2. உமது நீதிக்கேற்ப எனக்கு விடுதலை அளித்துக் காத்தருளும். எனக்கு உம் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும்.
|
3. என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்: ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கிறீர்.
|
4. தீயவனின் கையினின்று, என் இறைவா, என்னை விடுவித்தருளும்: துன்புறுத்தும் கொடியவனின் பிடியினின்று என்னை விடுவித்தருளும்.
|
5. ஏனெனில், என் இறைவா, நான் உம்மையே எதிர்நோக்கி வாழ்கிறேன்: ஆண்டவரே, என் இளமையிலிருந்து நீரே என் நம்பிக்கை.
|
6. பிறப்பிலிருந்து நீரே எனக்கு ஆதாரம்; தாயின் வயிற்றிலிருந்து நீரே என் பாதுகாப்பு: உம்மையே நான் என்றும் நம்பி வாழ்கிறேன்.
|
10. ஏனெனில் என் எதிரிகள் பேசுவதெல்லாம் என்னைப் பற்றியே: என் உயிரை பறிக்கப் பார்ப்பவர்கள் ஒன்று கூடிச் சதி செய்கின்றனர்.
|
11. கடவுள் அவனைக் கைவிட்டு விட்டார்; அவனைப் பின்தொடர்ந்து ஓடி அவனைப் பிடியுங்கள்: அவனை விடுவிக்க ஒருவருமில்லை" என்று பேசிக் கொள்கின்றனர்.
|
13. என் உயிருக்கு உலைவைப்பவர்கள் ஏமாற்றமடைந்து ஒழிவார்களாக: எனக்குத் தீமை செய்யப் பார்ப்பவர்களை ஏமாற்றமும் வெட்கமும் ஆட்கொள்வதாக.
|
14. நானோ என்றும் நம்பிக்கையோடிருப்பேன்: ஒவ்வொரு நாளும் மேன் மேலும் உம்மைப் புகழ்ந்து கொண்டிருப்பேன்.
|
15. உமது அருள் நன்மையை என் நா எடுத்துரைக்கும்; நாள் முழுவதும் உம் அருட்துணையை எடுத்துச் சொல்லும்: உமது அருட்செயல்களுக்கோ கணக்கே இல்லை.
|
16. இறைவனின் வல்லமையை எடுத்துரைப்பேன்: ஆண்டவரே, உமக்கு மட்டுமே உரிய நீதி நேர்மையைப் புகழ்ந்து உரைப்பேன்.
|
17. இறைவா, நீர் எனக்கு என் இளமையிலிருந்தே அறிவு புகட்டினீர்: இந்நாள் வரை நான் உமது வியத்தகு செயல்களை வெளிப்படுத்துகிறேன்.
|
18. முதிர் வயதிலும் நகரை திரை பருவத்திலும் இறைவா, நீர் என்னைக் கைவிடாதேயும்: உமது கைவன்மையை இத்தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வரையிலும், இனி வரும் தலைமுறைகளுக்கு உம் ஆற்றலை நான் கூறும் வரையிலும் என்னைக் கைவிடாதேயும்.
|
19. வானமட்டும் எட்டுகின்ற உமது நீதி நேர்மையை நான் எடுத்துரைக்கும் வரையிலும் இறைவா, நீரென்னைக் கைவிடாதேயும்: அந்த நீதியாலன்றோ அரியன பெரியன நீர் செய்துள்ளீர். இறைவனே, உமக்கு நிகர் யார்?
|
21. பாதாளத்தினின்று என்னை மீளவும் தூக்கிவிடுவீர்: எனக்குள்ள மேன்மையைப் பெருகச் செய்வீர்; மீளவும் என்னைத் தேற்றியருளும்.
|
22. இறைவா, நானும் வீணை கொண்டு உமது சொல்லுறுதியைக் கொண்டாடுவேன்: இஸ்ராயேலின் பரிசுத்தரே, யாழ் கொண்டு உமக்குப் புகழ் பாடுவேன்.
|
24. நாள் முழுவதும் உம் நீதி நேர்மையை என் நா எடுத்துரைக்கும், ஏனெனில், எனக்குக் கெடுதி செய்யப் பார்ப்பவர்கள் ஏமாற்றமும் வெட்கமும் அடைந்தார்கள்.
|