ஆமோஸ் 1 : 1 (ECTA)
தெக்கோவாவில் கால்நடைச் செல்வம் மிகுதியாக உடையவர்களுள் ஒருவர் ஆமோஸ். யூதாவை உசியாவும் இஸ்ரயேலை யோவாசின் மகன் எரொபவாமும் ஆண்டுவந்த காலத்தில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன், இஸ்ரயேலைக் குறித்து ஆமோஸ் காட்சி கண்டு கூறியவை பின்வருமாறு: [* 2 அர 15:1-7; 2 குறி 26:1-23; 2 அர 14:23- 29 ]
ஆமோஸ் 1 : 2 (ECTA)
“சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்; எருசலேமிலிருந்து அவர் முழங்குகின்றார்; இடையர்களின் மேய்ச்சல் நிலங்கள் தீய்ந்து போகின்றன; கர்மேல் மலையின் உச்சியும் காய்ந்து போகின்றது”. [* யோவே 3: 16 ]
ஆமோஸ் 1 : 3 (ECTA)
வேற்றினத்தார்மீது ஆண்டவரின் தீர்ப்புதமஸ்கு நகர் ஆண்டவர் கூறுவது இதுவே: தமஸ்கு நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக, நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன். ஏனெனில், அவர்கள் கிலயாதை இரும்புக் கருவிகளைக் கொண்டு போராடித்தார்கள். [* எசா 17:1-3; எரே 49:23-27; செக் 9: 1 ; * ‘மூன்றும் நான்குமாகிய’ என்பது பொருள். ]
ஆமோஸ் 1 : 4 (ECTA)
ஆதலால் அசாயேல் வீட்டின்மேல் தீ மூளச் செய்வேன். அது பெனதாது கோட்டைகளை விழுங்கிவிடும். [* எசா 17:1-3; எரே 49:23-27; செக் 9: 1 ]
ஆமோஸ் 1 : 5 (ECTA)
தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைப்பேன். பிக்காத்தாவேனில் குடியிருப்பவர்களையும் பெத்ஏதேனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன். ஆராமின் மக்கள் கீருக்கு நாடுகடத்தப்படுவார்கள்” என்கிறார் ஆண்டவர். [* எசா 17:1-3; எரே 49:23-27; செக் 9: 1 ; * எபிரேயத்தில், ‘சிற்றின்ப இல்லம்’ என்பது பொருள்.. ]
ஆமோஸ் 1 : 6 (ECTA)
பெலிஸ்தியா நாடு ஆண்டவர் கூறுவது இதுவே: “காசா நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன். அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்; [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; செப் 2:4-7; செக் 9:5- 7 ]
ஆமோஸ் 1 : 7 (ECTA)
ஆதலால் காசாவின் கோட்டை மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை விழுங்கிவிடும். [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; செப் 2:4-7; செக் 9:5- 7 ]
ஆமோஸ் 1 : 8 (ECTA)
அஸ்தோதில் குடியிருப்பவர்களையும் அஸ்கலோனில் செங்கோல் பிடித்திருப்பவனையும் ஒழிப்பேன்; எக்ரோனுக்கு எதிராக என் கையை ஓங்குவேன்; பெலிஸ்தியருள் எஞ்சியிருப்போரும் அழிந்திடுவர்” என்கிறார் ஆண்டவராகிய என் தலைவர். [* எசா 14:29-31; எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; செப் 2:4-7; செக் 9:5- 7 ]
ஆமோஸ் 1 : 9 (ECTA)
தீர் நகர் ஆண்டவர் கூறுவுது இதுவே: “தீர் நகரினர் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்; ஏனெனில், அவர்கள் ஒரு முழு இனத்தையே ஏதோமுக்கு அடிமைகளாகக் கையளித்தார்கள்; சகோதர உடன்படிக்கையை அவர்கள் நினைவில் கொள்ளவில்லை. [* எசா 23:1-18; எசே 26:1-28:19; யோவே 3:4-8; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
ஆமோஸ் 1 : 10 (ECTA)
ஆதலால் தீரின் கோட்டை மதில்கள் மேல் நெருப்பைக் கொட்டுவேன்; அது அச்சுவர்களை விழுங்கிவிடும்.” [* எசா 23:1-18; எசே 26:1-28:19; யோவே 3:4-8; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
ஆமோஸ் 1 : 11 (ECTA)
ஏதோம் நாடு ஆண்டவர் கூறுவது இதுவே: “ஏதோம் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்; ஏனெனில், அவன் உறவுமுறையின் கடமைகளை மீறி வாளேந்தித் தன் சகோதரனையே துரத்தினான்; தன் ஆத்திரத்தை அடக்கி வைக்காமல் என்றென்றும் கோபத்தைக் காட்டி வந்தான். [* எசா 34:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
ஆமோஸ் 1 : 12 (ECTA)
ஆதலால் தேமான்மேல் நெருப்பைக் கொட்டுவேன்; அது பொட்சராவின் கோட்டைகளை விழுங்கிவிடும். [* எசா 34:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 25:12-14; 35:1-15; ஒப 1-14; மலா 1:2- 5 ]
ஆமோஸ் 1 : 13 (ECTA)
அம்மோனியர் நாடு ஆண்டவர் கூறுவது இதுவே: “அம்மோன் மக்கள் எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை மாற்றவே மாட்டேன்; ஏனெனில், அவர்கள் தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்துவதற்காகக் கிலயாதின் கர்ப்பவதிகள் வயிற்றைப் பீறிக் கிழித்தார்கள். [* எரே 49:1-6; எசே 21:28-32; 25:1-7; செப் 2:8- 11 ]
ஆமோஸ் 1 : 14 (ECTA)
ஆதலால், இராபாவின் கோட்டை மதில்கள்மேல் நெருப்பைக் கொட்டுவேன். அது அச்சுவர்களை விழுங்கி விடும்; அப்பொழுது, போர்க்காலத்தின் பேரிரைச்சலும், சூறாவளி நாளின் கடும் புயலும் இருக்கும். [* எரே 49:1-6; எசே 21:28-32; 25:1-7; செப் 2:8- 11 ]
ஆமோஸ் 1 : 15 (ECTA)
அவர்களுடைய அரசன் அடிமையாய்க் கொண்டு போகப்படுவான். அவனோடு அதிகாரிகளும் கொண்டு போகப்படுவார்கள்” என்கிறார் ஆண்டவர். [* எரே 49:1-6; எசே 21:28-32; 25:1-7; செப் 2:8- 11 ]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15