1 சாமுவேல் 16 : 1 (ECTA)
ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "இஸ்ரயேலின் அரசராகச் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறக்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டாடுவாய்;? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்" என்றார்.
1 சாமுவேல் 16 : 2 (ECTA)
அதற்குச் சாமுவேல் எப்படிப்போவேன்? சவுல் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுவிடுவானே? என்றார். மீண்டும் ஆண்டவர் நீ ஒரு கன்றுக்குட்டியை எடுத்துச் செல்! "ஆண்டவருக்கு பலியிட வந்துள்ளேன்" என்று சொல்;
1 சாமுவேல் 16 : 3 (ECTA)
ஈசாயைப் பலிக்கு அழைத்திடு. அப்போது நீ செய்யவேண்டியது என்னவென்று உனக்கு நான் தெவிவிப்பேன்; நான் உனக்குக் காட்டுகிறவனை நீ எனக்காகத் திருப்பொழிவு செய்" என்றார்.
1 சாமுவேல் 16 : 4 (ECTA)
ஆண்டவர் கட்டளையிட்டவாறு சாமுவேல் செய்த பின் பெத்லகேமுக்குச் சென்றார். அப்பொழுது அவ்வூரின் பெரியோர்கள் அஞ்சி நடுங்கி அவரை எதிர் கொண்டு வந்து, உங்கள் வருகையின் நோக்கம் சமாதானம் தானே" என்று கேட்டனர்.
1 சாமுவேல் 16 : 5 (ECTA)
அதற்கு அவர், "ஆம் சமாதானம்தான்; ஆண்டவருக்குப் பலி செலுத்த வந்துள்ளேன்; உங்களையே தூய்மையாக்கிக் கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள்" என்றார். மேலும் ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியிட வருமாறு அழைத்தார்.
1 சாமுவேல் 16 : 6 (ECTA)
அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் "என்று எண்ணினார்.
1 சாமுவேல் 16 : 7 (ECTA)
ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறங்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் "என்றார்.
1 சாமுவேல் 16 : 8 (ECTA)
அடுத்து, ஈசாய் அபினதாபை அழைத்து சாமுவேல் முன்பாக கடந்துபோகச் செய்தார். அவர் "இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை" கூறினார்.
1 சாமுவேல் 16 : 9 (ECTA)
பிறகு ஈசாய் சம்மாகுவைக் கடந்து போகச் செய்தார். "ஆண்டவர் இவனையும் தேர்ந்து கொள்ளவில்லை" என்று கூறினார்.
1 சாமுவேல் 16 : 10 (ECTA)
இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைசச் சாமுவேல் முன்பாகக் கடந்துபோகச்செய்தார். இவர்களையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவிலை" என்றார் சாமுவேல்.
1 சாமுவேல் 16 : 11 (ECTA)
தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து "உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?" என்று கேட்க, "இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான்" என்று பதிலளித்தார் ஈசாய். அதற்கு சாமுவேல் அவரிடம், "ஆளனுப்பி அவனை அழைத்து வா ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்" என்றார்.
1 சாமுவேல் 16 : 12 (ECTA)
ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், "தேர்ந்துகொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!" என்றார்.
1 சாமுவேல் 16 : 13 (ECTA)
உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
1 சாமுவேல் 16 : 14 (ECTA)
ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது.
1 சாமுவேல் 16 : 15 (ECTA)
அப்பபொழுது சவுலின் பணியாளர்கள் அவரிடம், ஐயா, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம்மைக் கலக்கமுறச் செய்கிறதே!
1 சாமுவேல் 16 : 16 (ECTA)
உம் முன் நிற்கும் உம் பணியாளர்களாகிய நாங்கள் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை அழைத்து வர எங்களுக்குக் கட்டளையிடும்! ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம் மீது இறங்கும் பொழுது அவன் யாழ் மீட்டுவான்! நீரும் நலமடைவீர் என்றனர்.
1 சாமுவேல் 16 : 17 (ECTA)
எனவே சவுல் தம் பணியாளரிடம் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை கண்டுபிடித்து என்னிடம் அழைத்து வாருங்கள்" என்றார்.
1 சாமுவேல் 16 : 18 (ECTA)
பணியாளர்களில் ஒருவன் இதோ பெத்லகேமைச் சார்ந்த ஈசாயின் மகனைப் பார்த்தேன்; அவன் யாழ் மீட்டுவதில் வல்லவன்; வீரமுள்ளவன்; போர்த்திறன் பெற்றவன்; பேச்சுத் திறன் உடையவன்; அழகானவன்; மேலும் ஆண்டவர் அவனோடு இருக்கிறார்" என்றான்.
1 சாமுவேல் 16 : 19 (ECTA)
அதைக் கேட்ட சவுல் ஈசாயிடம் தம் தூதர்களை அனுப்பி "ஆட்டு மந்தையை மேய்க்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பும் என்று தெரிவித்தார்.
1 சாமுவேல் 16 : 20 (ECTA)
அதைக் கேட்ட ஈசாய் கொஞ்சம் அப்பத்தையும் ஒரு தோற்பை நிறைய திராட்சை இரசத்தையும் ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கழுதை ஒன்றின் மேல் ஏற்றி தம் மகன் தாவீது மூலம் சவுலுக்கு அனுப்பினார்.
1 சாமுவேல் 16 : 21 (ECTA)
தாவீது சவுலிடம் வந்தவுடன் அரசவைப் பணியில் சேர்ந்து விட்டார். சவுல் அவர் மீது மிகவும் அன்பு கொண்டு அவரை தம் படைக்கலன்கொண்டு தாக்குவோனாக நியமித்தார்.
1 சாமுவேல் 16 : 22 (ECTA)
தாவீது என் அவையிலேயே இருக்கட்டும்; ஏனெனில் என் கண்களில் அவனுக்கு தயவு கிடைத்துள்ளது" எனறு சவுல் ஈசாயிடம் சொல்லியனுப்பினார்.
1 சாமுவேல் 16 : 23 (ECTA)
அதன் பின் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார். தீய ஆவியும் அவரை விட்டு அகலும்; சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

BG:

Opacity:

Color:


Size:


Font: