1. இறைவனை நோக்கி என் குரல் எழும்பிற்று; அவரை நோக்கிக் கூப்பிடுகிறேன். எனக்குச் செவிசாய்க்கும் வண்ணம் கடவுளைக் கூவி அழைக்கிறேன்; என் துன்ப நாளில் நான் ஆண்டவரை நாடுகிறேன்.
|
12. உம் செயல்கள் அனைத்தையும் பற்றித் தியானம் பண்ணுவேன். உம் அரிய செயல்களில் என் மனத்தைச் செலுத்துவேன்.
|
16. இறைவா, கடல் வெள்ளம் உம்மைப் பார்த்தது, உம்மைப் பார்த்து நடுக்கமுற்றது. ஆழ்கடல்களும் கலக்கமுற்றன.
|
18. உமது இடி முழக்கம் கடும் புயலில் ஒலித்தது: மின்னல்கள் பாருலகில் ஒளிவீசின; பூமியனைத்தும் நடுங்கி அதிர்ந்தது.
|
19. கடலின் வழியாக நீர் நடந்து சென்றீர்; வெள்ளத்தினிடையே நீர் வழி காட்டினீர். உமது அடிச்சுவடுகளோ காணப்படவில்லை.
|
20. மந்தையைப் போல் உம் மக்களை நடத்திச் சென்றீர், மோயீசன், ஆரோன் இவர்களைக் கொண்டு அழைத்துச் சென்றீர்.
|