனுப்புகின்றார்கள்;[QE][QS] அவர்கள் நீர்த்தேக்கங்களுக்குச்[QE][QS] செல்கின்றார்கள்;[QE][QS] அங்குத் தண்ணீர் இல்லை;[QE][QS] அவர்கள் வெறுங்குடங்களோடு[QE][QS] திரும்பி வருகின்றார்கள்;[QE][QS] வெட்கி நாணித் தங்கள் தலைகளை[QE][QS] மூடிக்கொள்கின்றார்கள்.[QE][QS]
எரேமியா 14 : 4 (ECTA)
4. நாட்டில் மழை இல்லாததால்[QE][QS] தரை வெடிப்புற்றுள்ளது.[QE][QS] உழவர்கள் வெட்கித் தங்கள்[QE][QS] தலைகளை மூடிக் கொள்கின்றார்கள்;[QE][QS]
எரேமியா 14 : 5 (ECTA)
5. கன்று ஈன்ற வயல்வெளிப் பெண்மான்[QE][QS] புல் இல்லாமையால்[QE][QS] தன் கன்றை விட்டுவிட்டு ஓடிப்போகும்.[QE][QS]
எரேமியா 14 : 6 (ECTA)
6. காட்டுக் கழுதைகள்[QE][QS] மொட்டை மேடுகள்மேல் நிற்கின்றன;[QE][QS] காற்று இல்லாமையால்,[QE][QS] குள்ள நரிகளைப் போல்[QE][QS] மூச்சுத் திணறுகின்றன;[QE][QS] பசுமையே காணாததால்[QE][QS] அவற்றின் பார்வை மங்கிப் போயிற்று.[QE][QS]
எரேமியா 14 : 7 (ECTA)
7. ஆண்டவரே! நாங்கள் பலமுறை[QE][QS] உம்மை விட்டகன்றோம்.[QE][QS] உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.[QE][QS] எங்கள் குற்றங்களே எங்களுக்கு[QE][QS] எதிராய்ச் சான்றுபகர்கின்றன.[QE][QS] எனினும், உமது பெயருக்கேற்பச்[QE][QS] செயலாற்றும்.[QE][QS]
எரேமியா 14 : 8 (ECTA)
8. இஸ்ரயேலின் நம்பிக்கையே![QE][QS] துன்ப வேளையில் அதனை மீட்பவரே![QE][QS] நாட்டில் நீர் ஏன் அன்னியரைப் போல்[QE][QS] இருக்கவேண்டும்?[QE][QS] இரவு மட்டும் தங்க வரும்[QE][QS] வழிப்போக்கரைப்போல் நீர் ஏன் இருக்க வேண்டும்?[QE][QS]
எரேமியா 14 : 9 (ECTA)
9. நீர் ஏன் திகைப்புற்ற மனிதர்போல்[QE][QS] தோன்ற வேண்டும்?[QE][QS] ஏன் காக்கும் திறனற்ற வீரர் போல்[QE][QS] காணப்படவேண்டும்?[QE][QS] ஆயினும், ஆண்டவரே! நீர் எங்கள் நடுவில் உள்ளீர்; உமது பெயராலேயே நாங்கள் அழைக்கப்படுகிறோம்; எங்களைக் கைவிட்டு விடாதேயும்.[QE][QS]
எரேமியா 14 : 10 (ECTA)
10. இம்மக்களைக் குறித்து[QE][QS] ஆண்டவர் கூறுவது இதுவே;[QE][QS] அவர்கள் அலைந்து திரிய விரும்பினர்;[QE][QS] தங்கள் கால்களை அவர்கள்[QE][QS] கட்டுப்படுத்தவில்லை;[QE][QS] எனவே, ஆண்டவர் அவர்களை[QE][QS] ஏற்கவில்லை;[QE][QS] இப்போது அவர்களின் தீமையை[QE][QS] நினைவில் கொண்டு,[QE][QS] அவர்களின் பாவங்களுக்காக[QE][QS] அவர்களைத் தண்டிப்பார்.[QE][PE][PS]
எரேமியா 14 : 11 (ECTA)
ஆண்டவர் எனக்குக் கூறியது: இந்த மக்களின் நலனுக்காக நீ என்னிடம் மன்றாட வேண்டாம்.
எரேமியா 14 : 12 (ECTA)
அவர்கள் நோன்பு இருப்பினும் நான் அவர்களின் குரலைக் கேட்கமாட்டேன். அவர்கள் எரிபலிகளையும் தானியப் படையல்களையும் அளிப்பினும் அவற்றை நான் ஏற்கமாட்டேன். மாறாக, வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் அவர்களை ஒழித்து விடுவேன்.[PE][PS]
எரேமியா 14 : 13 (ECTA)
“ஓ! எம் தலைவராகிய ஆண்டவரே! ‘நீங்கள் வாளைச் சந்திக்க மாட்டீர்கள். உங்களிடையே பஞ்சம் வராது. மாறாக, இந்த இடத்தில் நிலையான அமைதியை உங்களுக்குத் தருவேன்’ என இறைவாக்கினர் அவர்களுக்குக் கூறுகின்றனரே!” என்றேன் நான்.[PE][PS]
எரேமியா 14 : 14 (ECTA)
ஆண்டவர் என்னிடம் கூறியது: “என் பெயரால் இறைவாக்கினர் பொய்யை உரைக்கின்றார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை; அவர்களுக்குக் கட்டளையிடவில்லை; அவர்களோடு பேசவுமில்லை.” அவர்கள் உங்களுக்கு இறைவாக்காக உரைப்பவை; பொய்யான காட்சிகள், பயனற்ற குறிகூறல், வஞ்சக எண்ணங்கள், சொந்தக் கற்பனைகள்.[PE][PS]
எரேமியா 14 : 15 (ECTA)
ஆகவே தம் பெயரால் இறைவாக்கு உரைப்போரைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே; நான் அவர்களை அனுப்பவில்லை; எனினும், அவர்கள் “இந்த நாட்டின்மேல் வாளும் பஞ்சமும் வாரா” என்று கூறுகிறார்கள். வாளாலும் பஞ்சத்தாலும் அந்த இறைவாக்கினரே அழிவுறுவர்.
எரேமியா 14 : 16 (ECTA)
அவர்களின் இறைவாக்கைக் கேட்கும் மக்களும் வாள், பஞ்சம் ஆகியவற்றின் காரணமாக எருசலேமின் தெருக்களில் தூக்கி வீசப்படுவார்கள். அவர்களையும் அவர்கள் மனைவியர், புதல்வர், புதவியரையும் புதைக்க யாரும் இரார். அவர்களது தீமையை அவர்கள் மீதே கொட்டுவேன்.[QS]
எரேமியா 14 : 17 (ECTA)
17. நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு;[QE][QS] “என் கண்கள் இரவு பகலாகக்[QE][QS] கண்ணீர் சொரியட்டும்;[QE][QS] இடைவிடாது சொரியட்டும்;[QE][QS] ஏனெனில், என் மக்களாம் கன்னிமகள்[QE][QS] நொறுங்குண்டாள்;[QE][QS] அவளது காயம் மிகப் பெரிது.[QE][QS]
எரேமியா 14 : 18 (ECTA)
18. வயல்வெளிகளுக்குச் சென்றால்,[QE][QS] இதோ! வாளால் மடிந்தவர்கள்![QE][QS] நகரில் நுழைந்தால்,[QE][QS] இதோ! பசியால் நலிந்தவர்கள்![QE][QS] இறைவாக்கினரும் குருக்களும்[QE][QS] தங்களுக்கு முன்பின் தெரியாத[QE][QS] நாட்டில் அலைகின்றனர்.[QE][QS]
எரேமியா 14 : 19 (ECTA)
19. நீர் யூதாவை முற்றிலும்[QE][QS] புறக்கணித்துவிட்டீரா?[QE][QS] சீயோனை உம் உள்ளம் வெறுத்து விட்டதா?[QE][QS] நாங்கள் குணமாக முடியாதபடி[QE][QS] ஏன் எங்களை நொறுக்கினீர்?[QE][QS] நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்;[QE][QS] பயனேதும் இல்லை![QE][QS] நலம்பெறும் காலத்தை[QE][QS] எதிர்பார்த்திருந்தோம்;[QE][QS] பேரச்சமே மிஞ்சியது![QE][QS]
எரேமியா 14 : 20 (ECTA)
20. ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும்[QE][QS] எங்கள் மூதாதையரின் தீமையையும்[QE][QS] நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்;[QE][QS] நாங்கள் உமக்கு எதிராய்ப்[QE][QS] பாவம் செய்தோம்.[QE][QS]
எரேமியா 14 : 21 (ECTA)
21. உம் பெயரை முன்னிட்டு[QE][QS] எங்களை உதறித் தள்ளாதீர்;[QE][QS] உம் மாட்சிமிகு அரியணையை[QE][QS] அவமதிக்காதீர்;[QE][QS] நீ எங்களோடு செய்த[QE][QS] உடன்படிக்கையை நினைவுகூரும்;[QE][QS] அதனை முறித்து விடாதீர்.[QE][QS]
எரேமியா 14 : 22 (ECTA)
22. வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள்[QE][QS] மழை தரவல்லது எதுவும் உண்டா?[QE][QS] வானங்கள் தாமாக[QE][QS] மழை பொழிய முடியுமா?[QE][QS] எங்கள் இறைவனாகிய ஆண்டவரே,[QE][QS] நீர் அல்லவா அதைச் செய்யக் கூடியவர்;[QE][QS] நாங்கள் உம்மையே[QE][QS] எதிர்நோக்கியுள்ளோம்;[QE][QS] எனெனில், இவற்றை எல்லாம்[QE][QS] செய்பவர் நீரே.[QE][PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: