தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சகரியா
1. பின்னர் அவர் தலைமைக்குருவாகிய யோசுவாவைக் காட்டினார்; இவர் ஆண்டவரின் தூதர் முன்னிலையில் நின்றிருந்தார்; இவர் மேல் குற்றஞ்சாட்ட வந்திருந்த சாத்தான் வலப்பக்கத்தில் நின்று கொண்டிருந்தான்.
2. ஆண்டவர் சாத்தானைப் பார்த்து, "சாத்தானே, ஆண்டவர் உன்னைக் கண்டிப்பாராக! யெருசலேமைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் உன்னைக் கண்டிப்பாராக! நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளியல்லவா இவர்?" என்று சொன்னார்.
3. யோசுவாவோ அழுக்குப் படிந்த ஆடைகளையுடுத்தவராய்த் தூதர் முன் நின்று கொண்டிருந்தார்.
4. தூதரோ தம் முன்னால் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, "அழுக்குப் படிந்த ஆடைகளை இவரிடமிருந்து அகற்றுங்கள்" என்றார்; பின் அவரிடம், "இதோ, உன்னிடமிருந்து உன் அக்கிரமத்தை அகற்றிவிட்டேன்; சிறந்த ஆடையை உனக்கு உடுத்தினேன்" என்றார்.
5. மேலும், "தலைப்பாகையொன்றை அவர் தலையில் சூட்டுங்கள்" என்றார். அவ்வாறே அவர்கள் அவருக்குத் தலைப்பாகை சூட்டிச் சிறந்த ஆடைகளை உடுத்தினர்; ஆண்டவரின் தூதரோ அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தார்.
6. பின்பு, ஆண்டவரின் தூதர் யோசுவாவுக்குச் செய்த அறிக்கை அதுவே:
7. சேனைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நம்முடைய நெறிகளில் வழுவாமல் ஒழுகி நம் கற்பனைகளைக் கடைப்பிடித்தால், நம் இல்லத்தில் நீ ஆளுவாய்; நம் பிராகாரங்களுக்கும் பொறுப்பாய் இருப்பாய்; இங்கே நிற்கும் தூதர்களோடு சேர்ந்து கொள்ள உனக்கு உரிமை தருவோம்.
8. தலைமைக் குருவாகிய யோசுவாவே, நீயும், உன் முன்னால் அமர்ந்திருக்கும் உன் நண்பர்களும் கேளுங்கள்; அவர்கள் நல்லடையாளமான மனிதர்கள்: இதோ, நாம் நம் ஊழியனைக் கொண்டு வருவோம்: 'தளிர்' என்பது அவர் பெயர்.
9. இதோ, யோசுவாவின் முன்பு நாம் நாட்டுகின்ற கல் இதுவே; இந்த ஒரே கல்லில் ஏழு கண்கள் ஒளிர்கின்றன; நாமே அதில் எழுத்துகளைப் பொறிப்போம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; மேலும் ஒரே நாளில் இந்த நாட்டின் அக்கிரமத்தை அகற்றுவோம்.
10. அந்நாளில், ஒவ்வொருவனும் தன் அயலானைத்தன் திராட்சைக்கொடியின் கீழும், அத்திமரத்தின் கீழும் வந்து தங்கி இளைப்பாற அழைப்பான், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 14 Chapters, Current Chapter 3 of Total Chapters 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
சகரியா 3:1
1. பின்னர் அவர் தலைமைக்குருவாகிய யோசுவாவைக் காட்டினார்; இவர் ஆண்டவரின் தூதர் முன்னிலையில் நின்றிருந்தார்; இவர் மேல் குற்றஞ்சாட்ட வந்திருந்த சாத்தான் வலப்பக்கத்தில் நின்று கொண்டிருந்தான்.
2. ஆண்டவர் சாத்தானைப் பார்த்து, "சாத்தானே, ஆண்டவர் உன்னைக் கண்டிப்பாராக! யெருசலேமைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் உன்னைக் கண்டிப்பாராக! நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளியல்லவா இவர்?" என்று சொன்னார்.
3. யோசுவாவோ அழுக்குப் படிந்த ஆடைகளையுடுத்தவராய்த் தூதர் முன் நின்று கொண்டிருந்தார்.
4. தூதரோ தம் முன்னால் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, "அழுக்குப் படிந்த ஆடைகளை இவரிடமிருந்து அகற்றுங்கள்" என்றார்; பின் அவரிடம், "இதோ, உன்னிடமிருந்து உன் அக்கிரமத்தை அகற்றிவிட்டேன்; சிறந்த ஆடையை உனக்கு உடுத்தினேன்" என்றார்.
5. மேலும், "தலைப்பாகையொன்றை அவர் தலையில் சூட்டுங்கள்" என்றார். அவ்வாறே அவர்கள் அவருக்குத் தலைப்பாகை சூட்டிச் சிறந்த ஆடைகளை உடுத்தினர்; ஆண்டவரின் தூதரோ அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தார்.
6. பின்பு, ஆண்டவரின் தூதர் யோசுவாவுக்குச் செய்த அறிக்கை அதுவே:
7. சேனைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நம்முடைய நெறிகளில் வழுவாமல் ஒழுகி நம் கற்பனைகளைக் கடைப்பிடித்தால், நம் இல்லத்தில் நீ ஆளுவாய்; நம் பிராகாரங்களுக்கும் பொறுப்பாய் இருப்பாய்; இங்கே நிற்கும் தூதர்களோடு சேர்ந்து கொள்ள உனக்கு உரிமை தருவோம்.
8. தலைமைக் குருவாகிய யோசுவாவே, நீயும், உன் முன்னால் அமர்ந்திருக்கும் உன் நண்பர்களும் கேளுங்கள்; அவர்கள் நல்லடையாளமான மனிதர்கள்: இதோ, நாம் நம் ஊழியனைக் கொண்டு வருவோம்: 'தளிர்' என்பது அவர் பெயர்.
9. இதோ, யோசுவாவின் முன்பு நாம் நாட்டுகின்ற கல் இதுவே; இந்த ஒரே கல்லில் ஏழு கண்கள் ஒளிர்கின்றன; நாமே அதில் எழுத்துகளைப் பொறிப்போம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; மேலும் ஒரே நாளில் இந்த நாட்டின் அக்கிரமத்தை அகற்றுவோம்.
10. அந்நாளில், ஒவ்வொருவனும் தன் அயலானைத்தன் திராட்சைக்கொடியின் கீழும், அத்திமரத்தின் கீழும் வந்து தங்கி இளைப்பாற அழைப்பான், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."
Total 14 Chapters, Current Chapter 3 of Total Chapters 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

tamil Letters Keypad References