1. அல்லேலூயா! ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது இரக்கம்.
|
5. துன்ப வேளையில் நான் ஆண்டவரைக் கூவியழைத்தேன்: ஆண்டவரும் என் மன்றாட்டைக் கேட்டு எனக்கு விடுதலை அளித்தார்.
|
7. எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்: சிதறுண்ட என் எதிரிகளை நான் ஏளனத்துடன் நோக்குவேன்.
|
12. தேனீக்களைப் போல் என்னை வளைத்துக் கொண்டனர்; நெருப்பில் அகப்பட்ட முட்களைப் போல் எரிந்தனர்: ஆண்டவர் பெயரால் அவர்களை நொறுக்கி விட்டேன்.
|
15. நீதிமான்களின் கூடாரங்களில் இதோ மீட்புக்குறித்து மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது: ஆண்டவரது வலக்கரம் வலிமையாய்ச் செயலாற்றியது.
|
19. நீதிமான்கள் நுழையும் வாயில்களை திறந்து விடுங்கள்: உள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
|
21. என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் உமக்கு நன்றி செலுத்துவேன்: எனக்கு நீர் மீட்பரானதால் உமக்கு நன்றி செலுத்துவேன்.
|
27. ஆண்டவராகிய இறைவனே, நம்மீது ஒளிவீசினார்: மரக் கிளைகளைக் கையிலேந்தி விழாப்பவனி நடத்துங்கள், பீடத்தின் மூலை வரைக்கும் செல்லுங்கள்.
|