4. மேசையையும் கொண்டு வந்து அதன் மீது கட்டளையிடப்பட்டவற்றை முறைப்படி வைத்து, குத்துவிளக்கையும் அதன் அகல்களையும் ஏற்றி,
|
5. பொன் தூபப் பீடத்தைச் சாட்சியப் பெட்டகத்திற்கு முன் நிறுத்திவைப்பாய். கூடார வாயிலிலே திரையையும் தொங்க விடுவாய்.
|
9. பின் அபிசேகத் தைலத்தை எடுத்துப் பூசிக் கூடாரத்தையும் அதன் பாத்திரங்களையும் பரிசுத்தப்படுத்துவாய்.
|
11. தொட்டியையும் அதன் பாதத்தையும், அவைகளெல்லாம் மிகவும் பரிசுத்தமான பொருட்களாகும்படி அபிசேகத் தைலத்தால் பூசுவாய்.
|
12. அதன்பின் ஆரோனையும் அவன் புதல்வர்களையும் உடன்படிக்கைக் கூடார வாயிலுக்கு அழைத்து அவர்களைத் தண்ணீரிலே குளிப்பாட்டி
|
15. (13) அவர்கள் நமக்கு ஊழியம் செய்யும் படிக்கும், அவர்களின் ( அபிசேகப் ) பூசுதல் நித்திய குருத்துவத்திற்குச் செல்லும்படிக்கும், அவர்களுக்குத் திருவுடைகளை அணிவிப்பாய் என்றருளினார்.
|
18. (16) மோயீசனே அதை நிறுவினார். பலகைகளையும் பாதங்களையும் தண்டுகளையும் வைத்துத் தூண்களையும் நிறுத்தி,
|
19. (17) ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி கூடாரத்தின் மீது திரையையும் விரித்து, அதன் மேலே மூடியையும் பரப்பினார்.
|
20. (18) சாட்சியப் ( பலகைகளைப் ) பெட்டகத்தினுள் வைத்து, அதன் கீழே தண்டுகளையும், அதன் மேலே இரக்கத்தின் அரியணையையும் அமைத்தார்.
|
21. (19) பெட்டகத்தைக் கூடாரத்தினுள்ளே கொண்டுவந்த பின், ஆண்டவருடைய கட்டளையை நிறைவேற்றும்படி, அதன்முன் திரையைக் கட்டித் தொங்கவிட்டார்.
|
23. (21) ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, காணிக்கை அப்பங்களையும் ( அவர் முன்னிலையில் ) ஒழுங்காய் வைத்தார்.
|
29. (27) அன்றியும், ஆண்டவர் கட்டளையிட்டபடி, சாட்சிய மண்டபத்திலே தகனப் பலிப்பீடத்தை நிறுவி, அதன்மேல் தகனப் பலியையும் மற்றப் பலிகளையும் செலுத்தினார்.
|
30. (28) பின் சாட்சியக் கூடாரத்துக்கும் ( அந்தப் பீடத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, அதிலே நிறையத் தண்ணீர் வார்த்தார்.
|
32. (30) அவர்கள் கூடாரத்துக்குள்ளே புகும்போதும், பலிப்பீடத்தண்டை வரும் போதும், ( அவ்வாறே, கழுவிக் கொள்ள வேண்டுமென்று ) ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தார்.
|
33. (31) பின் ( மோயீசன் ) உடன்படிக்கைக் கூடாரத்தையும் பீடத்தையும் சுற்றிப் பிராகாரத்தை நிறுத்தி, அதன் வாயிலிலே தொங்கு திரையைத் தொங்க விட்டார்.
|
34. (32) இவையெல்லாம் முடிந்த போது ஒரு மேகம் சாட்சியக் கூடாரத்தை மூடினதுமன்றி, ஆண்டவருடைய மாட்சியும் அதனை நிரப்பிற்று.
|
35. (33) மேகம் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு ஆண்டவருடைய மாட்சி மின்னி எரிந்ததினாலே, மோயீசன், உடன்படிக்கைக் கூடாரத்திற்குள்ளே நுழைய இயலாதிருந்தார். ஏனென்றால், அம்மேகம் எல்லாவற்றையும் மூடிக்கொண்டிருந்தது.
|
37. (35) மேகம் எழும்பாமல் மேலே தங்கியிருக்கும் போதோ, அவர்கள் பயணம் செய்யாமல் அவ்விடத்திலேயே இருப்பார்கள்.
|
38. (36) ஏனென்றால், இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் தங்கள் இல்லிடங்களிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க, பகலிலே ஆண்டவருடைய மேகமும் இரவிலே நெருப்புச் சுடரும் உடன்படிக்கைக் கூடாரத்தின் மேல் தங்கியிருந்தன.
|