உபாகமம் 14 : 1 (ECTA)
துக்கம் கொண்டாடும் முறைக்குத் தடை நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் மக்கள். எனவே, இறந்தவருக்காக உங்கள் உடலைச் சிதைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் தலைமுடியை மழித்துக்கொள்ளவும் வேண்டாம். [* லேவி 19:28; 21: 5 ]
உபாகமம் 14 : 2 (ECTA)
ஏனெனில், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். மண்ணுலகின்மீது உள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் தனிச்சொத்தாக ஆண்டவர் தேர்ந்துகொண்டார். [* விப 19:5-6; இச 4:20; 7:6; 26:18; தீத் 2:14; 1 பேது 2: 9 ]
உபாகமம் 14 : 3 (ECTA)
உண்ணத் தக்க, தகாத விலங்குகள்
(லேவி 11:1-47)
தீட்டான எதையும் உண்ணவேண்டாம்.
உபாகமம் 14 : 4 (ECTA)
நீங்கள் உண்ணத்தகும் விலங்குகள் இவையே: மாடு, செம்மறியாடு,
உபாகமம் 14 : 5 (ECTA)
வெள்ளாடு, கலைமான், காட்டுமான், கவரிமான், காட்டு வெள்ளாடு, கொம்புமான், காட்டெருது, காட்டுச் செம்மறி ஆகியன.
உபாகமம் 14 : 6 (ECTA)
மேலும், விரிகுளம்பு உள்ள விலங்குகளில் குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருப்பதும் அசை போடுவதுமான விலங்குகளை உண்ணலாம்.
உபாகமம் 14 : 7 (ECTA)
ஆயினும், அசைபோடுவனவற்றிலும், விரிகுளம்பு உள்ளவைகளிலும், ஒட்டகம், முயல், குழி முயல் போன்றவற்றை உண்ண வேண்டாம். ஏனெனில், அவை அசை போடுகின்றன. ஆனால், அவற்றுக்கு விரிகுளம்பு இல்லை. அவை உங்களுக்குத் தீட்டானவை.
உபாகமம் 14 : 8 (ECTA)
பன்றி விரிகுளம்பு உள்ளதாயினும், அசைபோடுவதில்லை; அதுவும் உங்களுக்குத் தீட்டானது. இவற்றின் இறைச்சியை உண்ணவும் வேண்டாம்; இவற்றின் இறந்த உடலைத் தொடவும் வேண்டாம்.
உபாகமம் 14 : 9 (ECTA)
நீர்வாழ்வன அனைத்திலும் சிறகும் செதிலும் உள்ளவற்றை நீங்கள் உண்ணலாம்.
உபாகமம் 14 : 10 (ECTA)
சிறகும் செதிலும் அற்ற எதையும் உண்ணலாகாது. அவை உங்களுக்குத் தீட்டானவை.
உபாகமம் 14 : 11 (ECTA)
தீட்டற்ற எல்லாப் பறவைகளையும் நீங்கள் உண்ணலாம்.
உபாகமம் 14 : 12 (ECTA)
ஆனால், பறவைகளில் பின்வருவனவற்றை நீங்கள் உண்ணலாகாது;
உபாகமம் 14 : 13 (ECTA)
கழுகு, கருடன், பைரி, வல்லூறு, எல்லாவிதப் பருந்துகள்,
உபாகமம் 14 : 14 (ECTA)
எல்லாவிதக் காகங்கள்,
உபாகமம் 14 : 15 (ECTA)
நெருப்புக் கோழிகள், கூகைகள், செம்புகங்கள், எல்லாவிதமான வேட்டைப் பருந்துகள்,
உபாகமம் 14 : 16 (ECTA)
ஆந்தை, கோட்டான், நாரை
உபாகமம் 14 : 17 (ECTA)
மீன்கொத்தி, நீர்க்காகங்கள், நீர்க்கோழி,
உபாகமம் 14 : 18 (ECTA)
கொக்கு மற்றும் எல்லாவித வல்லூறு, புழுக்கொத்தி, வெளவால் ஆகியன.
உபாகமம் 14 : 19 (ECTA)
மேலும், பறப்பனவற்றில் பூச்சிகள் யாவும் உங்களுக்குத் தீட்டானவை. அவற்றை உண்ண வேண்டாம்.
உபாகமம் 14 : 20 (ECTA)
தீட்டற்ற பறவைகள் அனைத்தையும் நீங்கள் உண்ணலாம்.
உபாகமம் 14 : 21 (ECTA)
தானாய் இறந்துபோன எதையும் உண்ண வேண்டாம். ஆனால், அதை உன்வீட்டிலிருக்கும் அந்நியனுக்கு உண்ணும்படி நீ கொடுக்கலாம், அல்லது வேற்றினத்தானுக்கு விற்கலாம். ஏனெனில், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். வெள்ளாட்டுக் குட்டியை அதன் தாய்ப்பாலில் சமைக்க வேண்டாம். [* விப 23:19; 34: 26 ]
உபாகமம் 14 : 22 (ECTA)
பத்திலொரு பாகம் அளிப்பதற்கான சட்டம் ஆண்டுதோறும் உன் நிலத்தில் விளையும் எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்தெடு. * லேவி 27:30-33; எண் 18:21..
உபாகமம் 14 : 23 (ECTA)
தம்பெயர் விளங்கும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொண்ட இடத்தில், உன் தானியங்களிலும், உன் திராட்சை இரசத்திலும், எண்ணெயிலும் பத்திலொரு பாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுக்களையும் அவரது திருமுன் உண்பாய். அதனால், உன் கடவுளாகிய ஆண்டவருக்கு என்றும் அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வாய். * லேவி 27:30-33; எண் 18:21..
உபாகமம் 14 : 24 (ECTA)
உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசியளிக்கும் போது, அவர் தம் பெயர் விளங்கும்படி தேர்ந்து கொண்ட இடம் உனக்கு வெகு தொலையில் இருந்தால், நெடும் பயணம் செய்யவேண்டியதாயும், உன் பொருள்களைத் தூக்கிச் செல்ல முடியாததாயும் இருந்தால், * லேவி 27:30-33; எண் 18:21..
உபாகமம் 14 : 25 (ECTA)
நீ அதை விற்று, பணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் இடத்திற்குச் செல். * லேவி 27:30-33; எண் 18:21..
உபாகமம் 14 : 26 (ECTA)
அங்கே உன் விருப்பம் போல் மாடு, ஆடு, திராட்சை இரசம், அல்லது மது ஆகியவற்றையும் உன் நெஞ்சம் விரும்பும் எதையும் அந்தப் பணத்திற்கு வாங்கி, நீயும் உன் வீட்டாரும் உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்டு மகிழ்வீர்களாக! * லேவி 27:30-33; எண் 18:21..
உபாகமம் 14 : 27 (ECTA)
உன் நகரில் குடியிருக்கும் லேவியனுக்கு உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாததால், அவனைக் கைவிட்டு விடாதே. * லேவி 27:30-33; எண் 18:21..
உபாகமம் 14 : 28 (ECTA)
மூன்றாம் ஆண்டின் இறுதியில் அவ்வாண்டில் விளைகின்ற எல்லாப் பலன்களிலும் பத்திலொரு பாகத்தைப் பிரித்து, உனது நகரின் வாயிலருகே வை. * லேவி 27:30-33; எண் 18:21..
உபாகமம் 14 : 29 (ECTA)
உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாத லேவியரும், உன் நகரில் வாழும் அந்நியரும், அநாதைகளும், கைம்பெண்களும் உண்டு நிறைவு கொள்வர். அப்போது அனைத்துச் செயல்களிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார். * லேவி 27:30-33; எண் 18:21..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29