நெகேமியா 10 : 1 (TOV)
முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா,
நெகேமியா 10 : 2 (TOV)
செராயா, அசரியா, எரேமியா,
நெகேமியா 10 : 3 (TOV)
பஸ்கூர், அமரியா, மல்கிஜா,
நெகேமியா 10 : 4 (TOV)
அத்தூஸ், செபனியா, மல்லூக்,
நெகேமியா 10 : 5 (TOV)
ஆரீம், மெரெமோத், ஒபதியா,
நெகேமியா 10 : 6 (TOV)
தானியேல், கிநேதோன், பாருக்,
நெகேமியா 10 : 7 (TOV)
மெசுல்லாம், அபியா, மீயாமின்,
நெகேமியா 10 : 8 (TOV)
மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும்,
நெகேமியா 10 : 9 (TOV)
லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும்,
நெகேமியா 10 : 10 (TOV)
அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான்,
நெகேமியா 10 : 11 (TOV)
மீகா, ரேகோப், அசபியா,
நெகேமியா 10 : 12 (TOV)
சக்கூர், செரெபியா, செபனியா,
நெகேமியா 10 : 13 (TOV)
ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,
நெகேமியா 10 : 14 (TOV)
ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,
நெகேமியா 10 : 15 (TOV)
புன்னி, அஸ்காத், பெபாயி,
நெகேமியா 10 : 16 (TOV)
அதோனியா, பிக்வாய், ஆதின்,
நெகேமியா 10 : 17 (TOV)
ஆதேர், இஸ்கியா, அசூர்,
நெகேமியா 10 : 18 (TOV)
ஒதியா, ஆசூம், பெத்சாய்,
நெகேமியா 10 : 19 (TOV)
ஆரீப், ஆனதோத், நெபாய்,
நெகேமியா 10 : 20 (TOV)
மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,
நெகேமியா 10 : 21 (TOV)
மெஷெசாபெயேல், சாதோக், யதுவா,
நெகேமியா 10 : 22 (TOV)
பெலத்தியா, ஆனான், ஆனாயா,
நெகேமியா 10 : 23 (TOV)
ஓசெயா, அனனியா, அசூப்,
நெகேமியா 10 : 24 (TOV)
அல்லோகேஸ், பிலகா, சோபேக்,
நெகேமியா 10 : 25 (TOV)
ரேகூம், அஷபனா, மாசெயா,
நெகேமியா 10 : 26 (TOV)
அகியா, கானான், ஆனான்,
நெகேமியா 10 : 27 (TOV)
மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே.
நெகேமியா 10 : 28 (TOV)
ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும்,
நெகேமியா 10 : 29 (TOV)
தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,
நெகேமியா 10 : 30 (TOV)
நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக்கொள்ளாமலும் இருப்போம் என்றும்,
நெகேமியா 10 : 31 (TOV)
தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத்தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள்.
நெகேமியா 10 : 32 (TOV)
மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்திய போஜனபலிக்கும், ஓய்வு நாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும்,
நெகேமியா 10 : 33 (TOV)
எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
நெகேமியா 10 : 34 (TOV)
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும். லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.
நெகேமியா 10 : 35 (TOV)
நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,
நெகேமியா 10 : 36 (TOV)
நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும்,
நெகேமியா 10 : 37 (TOV)
நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும், எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்துக்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,
நெகேமியா 10 : 38 (TOV)
லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.
நெகேமியா 10 : 39 (TOV)
பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும், வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39

BG:

Opacity:

Color:


Size:


Font: