ஏசாயா 28 : 1 (ECTA)
எப்ராயிமின் குடிவெறியரின்; மாண்புமிகு மணிமுடிக்கு ஐயோ கேடு! வாடுகின்ற மலராய், அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றதே! பள்ளத்தாக்கில் அது அமைந்துள்ளதே! நறுமணம் பூசிய தலைவர்கள் மது மயக்கத்தால் வீழ்ந்து கிடக்கின்றனரே!
ஏசாயா 28 : 2 (ECTA)
இதோ ஆற்றலும் வலிமையும் மிக்கோன் என் தலைவரிடம் உள்ளான்; அவன் கல்மழையென, அழிக்கும் புயலென, கரை புரண்டோடும் பெருவெள்ளமென வந்து, தன் கைவன்மையால் அதைத் தரையில் வீழ்த்துவான்.
ஏசாயா 28 : 3 (ECTA)
எப்ராயிம் குடிவெறியரின் மாண்புமிகு மணிமுடி கால்களால் மிதிக்கப்படும்.
ஏசாயா 28 : 4 (ECTA)
வாடுகின்ற மலராய் அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றது; நறுமணம் பூசிய தலைவர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்; இது கோடைக்காலம் வரும் முன் பழுத்த அத்திப்பழம் போலாகும்; அதைக் காண்பவன் தன் கைக்கு எட்டியதும் அதை விழுங்கி விடுவான்.
ஏசாயா 28 : 5 (ECTA)
அந்நாளில் படைகளின் ஆண்டவரே, தம் மக்களுள் எஞ்சியோருக்கு எழில்மிகு மணிமுடியாகவும் மாண்புமிகு மகுடமாகவும் இருப்பார்.
ஏசாயா 28 : 6 (ECTA)
நீதி வழங்க அமர்வோனுக்கு நீதியின் உணர்வாகவும் நகரவாயிலைத் தாக்குவோர் புறமுதுகிடுமாறு போராடுவோர்க்கு ஆற்றலாகவும் அவர் இருப்பார்.
ஏசாயா 28 : 7 (ECTA)
குருக்களும் இறைவாக்கினரும் திராட்சை இரசத்தால் தடுமாறுகின்றனர்; மதுவால் தள்ளாடுகின்றனர்; அவர்கள் மதுவால் மதி மயங்குகின்றனர்; திராட்சை மதுவுக்கு அடிமையாகின்றனர்; மதுவால் மயங்குகின்றனர்; காட்சி காணுகையில் மருள்கின்றனர்; நீதி வழங்குகையில் தடுமாறுகின்றனர்!
ஏசாயா 28 : 8 (ECTA)
மேசைகள் எல்லாம் வாந்தியால் நிறைந்துள்ளன; அழுக்குப் படியாத இடமே இல்லை!
ஏசாயா 28 : 9 (ECTA)
"இவன் யாருக்கு அறிவு புகட்டுவான்? யாருக்குச் செய்தியைப் புரியுமாறு எடுத்துரைப்பான்? பால்குடி மறந்தோர்க்கா? தாய்ப்பாலை விட்டு அகன்றோர்க்கா?
ஏசாயா 28 : 10 (ECTA)
ஏனெனில் கட்டளை மேல் கட்டளை, கட்டளைமேல் கட்டளை; அளவு நூலுக்குமேல் அளவுநூல், அளவு நூலுக்கு மேல் அளவுநூல்; இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்" என்கின்றனர்.
ஏசாயா 28 : 11 (ECTA)
ஆனால் குழறிய பேச்சும் புரியாத மொழியும் கொண்டோர் மூலம் ஆண்டவர் இம்மக்களுக்குப் பாடம் கற்பிப்பார்.
ஏசாயா 28 : 12 (ECTA)
"இதோ உள்ளது இளைப்பாற்றி; களைத்தவன் இளைப்பாறட்டும்; இதோ உள்ளது இளைப்பாற்றி" என்று அவர்களுக்குச் சொன்னாலும் செவி கொடுக்க மாட்டார்கள்.
ஏசாயா 28 : 13 (ECTA)
ஆதலால் ஆண்டவரின் வார்த்தை அவர்களுக்குக் கட்டளைமேல் கட்டளையாகவும் அளவுநூல்மேல் அளவு நூலாகவும் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சமாகவும் இருக்கும்; அவர்கள் புறப்பட்டுச்செல்கையில் நிலை தடுமாறி வீழ்வர்; நொறுக்கப்படுவர்; கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.
ஏசாயா 28 : 14 (ECTA)
ஆதலால், எருசலேமிலுள்ள இம்மக்களை ஆள்வோரே! இகழ்வோரே! ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்.
ஏசாயா 28 : 15 (ECTA)
"நாங்கள் சாவோடு ஓர் உடன்படிக்கை செய்துள்ளோம்; பாதாளத்துடன் ஓர் உடன்பாடு ஏற்படுத்தியுள்ளோம். பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்துவந்தாலும் அவனால் எங்களை அணுக இயலாது. ஏனெனில், பொய்மையை நாங்கள் எங்கள் புகலிடமாய்க் கொண்டுள்ளோம்; வஞ்சகத்தை எங்களுக்கு மறைவிடமாய் ஆக்கியுள்ளோம்" என்று சொன்னீர்கள்.
ஏசாயா 28 : 16 (ECTA)
ஆதலால், ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே; இதோ! சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன்; அது பரிசோதிக்கப்பட்ட கல்; விலையுயர்ந்த மூலைக்கல்; உறுதியான அடித்தளமாய் அமையும் கல்; "நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான். "
ஏசாயா 28 : 17 (ECTA)
நீதியை அளவு நூலாகவும், நேர்மையைத் தூக்கு நூலாகவும் அமைப்பேன். பொய்மை எனும் புகலிடத்தைக் கல்மழை அழிக்கும்; மறைவிடத்தைப் பெருவெள்ளம் அடித்துச் செல்லும்.
ஏசாயா 28 : 18 (ECTA)
சாவுடன் நீங்கள் உடன்படிக்கை முறிந்து போகும்; பாதாளத்துடன் நீங்கள் செய்த உடன்பாடு நிலைத்து நிற்காது; பகைவன் பெருவெள்ளமெனப் பாய்ந்து வரும்போது நீங்கள் அவனால் நசுக்கப்படுவீர்கள்.
ஏசாயா 28 : 19 (ECTA)
பகை உங்களைக் கடக்கும் பொழுதெல்லாம் உங்களை வாரிக்கொண்டு போகும்; அது காலைதோறும், பகலும் இரவும், பாய்ந்து வரும்; அச்செய்தியை உணர்வதே மிகவும் திகிலூட்டும்.
ஏசாயா 28 : 20 (ECTA)
கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; போர்த்திக் கொள்ளப் போர்வையின் அகலம் பற்றாது.
ஏசாயா 28 : 21 (ECTA)
ஆண்டவர் பெராசிம் மலைமேல் கிளர்ந்தெழுந்ததுபோல் எழுவார்! கிபயோன் பள்ளத்தாக்கில் செய்ததுபோல் செயலாற்றக் கொதித்தெழுவார்! தம் பணியை நிறைவேற்றுவார்! விந்தையானது அவர் தம் செயல்! புதிரானது அவர்தம் பணி!
ஏசாயா 28 : 22 (ECTA)
உங்கள் தளைகள் கடினமாகாதபடி இகழ்வதை விட்டுவிடுங்கள்; ஏனெனில் நாடு முழுவதையும் அழித்தொழிக்குமாறு படைகளின் ஆண்டவராகிய என் தலைவர் இட்ட ஆணையை நான் கேட்டேன்.
ஏசாயா 28 : 23 (ECTA)
செவி கொடுங்கள்; நான் கூறுவதைக் கேளுங்கள்; செவிசாய்த்து நான் சொல்வதைக் கவனியுங்கள்;
ஏசாயா 28 : 24 (ECTA)
விதைப்பதற்கென உழுபவர்கள் நாள்தோறும் உழுது ? நிலத்தை நாள்தோறும் கிளறிப் பரம்படிப்பார்களா?
ஏசாயா 28 : 25 (ECTA)
அதன் மேற்பரப்பைச் சமமாக்கியபின் உளுந்தைத் தூவிச் சீரகத்தை விதைப்பார்களன்றோ? வாற்கோதுமையைக் கோதுமைப் பாத்திகளிலும், தானியங்களை ஓரங்களில் உரிய இடத்திலும் விதைப்பார்களன்றோ?
ஏசாயா 28 : 26 (ECTA)
இந்த நடைமுறையை அவர்கள் கற்றுக் கொள்கின்றார்கள்; அவர்களின் கடவுள் அவர்களுக்குக் கற்றுத் தருகின்றார்;
ஏசாயா 28 : 27 (ECTA)
உளுந்து இருப்புக் கோலால் அடிக்கப்படுவதில்லை; சீரகத்தின் மேல் வண்டி உருளை உருட்டப்படுவதில்லை; ஆனால் உளுந்து கோலாலும் சீரகம் தடியாலும் தட்டியடிக்கப்படும்.
ஏசாயா 28 : 28 (ECTA)
உணவுக்கான தானியத்தை யாரும் நொறுக்குவார்களா? இல்லை; அதை அவர்கள் இடைவிடாது போரடிப்பதில்லை. வண்டி உருளையையும் குதிரையையும் அதன்மேல் ஓட்டும்போது, அதை அவர்கள் நொறுக்குவதில்லை.
ஏசாயா 28 : 29 (ECTA)
படைகளின் ஆண்டவரிடமிருந்து இந்த அறிவு வருகின்றது; அவர் திட்டமிடுவதில்; வியப்புக்குரியவர்; செயற்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29

BG:

Opacity:

Color:


Size:


Font: