4. அந்த நாள் இருண்டு போகக்கடவது! மேலிருந்து கடவுள் அதைக் கண்ணோக்காது விடுக! ஒளியும் அதன் மேல் வீசாதிருப்பதாக!
|
5. இருட்டும் காரிருளும் அந்நாளைக் கவ்வி கொள்வதாக! கார் மேகங்கள் அதன் மேல் கவிந்து கொள்க! இருள் சூழச் செய்யும் அனைத்தும் அதை அச்சுறுத்துக!
|
6. அந்த இரவு- பேயிருட்டு அதனைப் பீடிக்கட்டும்! அவ்விரவு ஆண்டுக் கணக்கின் நாட்களுடன் எண்ணப்படாதொழிக! மாதங்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படாதொழிக!
|
7. ஆம், அந்த இரவு துயர்நிறைந்த இரவாய் இருக்கட்டும்! மகிழ்ச்சிகுரிய குரல் அன்றிரவு கேட்கப்படாதிருக்கட்டும்!
|
8. லேவீயாத்தானை எழுப்பி விடும் திறன் வாய்ந்தவர்களும், நாளைச் சபிக்கிறவர்களும் அந்த இரவைச் சபிப்பார்களாக!
|
9. அவ்விரவின் விடியற்கால விண்மீன்கள் இருண்டொழிக! ஒளியைக் காண ஏங்கினாலும், காணாது போகக்கடவது! வைகறையின் கண்விழிப்பையும் காணாதொழிக!
|
10. ஏனெனில் என் தாய் வயிற்றின் கதவுகளை அவ்விரவு அடைக்கவில்லை; என் கண்கள் காணும் தீமையை மறைக்கவுமில்லை.
|
11. பிறக்கும் போதே நான் ஏன் சாகாமற் போனேன்? கருப்பையினின்று வெளிப்பட்ட உடனேயே நான் அழிந்து போயிருக்கக் கூடாதா!
|
15. பொன்னைத் தேடிச் சேர்த்துத் தங்கள் வீடுகளை வெள்ளியால் நிரப்பிய தலைவர்களோடும் இளைப்பாறியிருப்பேன்.
|
16. அல்லது வெளிப்படாத முதிராப் பிண்டம் போலும், ஒருபோதும் ஒளியைக் காணாக் குழந்தைகள் போலும் இருந்திருப்பேனே!
|
18. சிறைப்பட்டோர் ஆங்கே வருத்தமின்றிக் கூடியிருப்பர், சிறையதிகாரிகளின் குரல் அவர்களுக்குக் கேட்பதில்லை.
|
23. கடவுள் ஒருவனை எப்பக்கமும் வளைத்து அடைத்து விட, அவனுக்கு வழி மறைந்திருக்கும் போது அவனுக்கு எதற்காக ஒளி தரவேண்டும்?
|