தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
லேவியராகமம்
1. மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. நீ ஆரோனையும் அவன் புதல்வர்களையும் வரவழைத்து, அவர்களுடைய ஆடைகளையும், அபிசேகத் தைலத்தையும், பாவ நிவாரணப் பலிக்கு ஓர் இளங்காளையையும் இரண்டு ஆட்டுக் கிடாய்களையும், ஒரு கூடையில் புளியாத அப்பங்களையும் கொண்டு வந்து,
3. சபை முழுவதையும் கூடார வாயிலிலே ஒன்று கூட்டுவாய் என்றார்.
4. மோயீசன் ஆண்டவர் கட்டளையின்படியே செய்தார். கூடார வாயிலின் முன் சபையார் எல்லாரும் கூடியிருக்கையில்,
5. அவர் கூட்டத்தை நோக்கி, ஆண்டவர் கட்டளையிட்டது இன்னதென்று சொன்னார்.
6. பின்னர் ஆரோனையும் அவர் புதல்வர்களையும் மக்களுக்குக் காண்பித்து, அவர்களைக் குளிப்பாட்டிய பின்பு,
7. தலைமைக் குருவுக்கு மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்ட உள்ளங்கியை அணிவித்து, இடைக்கச்சை கட்டி நீல மேலங்கியை அவர்மேல் இட்டு, அதன்மேல் ஏப்போத்தைத் தரித்து,
8. அதனோடு மார்புப்பதக்கத்தைச் சரிப்படுத்திக் கச்சையால் கட்டின பின்பு, நெஞ்சாபரணத்தையும் அணிவித்தார். இதிலே கோட்பாடு, உண்மை எனும் இரு வார்த்தைகள் எழுதப் பட்டிருந்தன.
9. அன்றியும், அவன் தலையின் மேல் முடியை அணிவித்த பின், ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டிருந்தபடி, அபிசேகத் தைலத்தினால் அருச்சனை செய்யப்பட்ட பொன் தகட்டையும் அவன் நெற்றிக்கு நேரே கட்டினார்.
10. பிறகு ( மோயீசன் ) அபிசேகத் தைலத்தை எடுத்து, உறைவிடத்திலும் அதிலுள்ள எல்லாத் தட்டுமுட்டுக்களிலும் பூசினார்.
11. ஏழுமுறை தெளித்துப் பலிபீடத்தை அருச்சனை செய்த பின், அதையும், அதைச் சார்ந்த எல்லாப் பாத்திரங்களையும் தொட்டியையும், அதன் பாதத்தையும் அபிசேகத் தைலம் ஊற்றித் தடவி அருச்சித்தார்.
12. அதில் சிறிது ஆரோனுடைய தலை மீது வார்த்துப் பூசி அவரை அபிசேகம் செய்தார்.
13. மேலும், ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, அவர் புதல்வர்களையும் வரவழைத்து அவர்களுக்கு மெல்லிய சணல் நூலால் செய்த அங்கிகளை அணிவித்து, கச்சைகளைக் கட்டி முடிகளையும் அணிவித்தார்.
14. அதன்பின் பாவப் பரிகாரத்துக்கான இளங்காளையை ஒப்புக்கொடுத்தார். ஆரோனும் அவர் புதல்வர்களும் அதன் தலை மீது தங்கள் கைகளை வைத்த பின்,
15. மோயீசன் அதை வெட்டி இரத்தத்தை எடுத்து, அதில் தோய்த்த விரலால் பீடக் கொம்புகளைச் சுற்றிலும் தடவிப் பரிகாரம் செய்து அருச்சித்து, மீதியான இரத்தத்தை அதன் அடியில் ஊற்றினார்.
16. பின் குடல்களின் மேலிருந்த கொழுப்பையும், கல்லீரலின் சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றிலுள்ள கொழுப்புக்களையும் பீடத்தின் மேல் எரித்தார்.
17. இளங்காளையைத் தோலோடும் இறைச்சியோடும் சாணியோடும், ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, பாளையத்திற்கு வெளியே சுட்டெரித்தார்.
18. மேலும் ஒர் ஆட்டுக்கிடாயையும் தகனப்பலியாகச் செலுத்தினார். அதன் தலையின்மேல் ஆரோனும் அவர் புதல்வர்களும் தங்கள் கைகளை வைத்தபின் அவர் அதை வெட்டி,
19. அதன் இரத்தத்தைப் பலிப்பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார்.
20. பிறகு அந்த ஆட்டுக் கிடாயையும் துண்டு துண்டாய் வெட்டி, அதன் தலையையும் உறுப்புக்களையும் கொழுப்பையும் நெருப்பில் சுட்டெரித்தார்.
21. அதன்பின் குடல்களையும் கால்களையும் தண்ணீரால் கழுவியெடுத்து, ஆட்டுக்கிடாய் முழுவதையும் மோயீசன் பீடத்தின்மேல் சுட்டெரித்தார். ஏனென்றால், அது ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள தகனப்பலியாம். இவையெல்லாம் ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டிருந்தபடி மோயீசன் செய்து முடித்தார்.
22. பின்னர் குருக்களின் அபிசேகத்திற்காக மற்றொரு ஆட்டுக் கிடாயையும் ஒப்புக்கொடுத்தார். ஆரோனும் அவர் புதல்வர்களும் அதன் தலை மேல் தங்கள் கைகளை வைத்தனர்.
23. மோயீசன் அதை வெட்டி, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆரோனின் வலக்காதின் மடலிலும் வலக் கை கால்களின் பெருவிரலிலும் தடவினார்.
24. பிறகு ஆரோனின் புதல்வரையும் அழைத்து, அவர்களுடைய வலக்காதின் மடலிலும் வலக் கை கால்களின் பெருவிரலிலும் பலியிடப்பட்ட ஆட்டுக்கிடாயின் இரத்தத்தைப் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார்.
25. ஆனால் கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய கொழுப்பு முழுவதையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறு நீரகங்களையும், அவற்றின் கொழுப்பையும், வலது முன்னந் தொடையையும் பிரித்தெடுத்தார்.
26. அப்போது ஆண்டவர் திருமுன் இருந்த கூடையினின்று புளியாத ஓர் அப்பத்தையும், எண்ணெய் தெளிக்கப்பட்ட ஒரு பலகாரத்தையும், ஒரு பணியாரத்தையும் எடுத்து அவற்றைக் கொழுப்புக்களின் மேலும் வலது முன்னந் தொடையின் மேலும் வைத்து,
27. அவற்றையெல்லாம் ஒன்றாய் ஆரோனுடைய கையிலும் அவர் புதல்வர் கையிலும் வைத்தார். அவர்கள் அவைகளை ஆண்டவர் திருமுன் உயர்த்தின பின்,
28. மோயீசன் அவர்கள் கையிலிருந்து அவைகளை மீண்டும் வாங்கித் தகனப் பலிப்பீடத்தின் மேல் சுட்டெரித்தார். ஏனென்றால், அவை அபிசேகத்துக்கடுத்த காணிக்கையும் ஆண்டவருக்கு நறுமணமுள்ள நேர்ச்சைப் பலிகள்.
29. ஆட்டுக்கிடாயின் மார்க்கண்டத்தை எடுத்து ஆண்டவர் திருமுன் உயர்த்தின பின், ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி அதனை அபிசேகம் செய்யப்பட்ட கிடாயில் தனக்குரிய பங்காக எடுத்துக் கொண்டார்.
30. அன்றியும், அபிசேகத் தைலத்திலும் பலிப் பீடத்தின் மேலிருந்த இரத்தத்திலும் சிறிது எடுத்து, ஆரோன் மேலும், அவர் உடைகள் மீதும், அவர் புதல்வர்கள் மேலும், அவர்களுடைய உடைகள் மீதும் தெளித்தார்.
31. அவர்களை உடைகள் மூலமாய்ப் பரிசுத்தமாக்கின பின், அவர்களை நோக்கி: நீங்கள் அந்த இறைச்சியைக் கூடார வாயில் முன் சமைத்து, அங்கேயே அவற்றை உண்ணுங்கள்; கூடையில் வைக்கப்பட்டுள்ள அபிசேக அப்பங்களையும் உண்ணுங்கள். இப்படியே ஆண்டவர் என்னை நோக்கி: ஆரோனும் அவர் புதல்வர்களும் அவற்றை உண்ணட்டும்;
32. ஆனால், இறைச்சியிலும் அப்பங்களிலும் மீதியாய் இருப்பனவெல்லாம் நெருப்பிலே எரிக்கப்படும் என்று சொன்னார்.
33. அபிசேக நாட்கள் நிறைவு பெறுமட்டும், ஏழு நாட்களும் நீங்கள் கூடார வாயிலை விட்டு வெளியேறாதீர்கள். அபிசேகம் ஏழு நாளில் நிறைவு பெறும் (என்றார்).
34. பலியின் மறைச் சடங்கு நிறைவுறும் பொருட்டு அன்று அவ்விதமே செய்யப்பட்டது.
35. மீண்டும்: நீங்கள் சாகாத படிக்கு இரவு பகலாய் ஆசாரக் கூடாரத்தில் தங்கியிருந்து ஆண்டவருக்குக் காவல் காக்கக் கடவீர்கள். ஏனென்றால், எனக்கு இவ்வாறு கட்டளையிடப்பட்டது ( என்றார் ).
36. ஆண்டவர் மோயீசன் மூலமாய்க் கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவர் புதல்வர்களும் நிறைவேற்றினர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 27 Chapters, Current Chapter 8 of Total Chapters 27
லேவியராகமம் 8:34
1. மேலும், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
2. நீ ஆரோனையும் அவன் புதல்வர்களையும் வரவழைத்து, அவர்களுடைய ஆடைகளையும், அபிசேகத் தைலத்தையும், பாவ நிவாரணப் பலிக்கு ஓர் இளங்காளையையும் இரண்டு ஆட்டுக் கிடாய்களையும், ஒரு கூடையில் புளியாத அப்பங்களையும் கொண்டு வந்து,
3. சபை முழுவதையும் கூடார வாயிலிலே ஒன்று கூட்டுவாய் என்றார்.
4. மோயீசன் ஆண்டவர் கட்டளையின்படியே செய்தார். கூடார வாயிலின் முன் சபையார் எல்லாரும் கூடியிருக்கையில்,
5. அவர் கூட்டத்தை நோக்கி, ஆண்டவர் கட்டளையிட்டது இன்னதென்று சொன்னார்.
6. பின்னர் ஆரோனையும் அவர் புதல்வர்களையும் மக்களுக்குக் காண்பித்து, அவர்களைக் குளிப்பாட்டிய பின்பு,
7. தலைமைக் குருவுக்கு மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்ட உள்ளங்கியை அணிவித்து, இடைக்கச்சை கட்டி நீல மேலங்கியை அவர்மேல் இட்டு, அதன்மேல் ஏப்போத்தைத் தரித்து,
8. அதனோடு மார்புப்பதக்கத்தைச் சரிப்படுத்திக் கச்சையால் கட்டின பின்பு, நெஞ்சாபரணத்தையும் அணிவித்தார். இதிலே கோட்பாடு, உண்மை எனும் இரு வார்த்தைகள் எழுதப் பட்டிருந்தன.
9. அன்றியும், அவன் தலையின் மேல் முடியை அணிவித்த பின், ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டிருந்தபடி, அபிசேகத் தைலத்தினால் அருச்சனை செய்யப்பட்ட பொன் தகட்டையும் அவன் நெற்றிக்கு நேரே கட்டினார்.
10. பிறகு ( மோயீசன் ) அபிசேகத் தைலத்தை எடுத்து, உறைவிடத்திலும் அதிலுள்ள எல்லாத் தட்டுமுட்டுக்களிலும் பூசினார்.
11. ஏழுமுறை தெளித்துப் பலிபீடத்தை அருச்சனை செய்த பின், அதையும், அதைச் சார்ந்த எல்லாப் பாத்திரங்களையும் தொட்டியையும், அதன் பாதத்தையும் அபிசேகத் தைலம் ஊற்றித் தடவி அருச்சித்தார்.
12. அதில் சிறிது ஆரோனுடைய தலை மீது வார்த்துப் பூசி அவரை அபிசேகம் செய்தார்.
13. மேலும், ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, அவர் புதல்வர்களையும் வரவழைத்து அவர்களுக்கு மெல்லிய சணல் நூலால் செய்த அங்கிகளை அணிவித்து, கச்சைகளைக் கட்டி முடிகளையும் அணிவித்தார்.
14. அதன்பின் பாவப் பரிகாரத்துக்கான இளங்காளையை ஒப்புக்கொடுத்தார். ஆரோனும் அவர் புதல்வர்களும் அதன் தலை மீது தங்கள் கைகளை வைத்த பின்,
15. மோயீசன் அதை வெட்டி இரத்தத்தை எடுத்து, அதில் தோய்த்த விரலால் பீடக் கொம்புகளைச் சுற்றிலும் தடவிப் பரிகாரம் செய்து அருச்சித்து, மீதியான இரத்தத்தை அதன் அடியில் ஊற்றினார்.
16. பின் குடல்களின் மேலிருந்த கொழுப்பையும், கல்லீரலின் சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றிலுள்ள கொழுப்புக்களையும் பீடத்தின் மேல் எரித்தார்.
17. இளங்காளையைத் தோலோடும் இறைச்சியோடும் சாணியோடும், ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, பாளையத்திற்கு வெளியே சுட்டெரித்தார்.
18. மேலும் ஒர் ஆட்டுக்கிடாயையும் தகனப்பலியாகச் செலுத்தினார். அதன் தலையின்மேல் ஆரோனும் அவர் புதல்வர்களும் தங்கள் கைகளை வைத்தபின் அவர் அதை வெட்டி,
19. அதன் இரத்தத்தைப் பலிப்பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார்.
20. பிறகு அந்த ஆட்டுக் கிடாயையும் துண்டு துண்டாய் வெட்டி, அதன் தலையையும் உறுப்புக்களையும் கொழுப்பையும் நெருப்பில் சுட்டெரித்தார்.
21. அதன்பின் குடல்களையும் கால்களையும் தண்ணீரால் கழுவியெடுத்து, ஆட்டுக்கிடாய் முழுவதையும் மோயீசன் பீடத்தின்மேல் சுட்டெரித்தார். ஏனென்றால், அது ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள தகனப்பலியாம். இவையெல்லாம் ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டிருந்தபடி மோயீசன் செய்து முடித்தார்.
22. பின்னர் குருக்களின் அபிசேகத்திற்காக மற்றொரு ஆட்டுக் கிடாயையும் ஒப்புக்கொடுத்தார். ஆரோனும் அவர் புதல்வர்களும் அதன் தலை மேல் தங்கள் கைகளை வைத்தனர்.
23. மோயீசன் அதை வெட்டி, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆரோனின் வலக்காதின் மடலிலும் வலக் கை கால்களின் பெருவிரலிலும் தடவினார்.
24. பிறகு ஆரோனின் புதல்வரையும் அழைத்து, அவர்களுடைய வலக்காதின் மடலிலும் வலக் கை கால்களின் பெருவிரலிலும் பலியிடப்பட்ட ஆட்டுக்கிடாயின் இரத்தத்தைப் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார்.
25. ஆனால் கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய கொழுப்பு முழுவதையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறு நீரகங்களையும், அவற்றின் கொழுப்பையும், வலது முன்னந் தொடையையும் பிரித்தெடுத்தார்.
26. அப்போது ஆண்டவர் திருமுன் இருந்த கூடையினின்று புளியாத ஓர் அப்பத்தையும், எண்ணெய் தெளிக்கப்பட்ட ஒரு பலகாரத்தையும், ஒரு பணியாரத்தையும் எடுத்து அவற்றைக் கொழுப்புக்களின் மேலும் வலது முன்னந் தொடையின் மேலும் வைத்து,
27. அவற்றையெல்லாம் ஒன்றாய் ஆரோனுடைய கையிலும் அவர் புதல்வர் கையிலும் வைத்தார். அவர்கள் அவைகளை ஆண்டவர் திருமுன் உயர்த்தின பின்,
28. மோயீசன் அவர்கள் கையிலிருந்து அவைகளை மீண்டும் வாங்கித் தகனப் பலிப்பீடத்தின் மேல் சுட்டெரித்தார். ஏனென்றால், அவை அபிசேகத்துக்கடுத்த காணிக்கையும் ஆண்டவருக்கு நறுமணமுள்ள நேர்ச்சைப் பலிகள்.
29. ஆட்டுக்கிடாயின் மார்க்கண்டத்தை எடுத்து ஆண்டவர் திருமுன் உயர்த்தின பின், ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி அதனை அபிசேகம் செய்யப்பட்ட கிடாயில் தனக்குரிய பங்காக எடுத்துக் கொண்டார்.
30. அன்றியும், அபிசேகத் தைலத்திலும் பலிப் பீடத்தின் மேலிருந்த இரத்தத்திலும் சிறிது எடுத்து, ஆரோன் மேலும், அவர் உடைகள் மீதும், அவர் புதல்வர்கள் மேலும், அவர்களுடைய உடைகள் மீதும் தெளித்தார்.
31. அவர்களை உடைகள் மூலமாய்ப் பரிசுத்தமாக்கின பின், அவர்களை நோக்கி: நீங்கள் அந்த இறைச்சியைக் கூடார வாயில் முன் சமைத்து, அங்கேயே அவற்றை உண்ணுங்கள்; கூடையில் வைக்கப்பட்டுள்ள அபிசேக அப்பங்களையும் உண்ணுங்கள். இப்படியே ஆண்டவர் என்னை நோக்கி: ஆரோனும் அவர் புதல்வர்களும் அவற்றை உண்ணட்டும்;
32. ஆனால், இறைச்சியிலும் அப்பங்களிலும் மீதியாய் இருப்பனவெல்லாம் நெருப்பிலே எரிக்கப்படும் என்று சொன்னார்.
33. அபிசேக நாட்கள் நிறைவு பெறுமட்டும், ஏழு நாட்களும் நீங்கள் கூடார வாயிலை விட்டு வெளியேறாதீர்கள். அபிசேகம் ஏழு நாளில் நிறைவு பெறும் (என்றார்).
34. பலியின் மறைச் சடங்கு நிறைவுறும் பொருட்டு அன்று அவ்விதமே செய்யப்பட்டது.
35. மீண்டும்: நீங்கள் சாகாத படிக்கு இரவு பகலாய் ஆசாரக் கூடாரத்தில் தங்கியிருந்து ஆண்டவருக்குக் காவல் காக்கக் கடவீர்கள். ஏனென்றால், எனக்கு இவ்வாறு கட்டளையிடப்பட்டது ( என்றார் ).
36. ஆண்டவர் மோயீசன் மூலமாய்க் கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவர் புதல்வர்களும் நிறைவேற்றினர்.
Total 27 Chapters, Current Chapter 8 of Total Chapters 27
×

Alert

×

tamil Letters Keypad References