ஆதியாகமம் 3 : 1 (ECTA)
{மனிதனின் கீழ்ப்படியாமை} [PS]ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று கேட்டது.
ஆதியாகமம் 3 : 2 (ECTA)
பெண் பாம்பிடம், “தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம்.
ஆதியாகமம் 3 : 3 (ECTA)
ஆனால், ‘தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்’ என்று கடவுள் சொன்னார்,” என்றாள்.
ஆதியாகமம் 3 : 4 (ECTA)
பாம்பு பெண்ணிடம், “நீங்கள் சாகவே மாட்டீர்கள்;
ஆதியாகமம் 3 : 5 (ECTA)
ஏனெனில், நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது.
ஆதியாகமம் 3 : 6 (ECTA)
அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.
ஆதியாகமம் 3 : 7 (ECTA)
அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.[PE][PS]
ஆதியாகமம் 3 : 8 (ECTA)
மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.
ஆதியாகமம் 3 : 9 (ECTA)
ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.
ஆதியாகமம் 3 : 10 (ECTA)
“உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.
ஆதியாகமம் 3 : 11 (ECTA)
“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.
ஆதியாகமம் 3 : 12 (ECTA)
அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.
ஆதியாகமம் 3 : 13 (ECTA)
ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள்.[PE][PS][QS]
ஆதியாகமம் 3 : 14 (ECTA)
14. {கடவுளின் தீர்ப்பும் வாக்குறுதியும்} ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், [BR] “நீ இவ்வாறு செய்ததால்,[QE][QS] கால்நடைகள், காட்டுவிலங்குகள்[QE][QS] அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய்.[QE][QS] உன் வயிற்றினால் ஊர்ந்து[QE][QS] உன் வாழ்நாள் எல்லாம்[QE][QS] புழுதியைத் தின்பாய்.[QE][QS]
ஆதியாகமம் 3 : 15 (ECTA)
உனக்கும் பெண்ணுக்கும், [BR] உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்[QE][QS] பகையை உண்டாக்குவேன்.[QE][QS] அவள் வித்து உன் தலையைக்[QE][QS] காயப்படுத்தும்.[QE][QS] நீ அதன் குதிங்காலைக்[QE][QS] காயப்படுத்துவாய்” என்றார்.[QE][QS]
ஆதியாகமம் 3 : 16 (ECTA)
அவர் பெண்ணிடம், [BR] “உன் மகப்பேற்றின் வேதனையை[QE][QS] மிகுதியாக்குவேன்;[QE][QS] வேதனையில் நீ குழந்தைகள்[QE][QS] பெறுவாய்.[QE][QS] ஆயினும் உன் கணவன்மேல்[QE][QS] நீ வேட்கைகொள்வாய்;[QE][QS] அவனோ உன்னை ஆள்வான்”[QE][QS] என்றார்.[QE][QS]
ஆதியாகமம் 3 : 17 (ECTA)
அவர் மனிதனிடம், [BR] “உன் மனைவியின் சொல்லைக்[QE][QS] கேட்டு, உண்ணக்கூடாது என்று[QE][QS] நான் கட்டளையிட்டு விலக்கிய[QE][QS] மரத்திலிருந்து நீ உண்டதால்[QE][QS] உன் பொருட்டு நிலம்[QE][QS] சபிக்கப்பட்டுள்ளது;[QE][QS] உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன்[QE][QS] பயனை உழைத்து நீ உண்பாய்.[QE][QS]
ஆதியாகமம் 3 : 18 (ECTA)
முட்செடியையும் முட்புதரையும்[QE][QS] உனக்கு அது முளைப்பிக்கும்.[QE][QS] வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய்.[QE][QS]
ஆதியாகமம் 3 : 19 (ECTA)
நீ மண்ணிலிருந்து[QE][QS] உருவாக்கப்பட்டதால்[QE][QS] அதற்குத் திரும்பும்வரை[QE][QS] நெற்றி வியர்வை நிலத்தில் விழ[QE][QS] உழைத்து உன் உணவை உண்பாய்.[QE][QS] நீ மண்ணாய் இருக்கிறாய்;[QE][QS] மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.[QE][PE][PS]
ஆதியாகமம் 3 : 20 (ECTA)
மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில், உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.
ஆதியாகமம் 3 : 21 (ECTA)
ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார்.[PE][PS]
ஆதியாகமம் 3 : 22 (ECTA)
பின்பு, ஆண்டவராகிய கடவுள், “மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது” என்றார்.
ஆதியாகமம் 3 : 23 (ECTA)
எனவே, ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.
ஆதியாகமம் 3 : 24 (ECTA)
இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.[PE]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24

BG:

Opacity:

Color:


Size:


Font: