தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
மத்தேயு
1. காலையானதும் தலைமைக்குருக்கள், மக்களின் மூப்பர் எல்லாரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.
2. அவரைக் கட்டி நடத்திச் சென்று ஆளுநர் பிலாத்திடம் கையளித்தனர்.
3. அப்போது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, மனம் வருந்தி, முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமைக்குருக்களிடமும் மூப்பரிடமும் கொண்டுவந்து,
4. "மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான். அவர்களோ, "எங்களுக்கென்ன ? அஃது உன் பாடு" என்றனர்.
5. அவனோ வெள்ளிக்காசுகளை ஆலயத்தில் எறிந்துவிட்டுப் போனான். போய் நான்றுகொண்டான்.
6. தலைமைக்குருக்கள் வெள்ளிக்காசுகளை எடுத்து, "காணிக்கைப் பெட்டியில் இவற்றைப் போடக்கூடாது; ஏனெனில், இவை இரத்தத்தின் விலை" என்றனர்.
7. ஆலோசனை செய்து, அன்னியரை அடக்கம்செய்ய அவற்றைக்கொண்டு 'குயவன் நிலத்தை' வாங்கினர்.
8. அதனால்தான் அந்நிலம் இன்றுவரை ' இரத்த நிலம் ' எனப்படுகிறது.
9. "இஸ்ராயேல் மக்களால் விலைமதிக்கப் பெற்றவருடைய விலையாகிய முப்பது வெள்ளிக்காசுகளை எடுத்து,
10. ஆண்டவர் எனக்குக் குறித்தபடியே குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்" என்று எரேமியாஸ் இறைவாக்கினர் கூறியது அப்பொழுது நிறைவேறியது.
11. இயேசு ஆளுநர்முன் நின்றார். ஆளுநர் அவரை: "நீ யூதரின் அரசனோ ?" என்று வினவ, இயேசு, "நீர்தாம் சொல்கிறீர்" என்றார்.
12. தலைமைக்குருக்களும் மூப்பரும் சாட்டிய குற்றங்களுக்கு அவர் மறுமொழி ஒன்றும் கூறவில்லை.
13. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி, "உனக்கு எதிராக இத்தனைச் சான்றுகள் கூறுகிறார்களே; உன் காதில் விழவில்லையா ?" என்று கேட்டார்.
14. அவரோ ஒன்றுக்கும் பதில் சொல்லவில்லை. அதைக் கண்டு ஆளுநர் மிகவும் வியப்புற்றான்.
15. திருவிழாதோறும் மக்கள் விரும்பும் ஒரு குற்றவாளியை ஆளுநர் விடுதலைசெய்வது வழக்கம்.
16. பரபாஸ் என்ற பேர்போன கைதி ஒருவன் இருந்தான்.
17. எனவே, மக்கள் ஒன்றுகூடினபோது, பிலாத்து, "நான் யாரை விடுதலைசெய்ய வேண்டும் என்கிறீர்கள் ? பரபாசையா, மெசியா என்னும் இயேசுவையா ?" என்று கேட்டார்.
18. ஏனெனில், அவர்கள் அவரைக் கையளித்தது பொறாமையால்தான் என்று அறிந்திருந்தார்.
19. அவர் நீதியிருக்கைமீது வீற்றிருந்தபொழுது அவர் மனைவி அவரிடம் ஆளனுப்பி, "அந்நீதிமானின் காரியத்தில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில், அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்" என்று கூறினாள்.
20. தலைமைக்குருக்களும் மூப்பரும் பரபாசை விடுவிக்கவும், இயேசுவைத் தொலைக்கவும் கேட்கும்படி மக்களை ஏவிவிட்டனர்.
21. ஆளுநர், "இவ்விருவரில் யாரை உங்களுக்கு நான் விடுதலையாக்க வேண்டும் என்கிறீர்கள் ?" என்று அவர்களைக் கேட்டார். அவர்களோ, "பரபாசை" என்றனர்.
22. பிலாத்து, "அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்யட்டும் ?" என்றார். எல்லாரும், "அவன் சிலுவையில் அறையப்படட்டும்" என்றனர்.
23. ஆளுநர், "இவன் செய்த தீங்கு என்ன ?" என்று அவர்களைக் கேட்டார். அவர்களோ, "சிலுவையில் அறையப்படட்டும்" என்று இன்னும் உரக்கக் கூச்சலிட்டனர்.
24. பிலாத்து தம்மால் ஒன்றும் ஆகவில்லை என்றும், அதற்கு மாறாகக் கலகமே ஏற்படுகிறதென்றும் கண்டு, தண்ணீர் எடுத்து மக்கள்முன்னிலையில், "இவனுடைய இரத்தத்தின் மட்டில் நான் குற்றம் அற்றவன்; அது உங்கள் பாடு" எனக் கூறிக் கைகழுவினார்.
25. அதற்கு மக்கள் அனைவரும், "இவன் இரத்தம் எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் இருக்கட்டும்" என்றனர்.
26. பின்னர், அவர்களுக்கு இசைந்து பரபாசை விடுதலைசெய்தார். இயேசுவையோ சாட்டையால் அடித்துச் சிலுவையில் அறையும்படி கையளித்தார்.
27. ஆளுநருடைய படைவீரர் இயேசுவை அரண்மனைக்கு நடத்திச் சென்று அங்கே இருந்த பட்டாளத்தினர் எல்லாரையும் அவர்முன் ஒன்றுசேர்த்தனர்.
28. அவருடைய ஆடைகளைக் களைந்து செந்நிறப் போர்வையை அவருக்குப் போர்த்தினர்;
29. முள்ளால் ஒரு முடியைப் பின்னி அவர் தலையில் வைத்தனர்; வலக்கையில் ஒரு பிரம்பைக் கொடுத்தனர். அவர்முன் முழந்தாளிட்டு, "யூதரின் அரசே, வாழி" என்று எள்ளி நகையாடினர்.
30. அவர்மேல் துப்பிப் பிரம்பை எடுத்து அவரைத் தலையிலடித்தனர்.
31. அவரை எள்ளி நகையாடியபின் அப்போர்வையைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து, அவரைச் சிலுவையில் அறையக் கூட்டிச் சென்றனர்.
32. வெளியே செல்லுகையில் சீரேனே ஊரானாகிய சீமோன் என்ற ஒருவனைக் கண்டனர். அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினர்.
33. மண்டை ஓடு எனப் பொருள்படும் கொல்கொத்தா என்னும் இடத்துக்கு வந்தனர்.
34. கசப்புக் கலந்த திராட்சை இரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தனர். அவரோ அதைச் சுவைத்தபின் குடிக்க விரும்பவில்லை.
35. அவரைச் சிலுவையில் அறைந்த பின்னர், சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்.
36. பின்னர், உட்கார்ந்து காவல்காத்தனர்.
37. அவருடைய தலைக்கு மேல் அவரைப் பற்றிய குற்ற அறிக்கையை வைத்தனர். அதில், "இவன் யூதரின் அரசன் இயேசு" என்று எழுதியிருந்தது.
38. அவருக்கு வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் ஒருவனுமாகக் கள்வர் இருவரை அவருடன் சிலுவையில் அறைந்தார்கள்.
39. அவ்வழியே சென்றவர்கள் தலையை ஆட்டி,
40. "ஆலயத்தை இடித்து மூன்று நாட்களில் கட்டுவோனே, உன்னையே காப்பாற்றிக்கொள். நீ கடவுள்மகனாய் இருந்தால் சிலுவையிலிருந்து இறங்கி வா" என்று அவரைப் பழித்தனர்.
41. அவ்வாறே தலைமைக்குருக்கள் மறைநூல் அறிஞரோடும் மூப்பரோடும் சேர்ந்து அவரை எள்ளி நகையாடி,
42. பிறரைக் காப்பாற்றிய இவன் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. இவன் இஸ்ராயேலின் அரசனாம்! இப்பொழுது சிலுவையினின்று இறங்கட்டும், இவனை நம்புவோம்.
43. கடவுளை நம்பியிருந்தான்; அவருக்கு இவன்மேல் பிரியமிருந்தால் இப்பொழுது விடுவிக்கட்டும். 'நான் கடவுள்மகன்' என்றானே" எனக் கூறினர்.
44. அவ்வாறே அவருடன் அறையுண்ட கள்வரும் அவர் மேல் வசை கூறினர்.
45. நண்பகல் தொடங்கி மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
46. ஏறக்குறைய மூன்று மணிக்கு இயேசு, "ஏலி, ஏலி, லெமா சபக்தானி" - அதாவது "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?" - என்று உரக்கக் கூவினார்.
47. அங்கே நின்றவர்களுள் சிலர் அதைக் கேட்டு, "இவன் எலியாசைக் கூப்பிடுகிறான்" என்றனர்.
48. உடனே அவர்களுள் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்துக் காடியில் தோய்த்து, ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
49. மற்றவர்களோ, "பொறு, எலியாஸ் இவனைக் காப்பாற்ற வருவாரா, பார்ப்போம்" என்றனர்.
50. இயேசு மறுபடியும் உரக்கக் கத்தி ஆவி துறந்தார்.
51. இதோ! ஆலயத்தின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. நிலம் நடுங்கியது. பாறைகள் வெடித்தன.
52. கல்லறைகள் திறக்கவே, துஞ்சிய பரிசுத்தர்களின் உடல்கள் பல எழுந்தன.
53. அவர் உயிர்த்தெழுந்தபின் இவர்கள் கல்லறையை விட்டுத் திரு நகருக்கு வந்து பலருக்குத் தோன்றினார்கள்.
54. நூற்றுவர்தலைவனும் அவனுடன் இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தோரும் நிலநடுக்கத்தையும் நடந்தது அனைத்தையும் கண்டு மிகவும் அஞ்சி, "உண்மையில் இவர் கடவுளின் மகனாயிருந்தார்" என்றனர்.
55. கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்த பெண்கள் பலர் அங்கே இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
56. அவர்களுள் மதலென் மரியாளும், யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும், செபெதேயுவின் மக்களின் தாயும் இருந்தனர்.
57. மாலையானதும் அரிமத்தியா ஊராரான சூசை என்னும் செல்வர் ஒருவர் வந்தார். அவரும் இயேசுவின் சீடர்.
58. அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதை அவருக்கு அளித்துவிடக் கட்டளையிட்டார்.
59. சூசை உடலை எடுத்துத் தூயகோடித் துணியில் சுற்றி,
60. தமக்கெனப் பாறையில் குடைந்திருந்த ஒரு புதுக் கல்லறையில் வைத்தார்; ஒரு பெரிய கல்லைப் புரட்டி, கல்லறையின் வாயிலில் வைத்துவிட்டுப் போனார்.
61. அங்கே மதலேன் மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிரே அமர்ந்திருந்தனர்.
62. மறுநாள், அதாவது, ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக்குருக்களும் பரிசேயரும் பிலாத்திடம் கூடிவந்து,
63. "ஐயா, அந்த வஞ்சகன் உயிருடன் இருந்தபொழுது ' மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவேன் ' என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது.
64. ஒருவேளை அவனுடைய சீடர் வந்து அவன் உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டு, ' இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் ' என்று மக்களிடம் சொல்லக்கூடும். அப்பொழுது முந்தின வஞ்சனையைவிடப் பிந்தினது மோசமாயிருக்கும். இது நிகழாதபடி கல்லறையை மூன்றாம் நாள்வரை பத்திரப்படுத்தக் கட்டளையிடும்" என்றனர்.
65. பிலாத்தோ அவர்களை நோக்கி, "உங்களிடம் காவல்காரர் உண்டே, போய் உங்களுக்குத் தெரிந்தபடி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.
66. அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரையிட்டுக் காவலரை வைத்துக் கல்லறையைப் பத்திரப்படுத்தினர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 28 Chapters, Current Chapter 27 of Total Chapters 28
மத்தேயு 27
1. காலையானதும் தலைமைக்குருக்கள், மக்களின் மூப்பர் எல்லாரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.
2. அவரைக் கட்டி நடத்திச் சென்று ஆளுநர் பிலாத்திடம் கையளித்தனர்.
3. அப்போது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, மனம் வருந்தி, முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமைக்குருக்களிடமும் மூப்பரிடமும் கொண்டுவந்து,
4. "மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான். அவர்களோ, "எங்களுக்கென்ன ? அஃது உன் பாடு" என்றனர்.
5. அவனோ வெள்ளிக்காசுகளை ஆலயத்தில் எறிந்துவிட்டுப் போனான். போய் நான்றுகொண்டான்.
6. தலைமைக்குருக்கள் வெள்ளிக்காசுகளை எடுத்து, "காணிக்கைப் பெட்டியில் இவற்றைப் போடக்கூடாது; ஏனெனில், இவை இரத்தத்தின் விலை" என்றனர்.
7. ஆலோசனை செய்து, அன்னியரை அடக்கம்செய்ய அவற்றைக்கொண்டு 'குயவன் நிலத்தை' வாங்கினர்.
8. அதனால்தான் அந்நிலம் இன்றுவரை ' இரத்த நிலம் ' எனப்படுகிறது.
9. "இஸ்ராயேல் மக்களால் விலைமதிக்கப் பெற்றவருடைய விலையாகிய முப்பது வெள்ளிக்காசுகளை எடுத்து,
10. ஆண்டவர் எனக்குக் குறித்தபடியே குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்" என்று எரேமியாஸ் இறைவாக்கினர் கூறியது அப்பொழுது நிறைவேறியது.
11. இயேசு ஆளுநர்முன் நின்றார். ஆளுநர் அவரை: "நீ யூதரின் அரசனோ ?" என்று வினவ, இயேசு, "நீர்தாம் சொல்கிறீர்" என்றார்.
12. தலைமைக்குருக்களும் மூப்பரும் சாட்டிய குற்றங்களுக்கு அவர் மறுமொழி ஒன்றும் கூறவில்லை.
13. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி, "உனக்கு எதிராக இத்தனைச் சான்றுகள் கூறுகிறார்களே; உன் காதில் விழவில்லையா ?" என்று கேட்டார்.
14. அவரோ ஒன்றுக்கும் பதில் சொல்லவில்லை. அதைக் கண்டு ஆளுநர் மிகவும் வியப்புற்றான்.
15. திருவிழாதோறும் மக்கள் விரும்பும் ஒரு குற்றவாளியை ஆளுநர் விடுதலைசெய்வது வழக்கம்.
16. பரபாஸ் என்ற பேர்போன கைதி ஒருவன் இருந்தான்.
17. எனவே, மக்கள் ஒன்றுகூடினபோது, பிலாத்து, "நான் யாரை விடுதலைசெய்ய வேண்டும் என்கிறீர்கள் ? பரபாசையா, மெசியா என்னும் இயேசுவையா ?" என்று கேட்டார்.
18. ஏனெனில், அவர்கள் அவரைக் கையளித்தது பொறாமையால்தான் என்று அறிந்திருந்தார்.
19. அவர் நீதியிருக்கைமீது வீற்றிருந்தபொழுது அவர் மனைவி அவரிடம் ஆளனுப்பி, "அந்நீதிமானின் காரியத்தில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில், அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்" என்று கூறினாள்.
20. தலைமைக்குருக்களும் மூப்பரும் பரபாசை விடுவிக்கவும், இயேசுவைத் தொலைக்கவும் கேட்கும்படி மக்களை ஏவிவிட்டனர்.
21. ஆளுநர், "இவ்விருவரில் யாரை உங்களுக்கு நான் விடுதலையாக்க வேண்டும் என்கிறீர்கள் ?" என்று அவர்களைக் கேட்டார். அவர்களோ, "பரபாசை" என்றனர்.
22. பிலாத்து, "அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்யட்டும் ?" என்றார். எல்லாரும், "அவன் சிலுவையில் அறையப்படட்டும்" என்றனர்.
23. ஆளுநர், "இவன் செய்த தீங்கு என்ன ?" என்று அவர்களைக் கேட்டார். அவர்களோ, "சிலுவையில் அறையப்படட்டும்" என்று இன்னும் உரக்கக் கூச்சலிட்டனர்.
24. பிலாத்து தம்மால் ஒன்றும் ஆகவில்லை என்றும், அதற்கு மாறாகக் கலகமே ஏற்படுகிறதென்றும் கண்டு, தண்ணீர் எடுத்து மக்கள்முன்னிலையில், "இவனுடைய இரத்தத்தின் மட்டில் நான் குற்றம் அற்றவன்; அது உங்கள் பாடு" எனக் கூறிக் கைகழுவினார்.
25. அதற்கு மக்கள் அனைவரும், "இவன் இரத்தம் எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் இருக்கட்டும்" என்றனர்.
26. பின்னர், அவர்களுக்கு இசைந்து பரபாசை விடுதலைசெய்தார். இயேசுவையோ சாட்டையால் அடித்துச் சிலுவையில் அறையும்படி கையளித்தார்.
27. ஆளுநருடைய படைவீரர் இயேசுவை அரண்மனைக்கு நடத்திச் சென்று அங்கே இருந்த பட்டாளத்தினர் எல்லாரையும் அவர்முன் ஒன்றுசேர்த்தனர்.
28. அவருடைய ஆடைகளைக் களைந்து செந்நிறப் போர்வையை அவருக்குப் போர்த்தினர்;
29. முள்ளால் ஒரு முடியைப் பின்னி அவர் தலையில் வைத்தனர்; வலக்கையில் ஒரு பிரம்பைக் கொடுத்தனர். அவர்முன் முழந்தாளிட்டு, "யூதரின் அரசே, வாழி" என்று எள்ளி நகையாடினர்.
30. அவர்மேல் துப்பிப் பிரம்பை எடுத்து அவரைத் தலையிலடித்தனர்.
31. அவரை எள்ளி நகையாடியபின் அப்போர்வையைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து, அவரைச் சிலுவையில் அறையக் கூட்டிச் சென்றனர்.
32. வெளியே செல்லுகையில் சீரேனே ஊரானாகிய சீமோன் என்ற ஒருவனைக் கண்டனர். அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினர்.
33. மண்டை ஓடு எனப் பொருள்படும் கொல்கொத்தா என்னும் இடத்துக்கு வந்தனர்.
34. கசப்புக் கலந்த திராட்சை இரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தனர். அவரோ அதைச் சுவைத்தபின் குடிக்க விரும்பவில்லை.
35. அவரைச் சிலுவையில் அறைந்த பின்னர், சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்.
36. பின்னர், உட்கார்ந்து காவல்காத்தனர்.
37. அவருடைய தலைக்கு மேல் அவரைப் பற்றிய குற்ற அறிக்கையை வைத்தனர். அதில், "இவன் யூதரின் அரசன் இயேசு" என்று எழுதியிருந்தது.
38. அவருக்கு வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் ஒருவனுமாகக் கள்வர் இருவரை அவருடன் சிலுவையில் அறைந்தார்கள்.
39. அவ்வழியே சென்றவர்கள் தலையை ஆட்டி,
40. "ஆலயத்தை இடித்து மூன்று நாட்களில் கட்டுவோனே, உன்னையே காப்பாற்றிக்கொள். நீ கடவுள்மகனாய் இருந்தால் சிலுவையிலிருந்து இறங்கி வா" என்று அவரைப் பழித்தனர்.
41. அவ்வாறே தலைமைக்குருக்கள் மறைநூல் அறிஞரோடும் மூப்பரோடும் சேர்ந்து அவரை எள்ளி நகையாடி,
42. பிறரைக் காப்பாற்றிய இவன் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. இவன் இஸ்ராயேலின் அரசனாம்! இப்பொழுது சிலுவையினின்று இறங்கட்டும், இவனை நம்புவோம்.
43. கடவுளை நம்பியிருந்தான்; அவருக்கு இவன்மேல் பிரியமிருந்தால் இப்பொழுது விடுவிக்கட்டும். 'நான் கடவுள்மகன்' என்றானே" எனக் கூறினர்.
44. அவ்வாறே அவருடன் அறையுண்ட கள்வரும் அவர் மேல் வசை கூறினர்.
45. நண்பகல் தொடங்கி மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
46. ஏறக்குறைய மூன்று மணிக்கு இயேசு, "ஏலி, ஏலி, லெமா சபக்தானி" - அதாவது "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?" - என்று உரக்கக் கூவினார்.
47. அங்கே நின்றவர்களுள் சிலர் அதைக் கேட்டு, "இவன் எலியாசைக் கூப்பிடுகிறான்" என்றனர்.
48. உடனே அவர்களுள் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்துக் காடியில் தோய்த்து, ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
49. மற்றவர்களோ, "பொறு, எலியாஸ் இவனைக் காப்பாற்ற வருவாரா, பார்ப்போம்" என்றனர்.
50. இயேசு மறுபடியும் உரக்கக் கத்தி ஆவி துறந்தார்.
51. இதோ! ஆலயத்தின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. நிலம் நடுங்கியது. பாறைகள் வெடித்தன.
52. கல்லறைகள் திறக்கவே, துஞ்சிய பரிசுத்தர்களின் உடல்கள் பல எழுந்தன.
53. அவர் உயிர்த்தெழுந்தபின் இவர்கள் கல்லறையை விட்டுத் திரு நகருக்கு வந்து பலருக்குத் தோன்றினார்கள்.
54. நூற்றுவர்தலைவனும் அவனுடன் இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தோரும் நிலநடுக்கத்தையும் நடந்தது அனைத்தையும் கண்டு மிகவும் அஞ்சி, "உண்மையில் இவர் கடவுளின் மகனாயிருந்தார்" என்றனர்.
55. கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்த பெண்கள் பலர் அங்கே இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
56. அவர்களுள் மதலென் மரியாளும், யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும், செபெதேயுவின் மக்களின் தாயும் இருந்தனர்.
57. மாலையானதும் அரிமத்தியா ஊராரான சூசை என்னும் செல்வர் ஒருவர் வந்தார். அவரும் இயேசுவின் சீடர்.
58. அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதை அவருக்கு அளித்துவிடக் கட்டளையிட்டார்.
59. சூசை உடலை எடுத்துத் தூயகோடித் துணியில் சுற்றி,
60. தமக்கெனப் பாறையில் குடைந்திருந்த ஒரு புதுக் கல்லறையில் வைத்தார்; ஒரு பெரிய கல்லைப் புரட்டி, கல்லறையின் வாயிலில் வைத்துவிட்டுப் போனார்.
61. அங்கே மதலேன் மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிரே அமர்ந்திருந்தனர்.
62. மறுநாள், அதாவது, ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக்குருக்களும் பரிசேயரும் பிலாத்திடம் கூடிவந்து,
63. "ஐயா, அந்த வஞ்சகன் உயிருடன் இருந்தபொழுது ' மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவேன் ' என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது.
64. ஒருவேளை அவனுடைய சீடர் வந்து அவன் உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டு, ' இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் ' என்று மக்களிடம் சொல்லக்கூடும். அப்பொழுது முந்தின வஞ்சனையைவிடப் பிந்தினது மோசமாயிருக்கும். இது நிகழாதபடி கல்லறையை மூன்றாம் நாள்வரை பத்திரப்படுத்தக் கட்டளையிடும்" என்றனர்.
65. பிலாத்தோ அவர்களை நோக்கி, "உங்களிடம் காவல்காரர் உண்டே, போய் உங்களுக்குத் தெரிந்தபடி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.
66. அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரையிட்டுக் காவலரை வைத்துக் கல்லறையைப் பத்திரப்படுத்தினர்.
Total 28 Chapters, Current Chapter 27 of Total Chapters 28
×

Alert

×

tamil Letters Keypad References