தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுகிறேன்: எந்நாளும் நான் ஏமாற்றம் அடைய விடாதேயும்.
2. உமது நீதிக்கேற்ப எனக்கு விடுதலை அளித்துக் காத்தருளும். எனக்கு உம் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்.
3. என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்: ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கிறீர்.
4. தீயவனின் கையினின்று, என் இறைவா, என்னை விடுவித்தருளும்: துன்புறுத்தும் கொடியவனின் பிடியினின்று என்னை விடுவித்தருளும்.
5. ஏனெனில், என் இறைவா, நான் உம்மையே எதிர்நோக்கி வாழ்கிறேன்: ஆண்டவரே, என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை.
6. பிறப்பிலிருந்து நீரே எனக்கு ஆதாரம்; தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு: உம்மையே நான் என்றும் நம்பி வாழ்கிறேன்.
7. நீர் எனக்கு வலிமை மிக்க துணை, எனவே, பலருக்கு நான் புதுமைப் பிறவி போல் உள்ளேன்.
8. என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.
9. முதிர் வயதில் என்னைத் தள்ளி விடாதேயும்: என் பலம் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்.
10. ஏனெனில் என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே: என் உயிரை பறிக்கப் பார்ப்பவர்கள் ஒன்று கூடிச் சதி செய்கின்றனர்.
11. கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்; அவனைப் பின்தொடர்ந்து ஓடி அவனைப் பிடியுங்கள்: அவனை விடுவிக்க ஒருவருமில்லை" என்று பேசிக் கொள்கின்றனர்.
12. இறைவா, என்னை விட்டு வெகு தொலைவில் போகாதேயும்: என் இறைவா, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
13. என் உயிருக்கு உலைவைப்பவர்கள் ஏமாற்றமடைந்து ஒழிவார்களாக: எனக்குத் தீமை செய்யப் பார்ப்பவர்களை ஏமாற்றமும் வெட்கமும் ஆட்கொள்வதாக.
14. நானோ என்றும் நம்பிக்கையோடிருப்பேன்: ஒவ்வொரு நாளும் மேன் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன்.
15. உமது அருள் நன்மையை என் நா எடுத்துரைக்கும்; நாள் முழுவதும் உம் அருட்துணையை எடுத்துச் சொல்லும்: உமது அருட்செயல்களுக்கோ கணக்கே இல்லை.
16. இறைவனின் வல்லமையை எடுத்துரைப்பேன்: ஆண்டவரே, உமக்கு மட்டுமே உரிய நீதி நேர்மையைப் புகழ்ந்து உரைப்பேன்.
17. இறைவா, நீர் எனக்கு என் இளமையிலிருந்தே அறிவு புகட்டினீர்: இந்நாள் வரை நான் உமது வியத்தகு செயல்களை வெளிப்படுத்துகிறேன்.
18. முதிர் வயதிலும் நகரை திரை பருவத்திலும் இறைவா, நீர் என்னைக் கைவிடாதேயும்: உமது கைவன்மையை இத்தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வரையிலும், இனி வரும் தலைமுறைகளுக்கு உம் ஆற்றலை நான் கூறும் வரையிலும் என்னைக் கைவிடாதேயும்.
19. வானமட்டும் எட்டுகின்ற உமது நீதி நேர்மையை நான் எடுத்துரைக்கும் வரையிலும் இறைவா, நீரென்னைக் கைவிடாதேயும்: அந்த நீதியாலன்றோ அரியன பெரியன நீர் செய்துள்ளீர். இறைவனே, உமக்கு நிகர் யார்?
20. பல கொடும் துன்பங்களுக்கு நான் ஆளாகச் செய்தீர்: மீளவும் நான் உயிர் பெறச் செய்வீர்.
21. பாதாளத்தினின்று என்னை மீளவும் தூக்கிவிடுவீர்: எனக்குள்ள மேன்மையைப் பெருகச் செய்வீர்; மீளவும் என்னைத் தேற்றியருளும்.
22. இறைவா, நானும் வீணை கொண்டு உமது சொல்லுறுதியைக் கொண்டாடுவேன்: இஸ்ராயேலின் பரிசுத்தரே, யாழ் கொண்டு உமக்குப் புகழ் பாடுவேன்.
23. நான் உமக்குப் புகழ் பாடுகையில் என் நா அக்களிக்கும்: நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும்.
24. நாள் முழுவதும் உம் நீதி நேர்மையை என் நா எடுத்துரைக்கும், ஏனெனில், எனக்குக் கெடுதி செய்யப் பார்ப்பவர்கள் ஏமாற்றமும் வெட்கமும் அடைந்தார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 71 of Total Chapters 150
சங்கீதம் 71:45
1. ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுகிறேன்: எந்நாளும் நான் ஏமாற்றம் அடைய விடாதேயும்.
2. உமது நீதிக்கேற்ப எனக்கு விடுதலை அளித்துக் காத்தருளும். எனக்கு உம் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்.
3. என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்: ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கிறீர்.
4. தீயவனின் கையினின்று, என் இறைவா, என்னை விடுவித்தருளும்: துன்புறுத்தும் கொடியவனின் பிடியினின்று என்னை விடுவித்தருளும்.
5. ஏனெனில், என் இறைவா, நான் உம்மையே எதிர்நோக்கி வாழ்கிறேன்: ஆண்டவரே, என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை.
6. பிறப்பிலிருந்து நீரே எனக்கு ஆதாரம்; தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு: உம்மையே நான் என்றும் நம்பி வாழ்கிறேன்.
7. நீர் எனக்கு வலிமை மிக்க துணை, எனவே, பலருக்கு நான் புதுமைப் பிறவி போல் உள்ளேன்.
8. என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே: நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே.
9. முதிர் வயதில் என்னைத் தள்ளி விடாதேயும்: என் பலம் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்.
10. ஏனெனில் என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே: என் உயிரை பறிக்கப் பார்ப்பவர்கள் ஒன்று கூடிச் சதி செய்கின்றனர்.
11. கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்; அவனைப் பின்தொடர்ந்து ஓடி அவனைப் பிடியுங்கள்: அவனை விடுவிக்க ஒருவருமில்லை" என்று பேசிக் கொள்கின்றனர்.
12. இறைவா, என்னை விட்டு வெகு தொலைவில் போகாதேயும்: என் இறைவா, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
13. என் உயிருக்கு உலைவைப்பவர்கள் ஏமாற்றமடைந்து ஒழிவார்களாக: எனக்குத் தீமை செய்யப் பார்ப்பவர்களை ஏமாற்றமும் வெட்கமும் ஆட்கொள்வதாக.
14. நானோ என்றும் நம்பிக்கையோடிருப்பேன்: ஒவ்வொரு நாளும் மேன் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன்.
15. உமது அருள் நன்மையை என் நா எடுத்துரைக்கும்; நாள் முழுவதும் உம் அருட்துணையை எடுத்துச் சொல்லும்: உமது அருட்செயல்களுக்கோ கணக்கே இல்லை.
16. இறைவனின் வல்லமையை எடுத்துரைப்பேன்: ஆண்டவரே, உமக்கு மட்டுமே உரிய நீதி நேர்மையைப் புகழ்ந்து உரைப்பேன்.
17. இறைவா, நீர் எனக்கு என் இளமையிலிருந்தே அறிவு புகட்டினீர்: இந்நாள் வரை நான் உமது வியத்தகு செயல்களை வெளிப்படுத்துகிறேன்.
18. முதிர் வயதிலும் நகரை திரை பருவத்திலும் இறைவா, நீர் என்னைக் கைவிடாதேயும்: உமது கைவன்மையை இத்தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வரையிலும், இனி வரும் தலைமுறைகளுக்கு உம் ஆற்றலை நான் கூறும் வரையிலும் என்னைக் கைவிடாதேயும்.
19. வானமட்டும் எட்டுகின்ற உமது நீதி நேர்மையை நான் எடுத்துரைக்கும் வரையிலும் இறைவா, நீரென்னைக் கைவிடாதேயும்: அந்த நீதியாலன்றோ அரியன பெரியன நீர் செய்துள்ளீர். இறைவனே, உமக்கு நிகர் யார்?
20. பல கொடும் துன்பங்களுக்கு நான் ஆளாகச் செய்தீர்: மீளவும் நான் உயிர் பெறச் செய்வீர்.
21. பாதாளத்தினின்று என்னை மீளவும் தூக்கிவிடுவீர்: எனக்குள்ள மேன்மையைப் பெருகச் செய்வீர்; மீளவும் என்னைத் தேற்றியருளும்.
22. இறைவா, நானும் வீணை கொண்டு உமது சொல்லுறுதியைக் கொண்டாடுவேன்: இஸ்ராயேலின் பரிசுத்தரே, யாழ் கொண்டு உமக்குப் புகழ் பாடுவேன்.
23. நான் உமக்குப் புகழ் பாடுகையில் என் நா அக்களிக்கும்: நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும்.
24. நாள் முழுவதும் உம் நீதி நேர்மையை என் நா எடுத்துரைக்கும், ஏனெனில், எனக்குக் கெடுதி செய்யப் பார்ப்பவர்கள் ஏமாற்றமும் வெட்கமும் அடைந்தார்கள்.
Total 150 Chapters, Current Chapter 71 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References