2. என் கிளைகளில் கனிகொடாத எக்கிளையையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் கிளையையோ மிகுந்த கனி தரும்படி கழித்துவிடுவார்.
|
4. நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என்னில் நிலைத்திருங்கள். கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது. அவ்வாறே, நீங்களும் என்னில் நிலைத்திருந்தாலன்றி, கனி தர முடியாது.
|
5. நான் திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவன் என்னுள்ளும் நான் அவனுள்ளும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனி தருவான். ஏனெனில், என்னை பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
|
6. ஒருவன் என்னுள் நிலைத்திராவிடில், கிளையைப்போல வெட்டி எறியப்பட்டு, உலர்ந்து போவான்; அக்கிளைகளை ஒன்று சேர்த்து, நெருப்பில் போட்டுச் சுட்டெரிப்பார்கள்.
|
7. நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால், விரும்பியதெல்லாம் கேளுங்கள், உங்களுக்கு அருளப்படும்.
|
10. நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.
|
11. என் மகிழ்ச்சி உங்களில் இருக்கும்படியும், உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெறும்படியும் நான் உங்களுக்கு இதெல்லாம் கூறினேன்.
|
12. நான் உங்களிடம் அன்புகூர்ந்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை.நி31339
|
15. உங்களை நான் இனி ஊழியர் என்று சொல்லேன்; ஏனெனில், தலைவன் செய்வது இன்னது என்று ஊழியனுக்குத் தெரியாது. ஆனால் உங்களை நண்பர்கள் என்றேன்; ஏனெனில், தந்தையிடமிருந்து நான் கேட்டதையெல்லாம் உங்களுக்கு அறிவித்தேன்.
|
16. நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை, நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்; நீங்கள் உலகில் சென்று பலன் தரும்படியாகவும், அந்தப் பலன் நிலைத்திருக்கும்படியாகவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே, நீங்கள் தந்தையை என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்.
|
18. "உலகம் உங்களை வெறுக்கிறதென்றால், உங்களை வெறுக்குமுன்னே அது என்னை வெறுத்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
|
19. நீங்கள் உலகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால், உலகம் தனக்குச் சொந்தமானதை நேசிக்கும்; நீங்களோ உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல; ஏனெனில், நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்தேன். ஆதலால் தான் உலகம் உங்களை வெறுக்கின்றது.
|
20. ஊழியன் தலைவனுக்கு மேற்பட்டவன் அல்லன் என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள்; உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கேட்டிருந்தால்தானே, உங்கள் வார்த்தையையும் கேட்பார்கள்.
|
22. நான் வந்து அவர்களுக்குப் போதியாமல் இருந்திருந்தால், அவர்களுக்குப் பாவம் இராது. இப்பொழுதோ தங்கள் பாவத்திற்குச் சாக்குச் சொல்ல வழியில்லை.
|
24. யாரும் செய்திராத செயல்களை நான் அவர்களிடையே செய்யாமல் இருந்திருந்தால், அவர்களுக்குப் பாவம் இராது. இப்பொழுதோ என்னையும் என் தந்தையையும் கண்டார்கள், கண்டும் வெறுத்தார்கள்.
|
26. நான் தந்தையிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார்; அவர் தந்தையிடமிருந்து வரும் உண்மையின் ஆவியானவர். அவர் வந்து என்னைப்பற்றிச் சாட்சியம் கூறுவார்.
|