2 சாமுவேல் 23 : 1 (ECTA)
மேன்மை மிக்கவரும் யாக்கோபின் கடவுளிடம் திருப்பொழிவு பெற்றவரும் இஸ்ரயேலின் இனிமைமிகு பாடகரும் ஈசாயின் மைந்தருமான தாவீதின் இறுதிமொழிகளாவன:
2 சாமுவேல் 23 : 2 (ECTA)
ஆண்டவரின் ஆவி என் மூலம் பேசினார்; அவரது வார்த்தை என் நாவில் ஒலித்தது.
2 சாமுவேல் 23 : 3 (ECTA)
இஸ்ரயேலின் கடவுள் என்னோடு பேசினார்; "இஸ்ரயேலின் பாறை" எனக்கு கூறினார்.'மானினரை நீதியோடு ஆள்பவன் இறைஅச்சத்துடன் ஆள்பவன்.
2 சாமுவேல் 23 : 4 (ECTA)
விடியற்கால ஒளியென திகழ்கின்றான்; முகிலற்ற காலை கதிரவனென ஒளிர்கின்றான்; மண்ணின்று புல் முளைக்கச் செய்யும் மழையென விளங்குகின்றான்.
2 சாமுவேல் 23 : 5 (ECTA)
என் குடும்பம் இறைவனோடு இணைந்துள்ளது அன்றோ? அனைத்திலும், திட்டமிடப்பட்டு உறுதியாக்கப்பட்டு, என்றும் நிலைக்கும் உடன்படிக்கையை அவர் என்னோடு செய்து கொண்டார். என் அனைத்து மீட்பும் விருப்பும் அவரால் உயர்வு பெறாதோ?
2 சாமுவேல் 23 : 6 (ECTA)
(6-7) இழிமக்கள் அனைவரும் இரும்புத் தடியும் ஈட்டிக்கோலும் கொண்டு, நெருப்பால் முற்றிலும் சுட்டெரிக்கப்படுவனவும் கையால் தொடத்தகாதவனவும் காட்டு முட்களைப் போன்றவர்.
2 சாமுவேல் 23 : 7 (ECTA)
2 சாமுவேல் 23 : 8 (ECTA)
(7) தாவீதோடிருந்த வீரர்களின் பெயர்கள்: தக்கமேனியன் யோசப்பாசெபத்து மூவருள் முதல்வனாக இருந்த அவன், "எஸ்னீயன் அதினோ" என்று அழைக்கப்பட்டான். ஏனெனில் அவன் ஒரே சமயத்தில் எண்ணூறு பேரைத் தாக்கிக் கொன்றான்.
2 சாமுவேல் 23 : 9 (ECTA)
(8) அவனுக்கு அடுத்தவன் அகோகிக்குப் பிறந்த தோதோவின் மகன் எலியாசர், போரிடுமாறு ஒன்றுதிரண்டு வந்த பெலிஸ்தியரை எதிர்த்துச் சென்ற போது தாவீதுடன் இருந்த வலிமைமிகு வீரர் மூவருள் ஒருவன் அவன். முதலில் இஸ்ரயேலர் பின் வாங்கினர்.
2 சாமுவேல் 23 : 10 (ECTA)
(9) அப்பொழுது அவன் தனித்து நின்று, கை சோர்வுற்று வாளோடு ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு பெலிஸ்தியரைத் தாக்கினான். ஆண்டவர் அன்று பெரும் வெற்றியைத் தந்தார். அவன் வீரர்கள் அவனை கொள்ளையடிப்பதற்காக அவனிடம் திரும்பினர்.
2 சாமுவேல் 23 : 11 (ECTA)
(10) அடுத்தவன் ஆராரியன் ஆகேயின் மகன் சம்பா. பயறு நிறைந்த வயல் ஒன்றில் பெலிஸ்தியர் கூட்டமாகத் திரள, மக்கள் புறமுதுகுகாட்டி அவர்கள்முன் ஓடினார்கள்.
2 சாமுவேல் 23 : 12 (ECTA)
(11) அப்போது அவன் வயல் நடுவே நின்று அதைப் பாதுகாத்தான்; பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினான். ஆண்டவர் மாபெரும் வெற்றியை தந்தார்.
2 சாமுவேல் 23 : 13 (ECTA)
(12) மூப்பது படைத்தலைவருள் மூவர் அறுவடைக் காலத்தில் தாவீது தங்கியிருந்த அதுல்லாம் குகைக்கு வந்தனர். அரக்கர்களின் கணவாயில் பெலிஸ்தியர் கூட்டம் பாளையம் இறங்கி இருந்தது.
2 சாமுவேல் 23 : 14 (ECTA)
(13) அப்போது தாவீது பாதுகாப்பான கோட்டைக்குள் இருந்தார். பெலிஸ்தியர் பெத்லகேமில் இருந்தார்.
2 சாமுவேல் 23 : 15 (ECTA)
(14) தாவீது, ஏக்கத்துடன், "பெத்லகேம் வாயிலருகே உள்ள கிணற்றிலிருந்து எனக்குக் குடிக்க தருபவன் யார்? என்று கேட்டார்.
2 சாமுவேல் 23 : 16 (ECTA)
(15) அம்மூன்று வலிமைமிகு வீரரும் பெலிஸ்தியரின் அணிகளுக்குள் புகுந்து சென்று பெத்லகேம் வாயிலருகே உள்ள கிணற்றிலிருந்து நீர் மொண்டு, அதைத் தாவீதிடம் எடுத்து வந்தனர். தாவீதோ அதை குடிக்க விரும்பாமல் ஆண்டவருக்காக வெளியே ஊற்றினார்.
2 சாமுவேல் 23 : 17 (ECTA)
(16) "தங்கள் உயிரைப் பணயம் வைத்துச் சென்றவர்களின் இரத்தமன்றோ இது! ஆண்டவரே, இதை நான் எவ்வாறு குடிக்க முடியும்? என்று சொல்லி, அவர் அதை குடிக்க விரும்பவில்லை. இம் மூன்று வீரரும் ஆற்றிய செயல்கள் இவையே.
2 சாமுவேல் 23 : 18 (ECTA)
(17) யோவாபின் சகோதரன், செரூயாவின் மகன் அபிசாய் முப்பதின்மருக்குத் தலைவனாக இருந்தான். அவன் முந்நூறுபேருக்கு எதிராக தன் ஈட்டியை சுழற்றி அவர்களைக் கொன்றான். மூவருக்கு இணையாக அவன் பெயர் பெற்றவன்.
2 சாமுவேல் 23 : 19 (ECTA)
(18) அம்முப்பதின்மரில் அவனல்லவோ அதிக புகழ்பெற்றிருந்தான்? அவர்களின் தலைவனும் அவனே. ஆயினும் முன்னைய மூவருக்கும் அவன் சமமாகஇல்லை.
2 சாமுவேல் 23 : 20 (ECTA)
(19) கப்சவேலைச் சார்ந்த யோயாதாவின் மகன் பெனாயா பல வீரச் செயல்கள் புரிந்தவன். சிங்கம் போன்ற இரு மோவாபிய வீரரைக் கொன்றவன். பனி பெய்து கொண்டிருந்த ஒருநாள் குகைக்குள் அவன் சென்று ஒரு சிங்கத்தைக் கொன்றான்.
2 சாமுவேல் 23 : 21 (ECTA)
(20) உருவில் பெரிய ஒரு எகிப்தியனை அவன் கொன்று போட்டான். ஈட்டியைக் கையில் கொண்டிருந்த அந்த எகிப்தியனிடம் இவன் ஒரு கோலோடு சென்று ஈட்டியை அவன் கையிலிருந்து பிடுங்கினான். பின் அவன் ஈட்டியைக் கொண்டே அவனைக் கொன்றான்.
2 சாமுவேல் 23 : 22 (ECTA)
(21) யோயாதாவின் மகன் பெனாயா இவற்றைச் செய்து, முதல் மூவருக்கு இணையாக புகழ் பெற்று திகழ்ந்தான்.
2 சாமுவேல் 23 : 23 (ECTA)
(22) முப்பது பேரில் அவனும் புகழ் பெற்றிருந்தான். ஆனால் முதல் மூவருக்கு அவன் சமமாக இல்லை. ஆயினும் அவனைத் தாவீது தன் மெய்க்காப்பாளனாக ஏற்படுத்தினார்.
2 சாமுவேல் 23 : 24 (ECTA)
(23) யோவாபின் சகோதரன் அசாவேல் முப்பது பேரில் ஒருவன். அவர்கள் யாரெனில், பெத்லகேமைச் சார்ந்த தோதோவின் மகன் எல்கானான்.
2 சாமுவேல் 23 : 25 (ECTA)
(24) அரோத்தியன், சம்மா, அரோதியன், எலிக்கா,
2 சாமுவேல் 23 : 26 (ECTA)
(25) பல்தியன் ஏலேசு, தெக்கோவைச்சார்ந்த இக்கேசின் மகன் ஈரா,
2 சாமுவேல் 23 : 27 (ECTA)
(26) அனத்தோத்தியன் அபியேசர், ஊசாத்தியன் மெபுன்னாய்,
2 சாமுவேல் 23 : 28 (ECTA)
(27) அகோகியன் சல்மோன், நெற்றோபாயன் மகராய்,
2 சாமுவேல் 23 : 29 (ECTA)
(28) நெற்றோபாயன் பானாவின் மகன் ஏலேபு, பென்யதியனின் கிபயாவைச் சார்ந்த இரிபாயின் மகன் இத்தாய்,
2 சாமுவேல் 23 : 30 (ECTA)
(29) பிரத்தோனியன் பெனாயா, காகசு நீரோடைகளின் இதாய்,
2 சாமுவேல் 23 : 31 (ECTA)
(30) அர்பாத்தியன் அபிஅல்போன், பர்குமியன் அஸ்மவேத்து,
2 சாமுவேல் 23 : 32 (ECTA)
(31) சால்போனியன் எலியகுபா, யாசேனின் மகன் யோனத்தான்,
2 சாமுவேல் 23 : 33 (ECTA)
(32) அராரியன் சம்மா, அராரியன் சாராரின் மகன் அகீயாம்,
2 சாமுவேல் 23 : 34 (ECTA)
(33) மாகாத்தியன் அகஸ்பாயியின் மகன் எலிபலேற்று, கிலோனியன் அகித்தோபலின் மகன் எலியாம்,
2 சாமுவேல் 23 : 35 (ECTA)
(34) கர்மேலியன் எட்சரோ, அர்பியன் பாராய்,
2 சாமுவேல் 23 : 36 (ECTA)
(35) சோபாவைச் சார்ந்த நாத்தானின் மகன் இகால், காத்தியன்பானி,
2 சாமுவேல் 23 : 37 (ECTA)
(36) அம்மோனியனின் செலேக்கு, செரூயாவின் மகனும் யோவாபின் படைக்கலன் தாக்குவோனுமான பெயரோத்தியன் நகராய்,
2 சாமுவேல் 23 : 38 (ECTA)
(37) இத்ரியன் ஈரா, இத்ரியன் காரேபு,
2 சாமுவேல் 23 : 39 (ECTA)
(38) இத்தியன் உரியா, இவர்கள் அனைவருமே அந்த முப்பது பேர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39

BG:

Opacity:

Color:


Size:


Font: