1. அல்லேலூயா! ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: மாண்பு மிக்க வான் தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
|
2. அவருடைய மாண்பு மிக்க செயல்களை நினைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: அவரது உன்னத மாட்சியை நினைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
|
3. எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: வீணையுடன் யாழ் இசைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
|
4. முரசொலித்து, நடனம் செய்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: நரம்பிசைத்து, குழல் ஊதி அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
|