ஆதியாகமம் 29 : 1 (ECTA)
யாக்கோபு கீழ்த்திசை மக்களின் நாட்டை நோக்கிக் காலெடுத்து வைத்துப் பயணமானார்.
ஆதியாகமம் 29 : 2 (ECTA)
இதோ! வயல்வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே கிடை போட்டிருந்த ஆட்டுமந்தைகள் மூன்றையும் கண்டார். அந்தக் கிணற்றிலிருந்துதான் மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டப்படும். அதன் வாய் ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது.
ஆதியாகமம் 29 : 3 (ECTA)
மந்தைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தபின் இடையர்கள் கல்லைப் புரட்டி, அவை குடித்து முடிந்ததும், மறுபடியும் கல்லைக் கிணற்று வாயின்மேல் தூக்கிவைப்பது வழக்கம்.
ஆதியாகமம் 29 : 4 (ECTA)
யாக்கோபு இடையர்களை நோக்கி, "சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என, அவர்கள்; "நாங்கள் காரானிலிருந்து வருகிறோம்" என்றார்கள்.
ஆதியாகமம் 29 : 5 (ECTA)
மீண்டும் அவர்; "நாகோரின் பேரன் லாபானை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்க, அவர்கள், "அவரை எங்களுக்குத் தெரியும்" என்றார்கள்.
ஆதியாகமம் 29 : 6 (ECTA)
அவர் நலம்தானா?" என்று யாக்கோபு கேட்க, அவர்கள் "ஆம், அவர் நலமே. இதோ! அவர் மகள் ராகேல் தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறாள்" என்றார்கள்.
ஆதியாகமம் 29 : 7 (ECTA)
அப்பொழுது யாக்கோபு, "பொழுது சாய இன்னும் வெகுநேரம் இருக்கிறது! மந்தைகளை ஒன்றுசேர்ப்பதற்கு நேரம் ஆகவில்லை. ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லுங்கள்" என்றார்.
ஆதியாகமம் 29 : 8 (ECTA)
அதற்கு அவர்கள், "நாங்கள் அப்படிச் செய்யக்கூடாது. ஏனெனில், எல்லா மந்தைகளையும் ஒன்றுசேர்த்த பின்னரே கிணற்று வாயினின்று கல் புரட்டப்படும். அப்பொழுதுதான் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்" என்று சொன்னார்கள்.
ஆதியாகமம் 29 : 9 (ECTA)
இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஆடு மேய்ப்பவளான ராகேல் தன் தந்தையின் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
ஆதியாகமம் 29 : 10 (ECTA)
ராகேல் தன் தாய்மாமன் லாபானின் மகள் என்றும் ஆடுகள் அவனுடையவை என்றும் யாக்கோபு கண்டார்; எனவே கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டித் தன் தாய்மாமன் லாபானின் மந்தைக்குத் தண்ணீர் காட்டினார்;
ஆதியாகமம் 29 : 11 (ECTA)
பின் ராகேலை முத்தமிட்டுக் கதறி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
ஆதியாகமம் 29 : 12 (ECTA)
பின்பு தாம் அவள் தந்தைக்கு உறவினர் என்றும் ரெபேக்காவின் மகன் என்றும் அவளுக்குத் தெரிவிக்க, உடனே அவள் ஓடிப்போய்த் தன் தந்தையிடம் சொன்னாள்.
ஆதியாகமம் 29 : 13 (ECTA)
தன் சகோதரியின் மகன் யாக்கோபு வந்த செய்தி கேட்டவுடன் லாபான் அவருக்கு எதிர்கொண்டோடி, அவரை அரவணைத்து முத்தமிட்டுத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கு யாக்கோபு தமக்கு நேர்ந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்தார்.
ஆதியாகமம் 29 : 14 (ECTA)
லாபான் அவரிடம், "நீ என் எலும்பும் சதையுமல்லவா?" என்றான். அவனுடன் அவர் ஒரு மாத காலம் தங்கியிருந்தார்.
ஆதியாகமம் 29 : 15 (ECTA)
அதன்பின் லாபான் யாக்கோபை நோக்கி, "நீ என் உறவினன் என்பதற்காக ஒன்றும் வாங்காமல் எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்? சொல்" என்றான்.
ஆதியாகமம் 29 : 16 (ECTA)
லாபானுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர். மூத்தவள் பெயர் லேயா; இளையவள் பெயர் ராகேல்.
ஆதியாகமம் 29 : 17 (ECTA)
ஆனால் லேயா மங்கிய பார்வை உடையவள். ராகேலோ வடிவழகும் எழில் தோற்றமும் உள்ளவள்.
ஆதியாகமம் 29 : 18 (ECTA)
யாக்கோபு ராகேலை விரும்பினார். எனவே அவர், "உம் இளைய மகள் ராகேலுக்காக ஏழு ஆண்டுகள் உம்மிடம் வேலை செய்கிறேன்" என்றார்.
ஆதியாகமம் 29 : 19 (ECTA)
அதற்கு லாபான், "அவளை அன்னியன் ஒருவனுக்குக் கொடுப்பதைவிட, உனக்குக் கொடுப்பதே மேல். என்னோடு தங்கியிரு "என்றான்.
ஆதியாகமம் 29 : 20 (ECTA)
அப்படியே யாக்கோபு ஏழாண்டுகள் ராகேலை முன்னிட்டு வேலை செய்தார். ஆனால் அவர் அவள்மீது வைத்திருந்த அன்பின் மிகுதியால் அது அவருக்குச் சில நாட்களாகவே தோன்றியது.
ஆதியாகமம் 29 : 21 (ECTA)
பின் யாக்கோபு லாபானை நோக்கி; "நான் என் மனைவியோடு சேரும்பொருட்டு, அவளை எனக்குத் தாரும். என் ஒப்பந்த நாள்கள் நிறைவெய்திவிட்டன" என்றார்.
ஆதியாகமம் 29 : 22 (ECTA)
ஆகவே லாபான் அவ்வ+ர் மக்கள் அனைவரையும் அழைத்துத் திருமண விருந்தளித்தான்.
ஆதியாகமம் 29 : 23 (ECTA)
ஆனால், மாலையானதும் அவன் தன் மகள் லேயாவை அழைத்துக் கொண்டுபோய் யாக்கோபிடம் விட, அவர் அவளுடன் உறவு கொண்டார்.
ஆதியாகமம் 29 : 24 (ECTA)
லாபான் தன் மகள் லேயாவுக்குப் பணிபுரியத் தன் பணிப்பெண் சில்பாவைக் கொடுத்தான்.
ஆதியாகமம் 29 : 25 (ECTA)
அதிகாலையில் அந்தப் பெண் லேயா என்று கண்டு, யாக்கோபு லாபானை நோக்கி; "நீர் எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா நான் உம்மிடம் வேலைசெய்தேன்? என்னை ஏமாற்றியது ஏன்?" என்றார்.
ஆதியாகமம் 29 : 26 (ECTA)
அதற்கு லாபான்; "மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது எங்கள் ஊர் வழக்கமில்லை.
ஆதியாகமம் 29 : 27 (ECTA)
ஆகையால் நீ இவளோடு ஏழு நாள்களைக் கழி. இன்னும் ஏழாண்டுகள் என்னிடம் வேலை செய்தால் அவளையும் உனக்குக் கொடுப்பேன்" என்றான்.
ஆதியாகமம் 29 : 28 (ECTA)
அவ்வாறே யாக்கோபு லேயாவுடன் ஏழு நாள்களைக் கழித்தார். அதன் பின் லாபான் தன் மகள் ராகேலை அவருக்கு மனைவியாகக் கொடுத்தான்.
ஆதியாகமம் 29 : 29 (ECTA)
லாபான் தன் மகள் ராகேலுக்குப் பணிபுரியத் தன் பணிப்பெண் பில்காவைக் கொடுத்தான்.
ஆதியாகமம் 29 : 30 (ECTA)
யாக்கோபு ராகேலுடன் கூடிவாழ்ந்தார். அவளை லேயாவைவிட அதிகம் நேசித்தார். லாபானிடம் மேலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்தார்.
ஆதியாகமம் 29 : 31 (ECTA)
இப்படியிருக்க லேயா வெறுப்புக்குள்ளானதை ஆண்டவர் கண்டு அவருக்குத் தாய்மைப்பேறு அருளினார். ராகேலோ மலடியாகவே இருந்தார்.
ஆதியாகமம் 29 : 32 (ECTA)
லேயா கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். "ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இப்பொழுது என் கணவர் என்மீது அன்புகூர்வார் என்பது உறுதி" என்று கூறி, அவனுக்கு "ரூபன் "(1 ) என்று பெயரிட்டார்.
ஆதியாகமம் 29 : 33 (ECTA)
மீண்டும் அவர் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். "நான் வெறுப்புக்குள்ளானேன் என்பதை ஆண்டவர் கேட்டு, இவனையும் எனக்குத் தந்தருளினார்" என்று சொல்லி, அவனுக்குச் "சிமியோன்" (2 ) என்று பெயரிட்டார்.
ஆதியாகமம் 29 : 34 (ECTA)
அவர் மீண்டும் கருவுற்று இன்னொரு மகனைப் பெற்றெடுத்தார். "இப்பொழுது என்கணவர் என்னோடு இணைந்திருப்பார் என்பது உறுதி. ஏனெனில் நான் அவருக்கு மூன்று புதல்வரைப் பெற்றெடுத்துள்ளேன்" என்று கூறி அவனுக்கு "லேவி "(3 ) என்று பெயரிட்டார்.
ஆதியாகமம் 29 : 35 (ECTA)
அவர் மீண்டும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். "இப்போது ஆண்டவரை நான் மாட்சி படுத்துவேன் ", என்று சொல்லி அவனுக்கு "யூதா "(4 ) என்று பெயரிட்டார். அதன்பின் அவருக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35

BG:

Opacity:

Color:


Size:


Font: